சுப்ரபாதத்தின் முதல் வரி… தந்தது யார்…?

venkada

அன்னையாய், குழந்தையாய், காதலனாய், தோழனாய் இறைவனைப் பாடி உருகிய ஆழ்வார்களும் அடியார்களும், அதன் மூலம் இறைவனை நம்மில் ஒருவனாகக் கருதி வழிபடும் நுணுக்கத்தை அழகாய்ச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில், காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரையில் நமக்கு நாம்  செய்துகொள்ளும் அன்றாடச் செயல்கள் அனைத்தையும் அவருக்கும் செய்து அழகு பார்த்து ஆனந்திப்பது ஒரு ரசானுபவம்!

இதன் அடிப்படையிலான விளைவுதான், திருப்பள்ளியெழுச்சி பாடல்களும் வழிபாடுகளும் எனலாம். ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வாரும், சைவ சமயத்தில் மாணிக்கவாசகரும் திருப்பள்ளியெழுச்சி பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். விநாயகருக்கும் முருகப் பெருமானுக்கும்கூட சுப்ரபாதம் உண்டு. அவ்வளவு ஏன்? ஜைன மதத்திலும் சுப்ரபாதம் பாடப்பட்டிருக்கிறது.
இவை அனைத்துமே விசேஷமானவை. எனினும், வேங்கடேச சுப்ரபாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இதன் முதல் வரி, விஸ்வாமித்ர முனிவரின் திருவாக்கில் உதித்தது என்பதே அது.

ராமபிரானின் பால பருவம். அயோத்தி அரண்மனைக்கு விஜயம் செய்த விஸ்வாமித்திரர், தமது யாகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் அசுரர்களை அடக்கவும் அழிக்கவும் ராமனைத் தம்முடன் அனுப்பிவைக்குமாறு தசரதனிடம் கேட்டுக் கொண்டார். தசரதரோ தயங்கினார். பின்னர், குலகுரு வசிஷ்டரின் அறிவுரைப்படி ராமனை அனுப்பச் சம்மதித்தார். கூடவே, லக்ஷ்மணனையும் அனுப்பி வைத்தார்.
விஸ்வாமித்திரர் அவர்களுக்கு பலா, அதிபலா மந்திரோபதேசம் செய்ததுடன், வழியில் அமைந்திருந்த பல புண்ணியத் தலங்களின் மகிமைகளையும், மகான்களின் சரிதைகளையும் விளக்கியவாறு அழைத்துச் சென்றார். இரவு வேளை வந்தது. காட்டில் ஓரிடத்தில் ராமனும் லட்சுமணனும் விஸ்வாமித்ர மகரிஷியுடன்  கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்கள்.

பொழுது புலர்ந்தது. அரண்மனையில் பஞ்சணையில் படுத்து உறங்க வேண்டிய அரசிளங்குமரர்கள் தரையில் படுத்திருப்பது கண்டு, நெகிழ்ந்தார் விஸ்வாமித்ர மகரிஷி. மிக்க பரிவுடன் அவர்களைத் துயிலெழுப்பினார், ‘கௌசல்யா சுப்ரஜா ராமா…’ என்று! ஆக, முதன்முதலில் திருமாலுக்குச் சுப்ரபாதம் அமைத்த பெருமையும் பாக்கியமும் அவருக்கு ஏற்பட்டது.
இந்த வரியைக் கொண்டே துவங்குகிறது, இப்போது நாம் படித்தும் கேட்டும் மகிழும் வேங்கடேச சுப்ரபாதம்.

வேங்கடேச சுப்ரபாதம்

திருமலைவாசனின் சுப்ரபாதத்தில் முதல் பகுதி பெருமானைத் துயிலெழுப்பவதாகவும், அடுத்து அவன் பெருமையை தெரிவிக்கும் விதமாகவும், அடுத்து அவனைச் சரணடைந்து, இறுதியாக அவனுக்கு மங்களம் பாடுவதாகவும் அமைந்துள்ளது. இப்பாடல்களில் வைணவ சித்தாந்தக் கருத்துக்களும், பொதுவான நீதிகளும் அடங்கியுள்ளன என்பது பெரியோர்களின் கருத்து.

வேங்கடேச சுப்ரபாதம் மொத்தம் 70 ஸ்லோகங்களுடன், நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி, யோக நித்திரையில் இருக்கும் வேங்கடவனைத் துயில் எழச் செய்வது குறித்ததாகும். இதில் 29 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.

2-ம் பகுதி- வேங்கடவனைத் துதி செய்தல்; அதாவது போற்றி வணங்கும் பகுதி. இதில் 11 ஸ்லோகங்கள் உண்டு.

3-ம் பகுதியான பிரபத்தியில், திருமகளின் பெருமை குறித்தும், வேங்கடவனின் திருவடிகளில் சரணாகதி அடைவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 16 ஸ்லோகங்கள் உண்டு.

