வாரம் ஒரு கவிதை….” ஜன்னல் நிலா ” !!!

 

My Tamil Kavithai in Dinamani Kavithaimani  on 24th oct 2016
 

வாரம் ஒரு கவிதை … “மனம் என்னும் மாயப் பேய் !!!”

 

மனம் என்னும் மாயப் பேய் !!!
……………………
மனம் ஒரு குரங்குதான் …இல்லை என்று சொல்லவில்லை  நான் !
இங்கும்  அங்கும் அலையும் மனக் குரங்கை அடக்கி வைக்கும் ஒரு
குரங்காட்டியாக  நீ இருக்கலாம்… தவறில்லை !
மனக் குரங்கு தறி கெட்டு நெறி தவறி அடங்கா குரங்காட்டம்
போடும் நேரம் உன் மனமே ஒரு பேயாக மாறும் ,உன்னை தன்
மாய வலையில்  சிக்கவைத்து ..! உன்னையும்  மாற்றும்
அந்த மாயப் பேய்  தன் கூட்டத்தின்  ஒரு அங்கமாக !
சிக்கவும்   வேண்டாம் அந்த  மாய வலையில் …மாயாவியாக
நீ மாறவும் வேண்டாம் !…  ஒரு நல்ல குரங்காட்டியாக மட்டும்
நீ இருந்தால்!   உன் மனக் குரங்கும்  ஒரு குரங்காக மட்டுமே
அலையும்  என்றைக்கும்…  நீ போடும் “கோட்டை”  தாண்டாமல் !
நல்லன ஏற்று  அல்லன ஒதுக்கி உன் மன சிற்பம்  நீ செதுக்கினால்
அல்லல் என்றும் இல்லை உனக்கு  தம்பி !  உன்
மனம் என்றும் நல்ல மனமாக மணக்கும் …உன் வாழ்வும் இனிக்கும் !
இந்த ஊரும்  நாடும் உன்னைப்  போற்றி  வணங்கும் !
Natarajan
http://www.dinamani.com  on 17th oct 2016

வாரம் ஒரு கவிதை …” எழுத்து “…!

 

எழுத்து
……….
எண்ணங்களின் பிரதி பலிப்பே
ஒருவன்  எழுதும் கவிதையும்  , கதையும் !
உறங்கும் மக்களையும்  நாட்டையும் உலுக்கி
அவர்தம்  உரிமைக்கு குரல் கொடுக்க வைப்பதும்
அந்த  எழுத்தின் சக்தியே !
ஒருவன் தலை எழுத்தை மாற்றும் சக்தியும் உண்டு
அந்த எண்ணுக்கும் எழுத்துக்கும் !
ஒரு கையெழுத்தின் மதிப்பைக் கூட்டுவதும்
அதே எண் , எழுத்தின் சக்திதான் !
எழுத்தாணி காலம் முதல் இன்றைய மின்னஞ்சல்
யுகம் வரை எண்ணும்  எழுத்தும், இமையும்
விழியுமே  ஒரு  மனிதனுக்கு !
Natarajan  in http://www.dinamani.com dated 3rd Oct 2016
Natarajan

ஏரி காத்த அருண்…….!!!

e_1475133384

சென்னை மாம்பலம்வாசிகளுக்கு மேட்லி சாலை சப்வேவை ஒட்டி இருக்கும் கோதண்டராமர் கோயில் குளம் வெகு பிரபலம். அதன் புகழுக்கு தன் அசுத்தமும் ஒரு காரணம். இப்போதுபோய் பாருங்கள். குப்பைகளும் கழிவுகளும் நீக்கப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டு, திடீரென்று புதுப்பொலிவோடு புனிதமும் காக்கப்பட்டுள்ளது. இந்த அசத்தல் மாற்றத்துக்கு அசல் காரணம், 26 வயதான அருண் கிருஷ்ணமூர்த்தி. கூகுள் நிறுவன வேலையை விட்டுவிட்டு ஏரி, குளங்களைக் காப்பதில் ஒன்பது வருடங்களாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார் அருண். இதற்கெனவே ‘என்விரான்மென்டலிஸ்ட் பௌண்டேஷன் அஃப் இந்தியா’ என்ற அமைப்பை நிறுவியுள்ளார். அவரிடம் பேசினோம்:

மொத்தம் எத்தனை ஏரி, குளங்களை மீட்டிருப்பீர்கள்?
சென்னை, கோவை, ஹைதராபாத், தில்லி, புதுச்சேரி ஆகிய ஊர்களில் மொத்தம் 39 ஏரிகளையும் 41 குளங்களையும் சுத்தப்படுத்தி இருக்கோம். இதை நான் மட்டுமே செய்யலை. என்னோட கிட்டத்தட்ட 900 வாலண்டியர்கள் இருக்காங்க. அவங்கதான் எல்லாத்தையும் செய்யறாங்க…