4-வது பகுதியான மங்களம், நிறைவுப் பகுதி. மங்களகரமான அருளை வேண்டும் வகையில் துதிக்கப்படும் இந்தப் பகுதியில், 14 ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.

அரங்கமாநகருளானுக்குத் திருப்பள்ளி யெழுச்சி பாசுரங்களைப் பாடியவர் தொண்டரடிப் பொடியாழ்வார். பிற்காலத்தில் சோளிங்கர், ஒப்பிலா அப்பன் திருக்கோயில், திருவல்லிக்கேணி போன்ற சில திவ்யதேசங்களுக்கு அந்தந்த ஸ்தலத்தைச் சார்ந்த சில மஹநீயர்கள் சுப்ரபாதம் இயற்றி, அது அந்தந்த திவ்யதேசங்களில் அனுசரிக்கப்படுகிறது.

திருமலையில் வேங்கடேச சுப்ரபாத தரிசனம்

திருமலை வேங்கடவனுக்கு நித்தமும் பல ஸேவைகள் நடை பெறும் என்றாலும், முதலாவதாக இடம்பெறுவது சுப்ரபாத ஸேவைதான். அதிகாலையில் அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், கோயில் சேவகர்கள், வீணை இசைக் கலைஞர்கள் ஆகியோர் தங்க வாசலை அடைவார்கள். அங்கே துவார பாலகரை வணங்கி, ஸ்வாமியை மனத்தில் தியானித்தவண்ணம் திருக்கதவைத் திறப்பார் அர்ச்சகர். அனைவரும் நுழைந்ததும், கதவு சாத்தப்படும்.

பிறகு, திருச்சந்நிதியில் தீபங்கள் ஏற்றப்பட, வேங்கடேச சுப்ரபாதம் ஒலிக்க… முதல் நாள் இரவு தொட்டிலில் கிடத்திய ‘போக நிவாஸ மூர்த்தி’யை திருப்பள்ளி எழுந்தருளச் செய்வார்கள். பின்பு, அவரை மூலவருக்கு அருகில், எப்போதும் அவர் இருக்கும் இடத்தில் எழுந்தருளச் செய்வார்கள். வேங்கடேச சுப்ரபாதம் முடியும் தருணத்தில் சந்நிதியின் திருக் கதவுகள் மீண்டும் திறக்க, ஸ்வாமிக்கு பாலும் வெண்ணெயும் சமர்ப்பித்து, தீபாராதனை நிகழும். இதற்கு நவநீத ஆரத்தி என்று பெயர். இந்த தரிசனத்தையே சுப்ரபாத தரிசனம், விஸ்வரூப தரிசனம் என்பார்கள். அதிகாலைப் பொழுதில் தீப ஒளியில் சுடர்ஜோதியாய் அருளும் திருவேங்கடவனை, திருமகள் நாயகனைக் காணக் கண்கோடி வேண்டும்.

பகவானின் அர்சசாவதார நிலையில் (உருவ வழிபாடு – தற்போது நாம் திருக்கோயில்களில் வழிபடும் தெய்விகத் திருவுருவங்
கள்) முதன்முதலாக திருமாலுக்கு சுப்ரபாதம் பாடிய பாக்கியமும் பெருமையும் பெற்றவர் யார் தெரியுமா?
‘பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர்’ என்ற மகான். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த மகானால் அருளப் பட்டது வேங்கடேச சுப்ரபாதம். பின்னாளில் இவருடைய வம்சத்தில் பிறந்து, அதே பெயரோடு 92 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்த பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்யர் சுவாமிகளால், பி.வி.அனந்தசயனம் ஐயங்காருக்கு சுப்ரபாதம் முறைப்படி கற்றுத் தரப்பட்டது.

இவரிடம் இருந்து வேங்கடேச சுப்ரபாதம் பாடும் முறையைக் கற்றுக்கொண்ட அனந்தசயனம் ஐயங்கார், தனது வாழ்நாள் முழுவதும் திருமலை சந்நிதானத்தில் சுப்ரபாத ஸேவையில், அந்தத் தெய்விகப் பாடலைப் பாடி சேவை செய்திருக்கிறார். முதன்முதலில் இசைத்தட்டு வடிவில் சுப்ரபாதத்தைப் பதிவு செய்து வெளியிட்டவரும் அனந்தசயனம் ஐயங்கார்தான். இவருக்குப் பிறகே, திருப்பதி திருமலையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில்  சுப்ரபாதம் ஒலிக்கத் துவங்கியது.!

Source…..www.vikatan.com

Natarajan

 

ஏரி காத்த அருண்…….!!!

e_1475133384

சென்னை மாம்பலம்வாசிகளுக்கு மேட்லி சாலை சப்வேவை ஒட்டி இருக்கும் கோதண்டராமர் கோயில் குளம் வெகு பிரபலம். அதன் புகழுக்கு தன் அசுத்தமும் ஒரு காரணம். இப்போதுபோய் பாருங்கள். குப்பைகளும் கழிவுகளும் நீக்கப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டு, திடீரென்று புதுப்பொலிவோடு புனிதமும் காக்கப்பட்டுள்ளது. இந்த அசத்தல் மாற்றத்துக்கு அசல் காரணம், 26 வயதான அருண் கிருஷ்ணமூர்த்தி. கூகுள் நிறுவன வேலையை விட்டுவிட்டு ஏரி, குளங்களைக் காப்பதில் ஒன்பது வருடங்களாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார் அருண். இதற்கெனவே ‘என்விரான்மென்டலிஸ்ட் பௌண்டேஷன் அஃப் இந்தியா’ என்ற அமைப்பை நிறுவியுள்ளார். அவரிடம் பேசினோம்:

மொத்தம் எத்தனை ஏரி, குளங்களை மீட்டிருப்பீர்கள்?
சென்னை, கோவை, ஹைதராபாத், தில்லி, புதுச்சேரி ஆகிய ஊர்களில் மொத்தம் 39 ஏரிகளையும் 41 குளங்களையும் சுத்தப்படுத்தி இருக்கோம். இதை நான் மட்டுமே செய்யலை. என்னோட கிட்டத்தட்ட 900 வாலண்டியர்கள் இருக்காங்க. அவங்கதான் எல்லாத்தையும் செய்யறாங்க…

எப்படி இதையெல்லாம் ஆரம்பிச்சீங்க?
சின்ன வயசிலேர்ந்தே பறவைகள் மீது ஆர்வம் அதிகம். ஆந்திரா பூர்வீகம். ஆனால், சென்னை முடிச்சூரில்தான் வளர்ந்தேன். கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் அழகைப் பார்த்து வளர்ந்தவன். இதற்குக் கீழ்க்கட்டளை ஏரி தான் நீராதாரம். ஏரி நிறைந்து வழியும்போது ஏகப்பட்ட பறவைகளும் மீன்களும் ஆமைகளும் கண்ணில் படும். சின்ன வயதில் பார்த்த காட்சிகள் தற்போது இல்லை. ஏரி இருந்த இடத்தில் குப்பைகள் மண்டிக் கிடக்கின்றன.
இதைச் சுத்தப்படுத்தி மீண்டும் எழில் கொஞ்சும் ஏரியாகப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இயற்கை ஆர்வம் என்னும் முளைவிட்டது. ஹைதராபாத்துல கூகுள் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தப்பவே ஒரு ஏரியைத் தூர்வாரினோம். அப்புறம் அதையே ஏன் எல்லா இடங்களிலேயும் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. வேலையை விட்டுட்டு நண்பர்களின் உதவியோடு இதைச் செய்யறேன்.

எப்படி திட்டமிடறீங்க?
ரொம்ப மோசமா இருக்கற ஏரி, குளங்களையோ, ஆக்கிரமிப்பு, கேஸுன்னு இருக்கக்கூடிய இடங்களையோ தொடறதில்லை. தூர்வாரி கிளீன் செஞ்சா காப்பாத்த முடியும்னு தோணக்கூடிய ஏரி, குளங்களை எடுத்துக்கறோம். அதுவும் அந்த நீர்நிலைகளைச் சுத்தி இருக்கிற மக்களே எங்ககிட்ட கேட்டாங்கன்னா உடனடியா எடுத்துக்கறோம்.
முதல்ல நேரா போய்ப் பார்த்துட்டு, என்னவிமான வேலைகள் செய்யணும்னு அசெஸ் பண்ணுவோம். அப்புறம், எங்களோட ஃபேஸ்புக் பேஜ்ல, வெப்சைட்டுல, மொபைல் ஆப்கள்ல புதன்கிழமை தோறும் விவரங்களைப் போட்டுடுவோம். யார் யாரெல்லாம் ஆர்வமாக இருப்பாங்களோ, அவங்க எல்லாரும் அந்தந்த ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க.

வாலண்டியர்களுக்கு என்ன வசதி செய்து தர்றீங்க?
ஒண்ணுமே இல்ல. விருப்பப்படறவங்க தங்களோட சொந்தச் செலவுல நேரே ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க. அவங்களுக்கு முகத்துல போட்டுக்கிற மாஸ்க், கிளவுஸ், சுத்தப்படுத்தத் தேவையான கருவிகள்தான் நாங்க கொடுக்கறோம். உள்ளூர் அதிகாரிகள் கிட்ட சொல்லி, சுத்தப்படுத்தத் தேவையான பர்மிஷனை வாங்கறது மட்டும்தான் எங்க பொறுப்பு.
காலையில் ஏழு மணியிலேருந்து பதினோரு மணி வரை வேலை, பப்ளிசிட்டி இல்லை, சின்சியரா, கௌரவம் பார்க்காமல், சுத்தமான சேவை மனப்பான்மையோட வர்றவங்க மட்டும்தான் இங்கே இருக்காங்க.