எப்படி இதையெல்லாம் ஆரம்பிச்சீங்க?
சின்ன வயசிலேர்ந்தே பறவைகள் மீது ஆர்வம் அதிகம். ஆந்திரா பூர்வீகம். ஆனால், சென்னை முடிச்சூரில்தான் வளர்ந்தேன். கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் அழகைப் பார்த்து வளர்ந்தவன். இதற்குக் கீழ்க்கட்டளை ஏரி தான் நீராதாரம். ஏரி நிறைந்து வழியும்போது ஏகப்பட்ட பறவைகளும் மீன்களும் ஆமைகளும் கண்ணில் படும். சின்ன வயதில் பார்த்த காட்சிகள் தற்போது இல்லை. ஏரி இருந்த இடத்தில் குப்பைகள் மண்டிக் கிடக்கின்றன.
இதைச் சுத்தப்படுத்தி மீண்டும் எழில் கொஞ்சும் ஏரியாகப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இயற்கை ஆர்வம் என்னும் முளைவிட்டது. ஹைதராபாத்துல கூகுள் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தப்பவே ஒரு ஏரியைத் தூர்வாரினோம். அப்புறம் அதையே ஏன் எல்லா இடங்களிலேயும் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. வேலையை விட்டுட்டு நண்பர்களின் உதவியோடு இதைச் செய்யறேன்.

எப்படி திட்டமிடறீங்க?
ரொம்ப மோசமா இருக்கற ஏரி, குளங்களையோ, ஆக்கிரமிப்பு, கேஸுன்னு இருக்கக்கூடிய இடங்களையோ தொடறதில்லை. தூர்வாரி கிளீன் செஞ்சா காப்பாத்த முடியும்னு தோணக்கூடிய ஏரி, குளங்களை எடுத்துக்கறோம். அதுவும் அந்த நீர்நிலைகளைச் சுத்தி இருக்கிற மக்களே எங்ககிட்ட கேட்டாங்கன்னா உடனடியா எடுத்துக்கறோம்.
முதல்ல நேரா போய்ப் பார்த்துட்டு, என்னவிமான வேலைகள் செய்யணும்னு அசெஸ் பண்ணுவோம். அப்புறம், எங்களோட ஃபேஸ்புக் பேஜ்ல, வெப்சைட்டுல, மொபைல் ஆப்கள்ல புதன்கிழமை தோறும் விவரங்களைப் போட்டுடுவோம். யார் யாரெல்லாம் ஆர்வமாக இருப்பாங்களோ, அவங்க எல்லாரும் அந்தந்த ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க.

வாலண்டியர்களுக்கு என்ன வசதி செய்து தர்றீங்க?
ஒண்ணுமே இல்ல. விருப்பப்படறவங்க தங்களோட சொந்தச் செலவுல நேரே ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க. அவங்களுக்கு முகத்துல போட்டுக்கிற மாஸ்க், கிளவுஸ், சுத்தப்படுத்தத் தேவையான கருவிகள்தான் நாங்க கொடுக்கறோம். உள்ளூர் அதிகாரிகள் கிட்ட சொல்லி, சுத்தப்படுத்தத் தேவையான பர்மிஷனை வாங்கறது மட்டும்தான் எங்க பொறுப்பு.
காலையில் ஏழு மணியிலேருந்து பதினோரு மணி வரை வேலை, பப்ளிசிட்டி இல்லை, சின்சியரா, கௌரவம் பார்க்காமல், சுத்தமான சேவை மனப்பான்மையோட வர்றவங்க மட்டும்தான் இங்கே இருக்காங்க.

யாரெல்லாம் ஆர்வம் காட்டறாங்க?
நிறைய பேருக்கு இதுபோன்ற வேலைகளில் ஈடுபடணும்கற ஆசை இருக்கு. ஸ்கூல், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வராங்க; காக்னிஸண்ட், போர்டு நிறுவன ஊழியர்கள் வராங்க, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வராங்க, நம்ம ஊர், நம்ம தண்ணீர், நாமதான் இதைக் காப்பாத்தணுங்கற உத்வேகத்தோட வருவாங்க. பல பேர், வெளியூர்லேருந்தெல்லாம் கூட வந்து வேலை செய்வாங்க. அவங்களுக்குள்ள அப்படியொரு நட்பும் பந்தமும் ஏற்பட்டுப் போச்சு. ஒவ்வொரு ஸ்பாட்லேயும் சுமார் நாற்பது முதல் ஐம்பது பேர் கூடிடுவாங்க.