யாரெல்லாம் ஆர்வம் காட்டறாங்க?
நிறைய பேருக்கு இதுபோன்ற வேலைகளில் ஈடுபடணும்கற ஆசை இருக்கு. ஸ்கூல், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வராங்க; காக்னிஸண்ட், போர்டு நிறுவன ஊழியர்கள் வராங்க, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வராங்க, நம்ம ஊர், நம்ம தண்ணீர், நாமதான் இதைக் காப்பாத்தணுங்கற உத்வேகத்தோட வருவாங்க. பல பேர், வெளியூர்லேருந்தெல்லாம் கூட வந்து வேலை செய்வாங்க. அவங்களுக்குள்ள அப்படியொரு நட்பும் பந்தமும் ஏற்பட்டுப் போச்சு. ஒவ்வொரு ஸ்பாட்லேயும் சுமார் நாற்பது முதல் ஐம்பது பேர் கூடிடுவாங்க.

வெளியூர், வெளி மாநிலங்கள்ளேயும் வேலை செய்றீங்களா?
ஆமாம், முதல்ல, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒரே ஒரு ஏரி அல்லது குளத்தை கிளீன் செய்யற வேலையைப் பார்ப்போம். படிப்படியா, இப்போ ஒவ்வொரு ஊர்லேருந்தும் ஆர்வலர்கள் வந்து எங்களோட இணைஞ்சுக்கிட்டாங்க. இப்ப ஞாயிறு மட்டுமல்லாமல் சனிக்கிழமையும் வேலை செய்யறோம். ஒரு ஊர்ல மட்டுமல்ல, ஒரே சமயத்துல பல ஊர்கள்ல வேலை செய்யறோம். இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கறதே எனக்கு முக்கிய வேலை.

அரசு ரீதியான உதவிகள் கிடைக்குதா?
தாராளமா, இதோ இந்த மாம்பலம் குளத்துல ஏராளமான ஆகாயத் தாமரைச் செடிகள். சென்னை மாநகராட்சிதான் லாரிகள் கொடுத்தாங்க, அவங்க தான் எடுத்துக்கிட்டுப் போனால்க. அதேபோல் பல ஊர்கள்ல பஞ்சாயத்துப் போர்டுகள் உதவியிருக்கு. தலைவர்கள் உதவியிருக்காங்க.

கிளீன் பண்ணிட்டு வந்துட்டா மட்டும் போதுமா?
போதாது. அதனாலதான், உள்ளூர் மக்களுடைய உதவியை நாடறோம். அவங்கதான் தொடர்ந்து குப்பை போடாமலும், அசுத்தங்கள் சேராமலும் பார்த்துக்கணும். அதுக்கு என்ன செய்யணும்ங்கறதையும் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கறோம்.

அடுத்தடுத்த திட்டங்கள்?
ஏற்கெனவே இருக்கிற நகரங்களோடு புதிய ஊர்களிலேயும் ஏரி, குளங்களைச் சுத்தப்படுத்த மக்கள் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. தஞ்சாவூர், வல்லம், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாயச் சங்கங்கள் எங்களைக் கூப்பிட்டு இருக்காங்க. அவங்க ஒத்துழைப்போட அங்கே இரக்கிற நீர்நிலைகளைக் காப்பாத்தணும். திருவனந்தபுரம், குறிஞ்சிப்பாடியிலேர்ந்தும் அழைப்பு வந்திருக்கு.

பிரச்னைகளைச் சந்திச்சதில்லையா?
அப்படிச் சொல்லமாட்டேன். அதையெல்லாம் தடைகளா நினைக்கிறதில்ல. பாடங்களா எடுத்துக்கறேன். சமூகத்திலிருந்துதான் மாற்றங்கள் ஏற்படணும். அதுவும் நீர்நிலைகளை அசுத்தப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டியது நம்மோட பொறுப்பு பல பள்ளிகள், கல்லூரிகளுக்கப் போய் இதைப் பற்றிப் பேசறேன். தொண்டர்களின் பலம் கூடக்கூட, இன்னும் பல ஏரிகளையும் குளங்களையும் காப்பாற்ற முடியுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு

ஆர். வெங்கடேஷ்  in http://www.dinamalar.com  based  on  an input from Kalki 

Natarajan

 

ஒரே சூரியன். ஒரே சந்திரன்.. ஒரே சாஸ்திரி! : அக். -2 லால்பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்

tamil_news_large_1617513_318_219

அக்டோபர் 2 என்றவுடன் நம் சிந்தனைச் சிறையில் சட்டென மின்னலாய் வந்து மறையும் பெயர் காந்தி. அவர் பாசறையில் சத்தியம், நேர்மை பாடங்களை பயின்றவர்களில் முதலிடம் பெற்றவர் லால்பகதுார் சாஸ்திரி.