வெளியூர், வெளி மாநிலங்கள்ளேயும் வேலை செய்றீங்களா?
ஆமாம், முதல்ல, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒரே ஒரு ஏரி அல்லது குளத்தை கிளீன் செய்யற வேலையைப் பார்ப்போம். படிப்படியா, இப்போ ஒவ்வொரு ஊர்லேருந்தும் ஆர்வலர்கள் வந்து எங்களோட இணைஞ்சுக்கிட்டாங்க. இப்ப ஞாயிறு மட்டுமல்லாமல் சனிக்கிழமையும் வேலை செய்யறோம். ஒரு ஊர்ல மட்டுமல்ல, ஒரே சமயத்துல பல ஊர்கள்ல வேலை செய்யறோம். இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கறதே எனக்கு முக்கிய வேலை.

அரசு ரீதியான உதவிகள் கிடைக்குதா?
தாராளமா, இதோ இந்த மாம்பலம் குளத்துல ஏராளமான ஆகாயத் தாமரைச் செடிகள். சென்னை மாநகராட்சிதான் லாரிகள் கொடுத்தாங்க, அவங்க தான் எடுத்துக்கிட்டுப் போனால்க. அதேபோல் பல ஊர்கள்ல பஞ்சாயத்துப் போர்டுகள் உதவியிருக்கு. தலைவர்கள் உதவியிருக்காங்க.

கிளீன் பண்ணிட்டு வந்துட்டா மட்டும் போதுமா?
போதாது. அதனாலதான், உள்ளூர் மக்களுடைய உதவியை நாடறோம். அவங்கதான் தொடர்ந்து குப்பை போடாமலும், அசுத்தங்கள் சேராமலும் பார்த்துக்கணும். அதுக்கு என்ன செய்யணும்ங்கறதையும் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கறோம்.

அடுத்தடுத்த திட்டங்கள்?
ஏற்கெனவே இருக்கிற நகரங்களோடு புதிய ஊர்களிலேயும் ஏரி, குளங்களைச் சுத்தப்படுத்த மக்கள் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. தஞ்சாவூர், வல்லம், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாயச் சங்கங்கள் எங்களைக் கூப்பிட்டு இருக்காங்க. அவங்க ஒத்துழைப்போட அங்கே இரக்கிற நீர்நிலைகளைக் காப்பாத்தணும். திருவனந்தபுரம், குறிஞ்சிப்பாடியிலேர்ந்தும் அழைப்பு வந்திருக்கு.

பிரச்னைகளைச் சந்திச்சதில்லையா?
அப்படிச் சொல்லமாட்டேன். அதையெல்லாம் தடைகளா நினைக்கிறதில்ல. பாடங்களா எடுத்துக்கறேன். சமூகத்திலிருந்துதான் மாற்றங்கள் ஏற்படணும். அதுவும் நீர்நிலைகளை அசுத்தப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டியது நம்மோட பொறுப்பு பல பள்ளிகள், கல்லூரிகளுக்கப் போய் இதைப் பற்றிப் பேசறேன். தொண்டர்களின் பலம் கூடக்கூட, இன்னும் பல ஏரிகளையும் குளங்களையும் காப்பாற்ற முடியுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு

ஆர். வெங்கடேஷ்  in http://www.dinamalar.com  based  on  an input from Kalki 

Natarajan

 

வாரம் ஒரு கவிதை…” நீதியைத் தேடி …”

 

நீதியைத்  தேடி …
…………..
அன்றைய அரசன்  சொன்னது நீதி ..செய்தது நீதி !.அவன் நடந்து காட்டிய வழியும்
நீதி வழியே !  …அரசனும் அவனே …நீதிமானும் அவனே !
நீதி தேடி அவன் மக்கள் வேறு எங்கும் சென்றது இல்லை
மன்னன் அவன் தீர்ப்புக்கு   மறு  கேள்வி இல்லை !
இன்று அரசே நீதி தேடி ,ஓடி , அலையும் அவலம்  …ஒரு நதி நீருக்காக !
ஒரு  அரசுக்கே கதி இது என்றால் , எனக்கும் உனக்கும்
விடிவு காலம் எப்போது ? தேசிய  நதி நீர் பங்கீட்டு விதி என்று ஒன்று உதித்து
அதை அரசும் மக்களும் மதிக்கும்  அந்த நாள் எந்த  நாள் ?
Natarajan
http://www.dinamani.com  dated 26th sep 2016

வாரம் ஒரு கவிதை…” தண்ணீருக்கு இரத்தம் ” …

 

தண்ணீருக்கு  இரத்தம் ….
………………..
என் நதி ஓட்டம் ! … இந்த மண்ணுக்கே  உயிர் ஓட்டம் ! …என்
நீர்  இந்த மண்ணுக்கும்  மண்ணில் உள்ள எல்லா உயிருக்கும்
சொந்தம் ! இந்த பால பாடம் தெரியாதா உனக்கு ?
நீர் இது “எனக்கு”  மட்டும் சொந்தம் என்று உரிமைக்குரல்
எழுப்பும் உனக்கு ஒரு  நதி மூலம் என்னவென்று தெரியுமா ?
இந்த மண்ணுக்கும் மண்ணில் உள்ள நீருக்கும் சொந்தம்
கொண்டாடும் நீ … விண்ணுக்கும்,  விண்ணில் உள்ள
நிலவுக்கும்,  பகலவனுக்கும் ,மழை மேகத்துக்கும்  தனி உரிமை
கோர முடியுமா சொல்லு ?
விதி விலக்கு எதுவும் இல்லை நதி எனக்கு இந்த மண்ணில்
என் வழி நான்  செல்ல !  நான் ஒரு விலை கேட்டேனா உன்னை
நான் கொடுக்கும் நீருக்கு ?  பதில் சொல்லு நீ! …வைத்து
விட்டாயே நீ  என் நீருக்கு ஒரு விலை …தண்ணீருக்கு
விலை  செந்நீரா ?… எல்லையே இல்லையா உன் மமதைக்கு ?
அன்று உன் முன்னோர் சிந்திய ரத்தத்தால் நீ சுவாசிப்பது இன்று சுதந்திர
காற்றை !..மறந்து விடாதே அதை ! இன்று தண்ணீருக்கு  நீ சிந்த வைக்கும் இரத்தம்
உன் சந்ததியர் , சகோதரர் , நல்லிணக்க நல் வாழ்வைக் குலைத்து தொலைத்திட
நீ போட்டிருக்கும் ஒரு சிவப்புக் கோடு !.. விவரம் அறியா பிஞ்சு நெஞ்சில்  நீ விதைத்து
விட்டிருக்கும் ஒரு நஞ்சு வித்து ! …நீ  போட்ட சிவப்புக் கோட்டை அழித்து விடு நீயே !
பிஞ்சு நெஞ்சில் நீ விதைத்திருக்கும் வித்தையும் களை எடுத்து நசுக்கி விடு நீயே..அந்த
வித்து ஒரு நச்சு மரமாக வளரும் முன்னே !
இதை நீ கட்டாயம் செய்ய வேண்டும் மனிதா …  நதி என் கண்ணீர்
செந்நீராக  உருமாறும்  முன்னே !
Natarajan
20th sep 2016

மரச்செக்கரைத்து எண்ணெய் எடுக்கும் பட்டதாரிகள்….