இவர் 1904 அக்டோபர் 2-ல் வாரணாசியில் பிறந்தார். சாஸ்திரிக்கு ஒன்றரை வயது இருந்த போது, நேரிட்ட தந்தை சாரதா பிரசாத்தின் மரணம் தாயார் இராம் துலாரியை உலுக்கியது.

குடும்பம் வறுமையில் வாடினாலும், என்றும் வாடாத கல்வியறிவை புகட்ட விரும்பிய தாய் துலாரி, சாஸ்திரியை பள்ளியில் சேர்த்து விட்டார். ஆனால் புத்தகம் வாங்கப் பணமில்லை. புத்தகத்தை இரவல் பெற்று படித்தார். சாஸ்திரியின் வறுமையைச் சுருங்கச் சொல்ல

வேண்டுமெனில் 38 வயது வரை, தேநீர் அருந்தாமல் இருந்திருக்கிறார்.

தேசப் பணி தெய்வப் பணி : ஒரு முறை காசியில் காந்தியின் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் வெள்ளையர் ஏகாதி பத்தியம், சுதேசி கொள்கைகள் பற்றிய காந்தியின் பேச்சு 11வயது சிறுவன் லால்பகதுாரை காந்தமாய் தேசப் பணிக்கு இழுத்தது.

காசி வித்யா பீடம் கல்லுாரியில் சேர்ந்து சமஸ்கிருதம் மற்றும் தத்துவப் பாடத்தை விருப்பப் பாடமாக படித்தார். சாஸ்திரியிடம் சைக்கிள் கூட இல்லை. 16 மைல் நடந்தே சென்று படித்தார். கல்லுாரியில் முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்ற சாஸ்திரி, 1925-ல் சாஸ்திரி பட்டம் பெற்றார்.

கொள்கைத் திறம் : 1927-ல் நாட்டின் ஒவ்வொரு நகரிலுள்ள மணிக்கூண்டில் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று நேரு கேட்டுக் கொண்டதும், சாஸ்திரி மாறுவேடத்தில், காவல் துறையின் கண்களை ஏமாற்றி மிர்சாபூர் மணிக்கூண்டில் தேசியக் கொடியைப் பறக்க விட்டார். இதை ஒரு கட்டடத்தின் மாடத்தில் இருந்து கண்ணுற்ற லலிதா தேவி என்ற பெண்மணி சாஸ்திரி மீது காதல் வயப்பட்டார், பின் லலிதா தேவி, லலிதா சாஸ்திரியானார்.

மணமேடையில் புரோகிதர், 7 கட்டளைகளை லலிதாவுக்கு கூற, சாஸ்திரி தன் மனைவியாகப் போகும் லலிதாதேவி இன்று முதல் கதராடைதான் அணிய வேண்டும் என்று எட்டாவது கட்டளையிட்டார். முதலிரவில் லலிதாதேவி கதராடை அணியாததால் அந்த அறையை விட்டு வெளியேறினார். சாஸ்திரியின் சகோதரி, ஒரு கதர் புடவையை லலிதாவுக்கு வழங்கிய பின்பே, அந்த அறைக்குள் நுழைந்தார். எதற்கும் சலனப்படாத கொள்கைப் பிடிப்பு சாஸ்திரிக்கு மட்டுமே சாத்தியம்.விடுதலைப் போராட்டத்தில் சாஸ்திரி 10 முறை கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் வரை சிறைவாசம் செய்தவர். மகளுக்கு நோய் கடுமையாகியது மகள் இனி பிழைக்க மாட்டாள் என்ற செய்தி சாஸ்திரி அடைக்கப்பட்டுள்ள சிறைக்கம்பிகளைத் தட்டி தெரிவிக்கப்பட்டது. செய்தி அறிந்த சாஸ்திரி மகளைப் பார்க்க பரோல் கேட்கவில்லை, ஏனெனில் பரோலுக்கு ஆங்கில அரசின் பல நிபந்தனைகளை ஏற்று கட்டுப்படுவதாக எழுதிக் கொடுக்க வேண்டும்.

சாஸ்திரியின் உறுதி வெள்ளையரின் கறுப்பு இதயத்திலும் ஒளி வெளிச்சத்தை பாய்ச்சியது. சிறை அதிகாரிகள் நிபந்தனையற்ற பரோல் வழங்கினர்.

விறுவிறுவென வீடு சென்றார் அங்கே தன் செல்வ மகளைக் கண்டார் உயிரற்ற சடலமாய். மகளின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார், பரோலை இடையே ரத்து செய்துவிட்டு தானாகவே சிறைக்கு சென்றுவிட்டார்.

பதவிகளுக்கு சிறப்பு : 1952-ல் நேருவின் மத்திய அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சராக 4 ஆண்டுகள் பணியாற்றினார். ஒரு நாள் வாரணாசியிலிருந்து மொகல்சராய் ரயில் நிலையத்தில் ரயிலைப் பிடிக்க காரில் கிளம்பினார், ரயில்வே அமைச்சர் சாஸ்திரியின் வருகை விஷயத்தை அறிந்த ரயில்வே கார்டு அவர் வரும் வரை ரயிலை தாமதப்படுத்தினார்.