e_1474005951

நம் முந்தைய தலைமுறை வரை, மரச்செக்கில் அரைத்து எடுத்த எண்ணெயால் சமைத்த உணவுகளை உண்டு, ஆரோக்கியமாக இருந்தனர். ஆனால், இன்றோ, எண்ணெய் என்று எழுதியதை படித்தாலே, ஏகப்பட்ட நோய்க்கு ஆளாகி விடுகிறோம்.
‘சுத்திகரிக்கப்பட்டது’ என்ற பெயருடன் வரும் எண்ணைகள் எல்லாம், உண்மையில், மனித ஆயுளை குறைக்கும் அல்லது குலைக்கும் எண்ணெய்களே!
இதனாலேயே, ‘செக்கு எண்ணெய் உபயோகியுங்கள்…’ என்று பொத்தாம் பொதுவாக சொல்லி வருகின்றனர். செக்கு எண்ணெய்க்கும், மரச்செக்கு எண்ணெய்க்கும் பெரிய வித்தியாசம் உண்டு.
இரும்புச்செக்கில், 350 டிகிரி வெப்பத்தில் அரைத்து, தானியத்திலுள்ள உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலை செய்து, ஒரு மோசமான திரவமாக பிழிந்து எடுப்பதை தான், செக்கு எண்ணெய் என்று கூறி, விற்கின்றனர், பலர். இது, நம் உடல் நலத்திற்கு உதவாது.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும் போது, அதிகபட்சம், 35 டிகிரி வெப்பம் மட்டுமே இருக்கும். இதில், உயிர்ச்சத்துக்கள் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும், உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.
மரத்தாலான செக்கை பயன்படுத்தி, பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து, விற்பனை செய்கின்றனர், திருச்சியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர்.
திருச்சி, தாராநல்லூர், எஸ்.வி.ஆர்., கார்டன் பகுதியில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட சிறிய கட்டடத்தில், மரத்தினாலான செக்கு வைத்துள்ளனர், எஸ்.அகஸ்டின் ராஜா மற்றும் எஸ்.ஜான்பால் ராஜிவ்.
பட்டதாரிகளான இவர்கள், சமையல் எண்ணெய் கலப்படம் தொடர்பான செய்திகளை படித்து, ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்காத சமையல் எண்ணெயை நாமே உற்பத்தி செய்வோம் என, முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து, சிறிய கட்டடத்தில் மரச்செக்கு அமைத்து, எள், தேங்காய் மற்றும் கடலையை செக்கில் தனித் தனியே ஆட்டிப் பிழிந்து, எண்ணெய் எடுத்து, வியாபாரம் செய்து வருகின்றனர்.
சந்தையில் விற்பனையாகும், பிற சமையல் எண்ணெய்களின் விலையை விட, இதன் விலை கூடுதலாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து அகஸ்டின் ராஜா கூறுகையில், ‘நம் முன்னோர் செக்கில் பிழிந்தெடுக்கும் எண்ணெயை, அப்படியே பயன்படுத்தினர். உடற்பயிற்சி முடிந்ததும், ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் கடைப்பிடித்தனர். உணவுக்கு மட்டுமின்றி, குளியலுக்கும், மசாஜ் செய்யவும் நல்லெண்ணெய் பயன்படுத்தியதால், மூட்டுவலி பிரச்னையின்றி வாழ்ந்தனர். அதனாலேயே, எள் எண்ணெய் என்பதற்கு பதிலாக, நல்ல எண்ணெய் என்று குறிப்பிட்டனர்.
‘அதனால் தான், நாங்களும் பாரம்பரியத்தை காக்கும் வகையில், மரத்தாலான செக்கு அமைக்க முடிவு செய்தோம். வேம்பு மரத்தில் உலக்கையும், வாகை மரத்தில் உரலும் கொண்ட செக்கு அமைத்து, மின்மோட்டார் உதவியுடன், செக்கை இயக்குகிறோம்.
‘முதலீட்டுக்கு ஏற்ப, சொற்ப லாபத்தில், விற்பனை செய்கிறோம். இயந்திரத்தில் எண்ணெய் பிழியும் போது, அது மூலப்பொருளை நன்றாகப் பிழிந்து விடுவதால், அதில் கிடைக்கும் புண்ணாக்கில், உயிர்ச் சத்துகள் மிஞ்சாது. ஆனால், மரச்செக்கில், மெதுவாக எண்ணெய் பிழிவதால், 80 சதவீதம் மட்டுமே எண்ணெய் கிடைக்கிறது. இதனால், பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். மேலும், அதில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் அதிகமிருக்கும். இதில் கிடைக்கும் புண்ணாக்கிலும், உயிர்ச்சத்துகள் எஞ்சியுள்ளதால், அதை உண்ணும் கால்நடைகளுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
‘மரத்தாலான செக்கை பயன்படுத்தி, எண்ணெய் ஆட்டும் முறை குறித்து, இலவசமாக கற்றுத் தருகிறோம்…’ என்றார்.
சகோதரர்கள் இருவரின் உடலிருந்தும் வழிவது வியர்வையா, எண்ணெயா என்று தெரியாத அளவிற்கு, கடுமையாக உழைக்கும் இவர்களது உழைப்பிற்கு பின் இருக்கும் லட்சியமும், சமூக அக்கறையும், இவர்களை நிச்சயம் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்!
இவர்களை வாழ்த்த நினைத்தால், தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 96777 90080.

Source….
எல்.முருகராஜ்  in http://www.dinamalar.com

natarajan

இசைகுயிலுக்கு ஓர் நினைவாஞ்சலி!

m

அனுதினம்  பாரதத்தை  தனது  சுப்ரபாதத்தால் துயிலெழுப்பும் இசைக் குயில் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் நூறாவது பிறந்த நாள் இன்று.

தமிழிசை,  பட்டிமன்றம்,  சொற்பொழிவு,  ஆன்மிக  இலக்கியம்  என்று பல்துறையில் முத்திரை பதித்திருக்கும்  முனைவர்  பேராசிரியை சரஸ்வதி ராமநாதன், “அம்மா’ என்று அவர் அழைக்கும்  இசை அரசி எம்.எஸ் முன்னிலையில் தமிழிசைப்  பாடல்கள் பாடி எம்.எஸ் அம்மாவின் பாராட்டுப் பெற்றவர்.  செட்டிநாட்டு வட்டாரங்களில்  கச்சேரி  செய்ய எம்.எஸ் வரும் போதெல்லாம்  முன் வரிசையில் இடம் பிடித்து, எம். எஸ். அவர்கள் பாடி, கேட்டு, அவரையே படித்து வளர்ந்தவர். சென்னை கம்பன் கழகத்தின் “கம்பன் அடிப்பொடி’ விருதினை   சரஸ்வதி  ராமநாதனுக்கு   வழங்க  பரிந்துரைத்ததே எம்.எஸ். அம்மாதான்  என்கிறார் முனைவர்  சரஸ்வதி ராமநாதன்.