சாஸ்திரி வந்த பின் ரயில் நகர்ந்தது. ரயில் தாமதத்தை உணர்ந்த சாஸ்திரி தன் வருகைக்காக தாமதப்படுத்திய ரயில்வே கார்டை பணிநீக்கம் செய்தார். அரியலுார் ரயில் விபத்தில் 150 பயணிகள் இறந்த போது பதவியை ராஜினாமா செய்தார். “அரியலுார் பாலத்தை கட்டியவர்கள்

வெள்ளையர்கள், பாலம் அரிக்கப்பட்டிருப்பதை அறியாமல் ரயிலை ஓட்டிச் சென்றவர் யாரோ ஒரு டிரைவர். இதற்கு நீங்கள் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பலரும் கேட்டனர்.

என்றாலும் விபத்துக்கு சட்டப் பூர்வ பொறுப்பாளி நானே என முடிவு செய்து ராஜினாமா செய்தார்.

1962-ல் சாஸ்திரி உள்துறை அமைச்சராக இருந்த போது அவசரமாக கோல்கட்டாவிலிருந்து டெல்லி திரும்ப விமானத்தை பிடிக்க வேண்டிய அவசரம். அப்பொழுது கோல்கட்டா காவல் கண்காணிப்பாளர், விமான நிலையம் செல்ல உள்துறை அமைச்சர் சாஸ்திரியிடம், தங்களின் கார் முன்னால் அபாய ஒலி எழுப்பும் காவல்துறை வாகனத்தை அனுப்புவதாகவும் இதனால் சாலையில் நெருக்கடி குறைந்து நீங்கள் விரைவில் விமான நிலையத்தை அடையலாம் என்று யோசனை தெரிவித்தார்.

அந்த யோசனையை மறுத்த சாஸ்திரி “உரத்த ஒலி எழுப்பிக் கொண்டு செல்லும் வாகனத்தை மக்கள் பார்க்கும் போது யாரோ மிகப் பெரிய மனிதர் செல்வதாக நினைத்துக் கொள்வர். என்னைக் கண்டவுடன் இவ்வளவு சிறிய மனிதனுக்காகவா? என ஏமாற்றமடைந்து விடுவர்” என்றார். பதவியின் படாடோபத்தை துச்சமாக நினைத்த பரிசுத்தமானவர் சாஸ்திரி.

1964-ல் நேரு இறந்த பின்பு, சாஸ்திரியை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார் காமராஜர். கதர் குல்லாயுடன் சாதாரண மனிதனாக இருந்த சாஸ்திரிக்கு, பிரதமர் பதவி என்பது தங்க கிரீடமாய்த் தோன்றவில்லை.ஒரு நாள் பிரதமர் சாஸ்திரி வீட்டுக்கு தரமான அரிசியை வாங்கி வந்தார் சாஸ்திரியால் வளர்க்கப்பட்ட ராம்ஸ்வரூப், “ஒரு சாதாரண மனிதனால் இது போன்ற அரிசியை விலை கொடுத்து வாங்க இயலாது, நம் குடும்ப வரவு செலவுக்கு இந்த அரிசி ஒத்து வராது, இந்த அரிசியைக் கொடுத்துவிட்டு நம்மைப் போல் சாதாரண மக்கள் சாப்பிடும் அரிசியை வாங்கி வா” என்றார்.

ஜெய் ஜவான்! ஜெய் கிஸான் : 1965-ல் இந்தியா–பாகிஸ்தான் போரின் போது கோபத்தால் கொந்தளித்த சாஸ்திரி ஜெய் ஜவான், ஜெய் கிஸான் என்று முழங்கினார். நாட்டு மக்கள் அவரின் பின்னால் அணிவகுக்க இந்தியா போரில் வென்றது. முடிவில் ரஷ்யாவின் தாஷ்கண்டில்

இந்தியா–பாகிஸ்தான் அமைதி உடன்படிக்கைக்குப் பின் 11.1.1966-ல் மறைந்தார்.

மரணத்துக்குப் பின், சாஸ்திரி பயன்படுத்திய சிறிய பியட் கார், மாதத் தவணை செலுத்த இயலாத காரணத்தால், கடன் வாங்கப்பட்ட நிறுவனத்திடமே, சாஸ்திரியின் குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்டது.காமராஜர் திட்டத்தால் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சாஸ்திரி தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் “நானும் எனது குடும்பமும் மிகச் சிறிய வீட்டிற்கு இடம் பெயர்கிறோம், காய்கனிகள் மற்றும் பாலின் அளவைக் குறைத்துக் கொண்டோம். நாங்களே துணிகளைத் துவைத்துக் கொள்கிறோம்!” என்று குறிப்பிட்டார்.

“சாஸ்திரியின் வாழ்க்கை – கடந்த கால அதிசயம்!