எம். எஸ்  அம்மா  குறித்த  தகவல்களை  அவர்  பகிர்ந்து கொண்டதிலிருந்து;

“மதுரை  சண்முகவடிவு சுப்புலட்சுமி தான் எம். எஸ். சுப்புலட்சுமி  என்றாகியது.  அவரது அம்மா  சண்முகவடிவு  நன்றாக வீணை வாசிப்பார். ஒரு முறை  மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணை கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சண்முகவடிவு என்ன நினைத்தாரோ  வீணை வாசிப்பதை  நிறுத்திவிட்டு, “அம்மா  குஞ்சம்மா  இங்கே வா…” என்று மகள் சுப்புலட்சுமியை அழைத்தார். வெளியே  சுப்புலட்சுமி என்றாலும், வீட்டில் குஞ்சம்மாள் என்றுதான் அவரை அழைப்பார்கள்.  பத்து வயது சிறுமியான குஞ்சம்மாள் அம்மா மேடைக்கு அழைத்ததும் “குடு குடு’ என்று  மேடை ஏறி நிற்க.. “சபைக்கு நமஸ்காரம் செய்திட்டுப் பாடு” என்று சண்முகவடிவு சொல்ல… மேடைப் பயம்,  சபைக் கூச்சம் ஏதும் இன்றி இந்துஸ்தானி ராகத்தில் “ஆனந்த ஜா…’  என்ற மராட்டியப் பாடலை  அருமையாகப்  பாட….  கச்சேரிக்கு வந்திருந்த அனைவரும் கை  தட்டி ரசித்தார்கள்.  இதுதான் எம்.எஸ் அம்மாவின் முதல் மேடை  அனுபவம்.

இன்னொரு  தருணத்தில்,  சண்முகவடிவு  மகள் எம்.எஸ்ஸுடன்  சென்னை சென்றிருந்தார். சண்முகவடிவு  வீணை  மீட்ட அதைப் பதிவு செய்து இசைத்தட்டாக  வெளியிட, ’டுவின்’  இசை நிறுவனம்  சென்னைக்கு அழைத்திருந்தது.  அங்கேயும்  அம்மா கேட்டுக் கொண்டதன் பேரில்  எம். எஸ். பாட…  இசை நிறுவனத்தார்  இப்படி  ஓர்  இனிமையான குரலா.. என்று ஸ்தம்பித்து நின்றனர்.  இசைப் பொக்கிஷத்தை   அடையாளம் கண்டு கொண்டு அதை அங்கீகரிக்கும் விதமாக,  உடனே,  “மரகதவடிவும் செங்கதிர்வேலும், விதிபோலும் இந்த…’  என்னும் இரண்டு பாடல்களை  எம். எஸ்ஸை  பாடச் சொல்லி  இசைத்தட்டாக  வெளியிட்ட பின்னர்தான் வேறு வேலை பார்த்தனர். இசைத்தட்டு  ஸ்டிக்கரில், பாடியிருப்பது  “மிஸ். சுப்புலட்சுமி, வயது பத்து’ என்று அச்சிட்டிருந்தனர்.

எம்.எஸ் அம்மாவின்  அதிகாரப்பூர்வ மேடைக் கச்சேரி  1935 -ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது அவருக்கு வயது பத்தொன்பது. மிருதங்க ஜாம்பவான் புதுக்கோட்டை  தட்க்ஷிணாமூர்த்தி பிள்ளையின் மணிவிழாவின் போது அம்மாவின் சங்கீதக் கச்சேரி அற்புதமாக  அரங்கேறியது.  அன்றைய மைசூர் சமஸ்தானத்தின்  அரச  சபையில்  திருக்கோகர்ணம்  ரங்கநாயகி  அம்மாள் மிருதங்கம் வாசிக்க  எம்.எஸ். பாட… தென்னகம் முழுவதையும்  அவரின் குயில் குரல் இனிமை, தென்றலாகத்  தழுவி சிலிர்க்க  வைத்தது.