சாஸ்திரியின் நேர்மை -இன்றைய மக்களின்

எதிர்பார்ப்பு!

சாஸ்திரியின் எளிமை, உண்மை – எதிர்கால

ஜனநாயகத்திற்கான திறந்த புத்தகம்!

Source:::::

முனைவர். சி. செல்லப்பாண்டியன்

உதவிப் பேராசிரியர்

அருப்புக்கோட்டை, 78108 41550   in http://www.dinamalar.com

Natarajan

வாரம் ஒரு கவிதை…” நீதியைத் தேடி …”

 

நீதியைத்  தேடி …
…………..
அன்றைய அரசன்  சொன்னது நீதி ..செய்தது நீதி !.அவன் நடந்து காட்டிய வழியும்
நீதி வழியே !  …அரசனும் அவனே …நீதிமானும் அவனே !
நீதி தேடி அவன் மக்கள் வேறு எங்கும் சென்றது இல்லை
மன்னன் அவன் தீர்ப்புக்கு   மறு  கேள்வி இல்லை !
இன்று அரசே நீதி தேடி ,ஓடி , அலையும் அவலம்  …ஒரு நதி நீருக்காக !
ஒரு  அரசுக்கே கதி இது என்றால் , எனக்கும் உனக்கும்
விடிவு காலம் எப்போது ? தேசிய  நதி நீர் பங்கீட்டு விதி என்று ஒன்று உதித்து
அதை அரசும் மக்களும் மதிக்கும்  அந்த நாள் எந்த  நாள் ?
Natarajan
http://www.dinamani.com  dated 26th sep 2016

Laughter …the Best medicine…!!!

 

 

: NEW AGE KIDS
———————–
HUMOUR SANS UNIFORM (with due apologies to Reader’s Digest)
—————————— —————————— —————————–

Who are lizards?
Awesome answer by a kid….
They are
those poor crocodiles who forgot to have
Horlicks when they were young
➖➖➖➖➖➖➖➖
What is a Pizza..?
Awesome answer:
A Pizza.. is just a Paratha that went
abroad for higher education
➖➖➖➖➖➖➖➖
➖➖➖➖➖➖➖➖➖
A little boy was in a bus eating a chocolate,                                                             then he took another one and then another …
A man next to him said,
“Do you know that too much of it will damage your teeth??”
The boy replied,
“My grandfather lived for 132 years”
The man asked ,
“Was it because of eating chocolate?”
The boy replied,
No, he was always minding his own business!
➖➖➖➖➖➖➖➖
Son: Dad, there’s a small get together at school tomorrow !!!
Father: small get together.? ..how small.?
Son: only me…you…and the Principal …

➖➖➖➖➖➖➖➖➖
Digital India effect…
The young boy was suffering from loose motion.
He hesitated to say the word loose motion to the doctor.                                           So he explained in new generation style…….
“Doctor, since morning.. unlimited free outgoing, New ringtones have also started.
No balance in my stomach. If I recharge, within one minute balance becomes nil. Doctor, can you please disconnect the offer.!!
Source….Input from one of my friends
Natarajan

வாரம் ஒரு கவிதை…” தண்ணீருக்கு இரத்தம் ” …

 

தண்ணீருக்கு  இரத்தம் ….
………………..
என் நதி ஓட்டம் ! … இந்த மண்ணுக்கே  உயிர் ஓட்டம் ! …என்
நீர்  இந்த மண்ணுக்கும்  மண்ணில் உள்ள எல்லா உயிருக்கும்
சொந்தம் ! இந்த பால பாடம் தெரியாதா உனக்கு ?
நீர் இது “எனக்கு”  மட்டும் சொந்தம் என்று உரிமைக்குரல்
எழுப்பும் உனக்கு ஒரு  நதி மூலம் என்னவென்று தெரியுமா ?
இந்த மண்ணுக்கும் மண்ணில் உள்ள நீருக்கும் சொந்தம்
கொண்டாடும் நீ … விண்ணுக்கும்,  விண்ணில் உள்ள
நிலவுக்கும்,  பகலவனுக்கும் ,மழை மேகத்துக்கும்  தனி உரிமை
கோர முடியுமா சொல்லு ?
விதி விலக்கு எதுவும் இல்லை நதி எனக்கு இந்த மண்ணில்
என் வழி நான்  செல்ல !  நான் ஒரு விலை கேட்டேனா உன்னை
நான் கொடுக்கும் நீருக்கு ?  பதில் சொல்லு நீ! …வைத்து
விட்டாயே நீ  என் நீருக்கு ஒரு விலை …தண்ணீருக்கு
விலை  செந்நீரா ?… எல்லையே இல்லையா உன் மமதைக்கு ?
அன்று உன் முன்னோர் சிந்திய ரத்தத்தால் நீ சுவாசிப்பது இன்று சுதந்திர
காற்றை !..மறந்து விடாதே அதை ! இன்று தண்ணீருக்கு  நீ சிந்த வைக்கும் இரத்தம்
உன் சந்ததியர் , சகோதரர் , நல்லிணக்க நல் வாழ்வைக் குலைத்து தொலைத்திட
நீ போட்டிருக்கும் ஒரு சிவப்புக் கோடு !.. விவரம் அறியா பிஞ்சு நெஞ்சில்  நீ விதைத்து
விட்டிருக்கும் ஒரு நஞ்சு வித்து ! …நீ  போட்ட சிவப்புக் கோட்டை அழித்து விடு நீயே !
பிஞ்சு நெஞ்சில் நீ விதைத்திருக்கும் வித்தையும் களை எடுத்து நசுக்கி விடு நீயே..அந்த
வித்து ஒரு நச்சு மரமாக வளரும் முன்னே !
இதை நீ கட்டாயம் செய்ய வேண்டும் மனிதா …  நதி என் கண்ணீர்
செந்நீராக  உருமாறும்  முன்னே !
Natarajan
20th sep 2016