தெய்வீக அழகும்,  சுருண்ட முடியும்,  பாடும் போது  பாவங்களை  முகத்தில் நர்த்தனம்  ஆடவிடும்  திறமையை  அம்மாவிடம் கண்ட  திரைப்பட இயக்குநர் கே. சுப்ரமணியம் அம்மாவை  தனது சொந்தப் படமான  “சேவாசதனம்’ படத்தில் கதாநாயகியாக்கினார். 1936-இல் அம்மாவின்  திரையுலகப் பிரவேசம்  நடந்தது. அப்போது  பாடல்கள்  சிறப்பாக அமைந்தால் படம் வெற்றி பெறும் என்ற நிலைமை.   “சேவாசதனம்’ பாடல்கள் பிரமாதமாக அமைந்திருந்ததால் படம்அமோக வெற்றி பெற்றது. “சேவாசதனம்’  படத்தில் எம்.எஸ். பாடிய “மா ரமணன்,  உமா ரமணன்’,  “சியாம சுந்தர கமலவதன’, “ஆதரவற்றவர்க்கெல்லாம்’ போன்ற  பாடல்களைப்  பாடாத,   முணுமுணுக்காத  ஆண் பெண்  அன்று தமிழகத்தில் இல்லை.  அந்த அளவுக்கு  அந்தப் பாடல்கள் ஹிட்டாகியிருந்தன. இந்தப் படம் மூலமாக  அறிமுகமான  தேச விடுதலை தியாகி டி.சதாசிவம் அவர்களை  எம். எஸ். அம்மா 1940 -இல்  திருமணம் செய்து கொண்டார்.

“சகுந்தலை’ படத்தைத் தயாரித்த  ராயல் டாக்கீஸ்  நிறுவனத்தினர் எம்.எஸ்ஸை தங்களது புதிய தயாரிப்பான  “சாவித்திரி’  பட  நாயகியாக  நடிக்க வைக்க விரும்பினர்.  திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று  எம். எஸ் வந்த வாய்ப்பை ஏற்க   மறுத்துவிட்டார்.  சில நாட்கள்  கழித்து, கல்கி  இதழைத் தொடங்குவதற்கு முதலீடு தேவைப்பட்டதால், “சாவித்திரி’ படத்தில் நடிக்கிறேன் என்று தகவல் அனுப்பினார்.

“நீங்கள்  நாயகியாக நடிக்க சம்மதிக்காததால் மராத்தி நடிகை  சாந்தா ஆப்தேயை  நாயகியாக  போட்டுவிட்டோம்.  நாரதர் வேடத்திற்கு  யாரையும் தேர்வு செய்யவில்லை.  படத்தில் நாரதருக்குத்தான் அதிக பாடல் காட்சிகள். நீங்கள்தான்  நாரதராக நடிக்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டார்.  கணவர் சதாசிவம்  “ம்ம்.. தாராளமாக நடி” என்று உற்சாகப்படுத்தினார்.  எம். எஸ்ஸும்  உடனே  சம்மதித்தார். இந்த செய்தி வெளியே தெரிந்ததும்,  பட வெளியீட்டாளர்கள்  படத்தை வெளியிடும் உரிமையைப் பெற  தயாரிப்பாளரை மொய்த்து  விட்டார்கள்.  பட உரிமையும் நல்ல விலைக்கு விற்பனையானது.

எம்.எஸ்ஸுக்கு  சம்பளமாக கிடைத்த நாற்பதாயிரத்தை  அப்படியே கல்கி இதழ் தொடங்க  தந்துவிட்டார்.

1946-ஆம் ஆண்டு  எம். எஸ் நடித்து  வெளியான “மீரா’ திரைப்படம் தமிழகத்தைக் கொள்ளைக் கொண்டது. கல்கி  எழுதிய “காற்றினிலே வரும் கீதம்’, “கிரிதர கோபாலா’ போன்ற  பாடல்கள்  தமிழக மக்களின்  செவிகளில் தேனைச் சொரிந்தன.  அந்த கானங்களின்  இனிமையில் தமிழகம் மயங்கிப் போனது. தமிழில்  வெற்றி கண்ட  “மீரா’  ஹிந்தியிலும்  “மீரா’வாகவே  தயாராகி  அகில இந்திய சாதனைப்  படமானது. பிரதமர் ஜவஹர்லால் நேரு, எம். எஸ். அவர்களை ’இசை அரசி’ என்று அழைக்க வைத்தது மட்டுமல்லாமல், இந்த இசை அரசிக்கு முன் நான் வெறும் பிரதமர் மட்டுமே.. என்று  நெகிழ்ந்து பாராட்டி, எம். எஸ். அவர்களின் குடும்ப நண்பர் ஆனார் நேரு.

சபர்மதி ஆசிரமத்தில் அண்ணலின் முன்னிலையில்  அம்மா  பல முறை பாடியுள்ளார்.  நாடு விடுதலையான 1947- ஆம் ஆண்டு  வந்த  காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 -இல் எம். எஸ். பாட வேண்டும்  என்று காந்தி விரும்ப.. தான் பாடிய பாடலை  ஒலி நாடாவில்  பதிவு செய்து அம்மா அனுப்பி வைத்தார். பிரபல  காந்தி அஞ்சலி பாடல்களான  எம். எஸ். பாடிய   “வைஷ்ணவ ஜனதோ’, “ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல்கள்  அண்ணல் காந்தியை வென்ற பாடல்கள். காந்தியின்  மறைவிற்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் பாடல்களாகிவிட்டன.

Source…By – பிஸ்மி பரிணாமன்  in http://www.dinamani.com

Natarajan

 

Paralympics Gold Medallist Mariyappan Thangavelu’s Story Is A Lesson In Grit…

http-%2f%2fo-aolcdn-com%2fhss%2fstorage%2fmidas%2ff79efe9e062cbc45337168c7ca47d3b6%2f204309037%2f601342684

 

In May this year, Mariyappan Thangavelu said during an interview, “It’s not beyond me.” India’s rising star in para-athletics had just cleared a distance of 1.78m in the men’s high jump T42 event at the IPC Grand Prix in Tunisia. So what was not beyond him? A gold at the Paralympics, he said.

Three months later Thangavelu has showed the country what walking the talk is supposed to look like.

Not only is he the first athlete to bag a gold in this year’s Paralympics, he is also the first Indian high jumper to win a gold in the history of Paralympics.

According to NDTV, ‘T-42 is a disability sport classification for differently-abled track and field athletes with single ‘above the knee’ amputations or a disability that is comparable’.

Born in a small village of Periavadagampatti, 50km from Salem, in Tamil Nadu, Mariyappan’s brush with unpredictability of life, occurred at a tender age of five. Fifteen years ago, Mariyappan was on his way to school in his village, when he met with a terrifying accident. A bus took a wrong turn, spun out of control and hit the five-year-old, running over his right leg and crushing it in process.

Later, when he was old enough to comprehend the tragedy that had hit him, he was told that the driver of the bus was drunk. However, that information did nothing to comfort him or ease the difficult road that lay ahead of him. In an interview to The Hindu, Mariyappan said, “It doesn’t matter. My right leg is now stunted — it is still a five-year-old’s leg; it has never grown or healed.”

A report on Sportskeeda states that Mariyappan’s mother had then taken a loan of Rs 3 lakh to pay for his treatment. Years later, the vegetable vendor is still repaying the money.

The same article traces Mariyappan’s interest in sports back to his physical education teacher, who encouraged him to take up athletics and nurtured his interest in high jump. He also played volleyball.

“His coach Satyanarayana spotted him at the National Para-Athletics Championship when he was just 18. After rigorous training in Bengaluru, he became the World Number 1 in 2015, his first year of senior-level competition,” Sportskeeda reports.

His first competitive event was when he was 14 years old and participated in an athletics meet with other able-bodied students. He finished second.

“At first, my classmates didn’t believe I could do it. But once I made that first jump, they were all excited. After that day, a lot of people came to support me whenever I competed in the district,” he told The Hindu. 

Source…..www.huffingtonpost.com

Natarajan

வாரம் ஒரு கவிதை….” நெல்லுக்கு இறைத்த நீர் …” !!!

 

நெல்லுக்கிறைத்த  நீர்
…………………..
தண்ணீர் விட்டா வளர்த்தோம்  நம் சுதந்திர செடியை  ?
கண்ணீரும்  செந்நீரும் விட்டு வளர்த்த கொடி மரமல்லவா அது !
கேட்க  முடியுமா நம் முன்னோரிடம் அந்த கொடியின் விலை என்ன என்று ?
விலை மதிப்பில்லா சுதந்திரக் காற்று சுவாசிக்கும் நாம்  விலை வைத்து
விட்டோமே  குடிக்கும் நீருக்கும் , குழந்தைகள் படிக்கும் படிப்புக்கும் !
விலை இல்லா பொருள் கொடுத்து  எனக்கும், உனக்கும், எவருக்கும்
ஒரு விலை உண்டு என்று சொல்லிவிட்டதே  நம்  அரசியல்
கட்சிகள் !  விலை  மதிப்பில்லா நேர்மைக்கே ஒரு சோதனை காலம் இது !
நிலைமை கண்டு துவள வேண்டாம்  தம்பி …நீ ! சோதனை பல
கண்டாலும் சாதனை புரிய காத்திருக்கும் நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று !
எடுக்க வேண்டும் ஒரு உறுதிப்பாடு  நீ  இன்று…
“என் முன்னோர் செய்த தியாகம்  விழலுக்கு இறைத்த நீர் அல்ல …
 அது நெல்லுக்கு இறைத்த நீரே   அன்றும் ,இன்றும், என்றும் ! …என் தேசம் என்
 சுவாசம் !
 எதற்கும் விலை போகாமல் நான் காண்பேன்  ஒரு புதிய பாரதம் “
தடைக் கற்கள் யாவும் உனக்கு படிக்கற்கள் ஆகும் …புதிய
பாரதமும்  பொலிவுடன் மலரும் ஒரு வல்லரசாக …!
நாளை உனதே தம்பி ! நாளைய பாரதமும் உன்னை நம்பிதான் தம்பி  !
Natarajan