” Tiger in the Toilet ” !!!

 

 

*Kaizen Story: Tiger in the Toilet*

Once a stranded Tiger entered the washroom of a Corporate Office and hid in a dark corner. Since there were people outside the washroom throughout the day, the Tiger was afraid to come out.

Many people frequented the washroom, but the frightened Tiger didn’t touch anyone. However, after four days it couldn’t bear hunger anymore, so it caught a man who had come in, and ate him.

This man happened to be an Assistant General Manager in the organization, but nobody noticed his disappearance.

Since nothing untoward happened, the Tiger became bolder and after two days caught another man and ate him.

This man was the General Manager of the organization.

Still, nobody was worried over his disappearance (Some people were even happy that he was not seen in the office).

Next day, the Tiger caught the Vice President who was a terror in the organization. Again nothing happened.

The Tiger was very happy and thought that this was the perfect place for him to live.

The very next day the happy Tiger tried to catch a man who had entered the washroom while balancing a tray of teacups in one hand.

The frightened man fell unconscious. Within fifteen minutes a huge hue and cry ensued, and everyone in the office started looking for the man. The search team reached the washroom, flushed out the Tiger and saved the unconscious man. He was the tea boy in the office.

*Moral of the Story*

It is not the position, but our usefulness to others that makes us lovable and respectable. If your subordinates are happy in your absence that means you are not a perfect leader.

Source….Input from a friend of mine
Natarajan

இசைகுயிலுக்கு ஓர் நினைவாஞ்சலி!

m

அனுதினம்  பாரதத்தை  தனது  சுப்ரபாதத்தால் துயிலெழுப்பும் இசைக் குயில் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் நூறாவது பிறந்த நாள் இன்று.

தமிழிசை,  பட்டிமன்றம்,  சொற்பொழிவு,  ஆன்மிக  இலக்கியம்  என்று பல்துறையில் முத்திரை பதித்திருக்கும்  முனைவர்  பேராசிரியை சரஸ்வதி ராமநாதன், “அம்மா’ என்று அவர் அழைக்கும்  இசை அரசி எம்.எஸ் முன்னிலையில் தமிழிசைப்  பாடல்கள் பாடி எம்.எஸ் அம்மாவின் பாராட்டுப் பெற்றவர்.  செட்டிநாட்டு வட்டாரங்களில்  கச்சேரி  செய்ய எம்.எஸ் வரும் போதெல்லாம்  முன் வரிசையில் இடம் பிடித்து, எம். எஸ். அவர்கள் பாடி, கேட்டு, அவரையே படித்து வளர்ந்தவர். சென்னை கம்பன் கழகத்தின் “கம்பன் அடிப்பொடி’ விருதினை   சரஸ்வதி  ராமநாதனுக்கு   வழங்க  பரிந்துரைத்ததே எம்.எஸ். அம்மாதான்  என்கிறார் முனைவர்  சரஸ்வதி ராமநாதன்.

எம். எஸ்  அம்மா  குறித்த  தகவல்களை  அவர்  பகிர்ந்து கொண்டதிலிருந்து;

“மதுரை  சண்முகவடிவு சுப்புலட்சுமி தான் எம். எஸ். சுப்புலட்சுமி  என்றாகியது.  அவரது அம்மா  சண்முகவடிவு  நன்றாக வீணை வாசிப்பார். ஒரு முறை  மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணை கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சண்முகவடிவு என்ன நினைத்தாரோ  வீணை வாசிப்பதை  நிறுத்திவிட்டு, “அம்மா  குஞ்சம்மா  இங்கே வா…” என்று மகள் சுப்புலட்சுமியை அழைத்தார். வெளியே  சுப்புலட்சுமி என்றாலும், வீட்டில் குஞ்சம்மாள் என்றுதான் அவரை அழைப்பார்கள்.  பத்து வயது சிறுமியான குஞ்சம்மாள் அம்மா மேடைக்கு அழைத்ததும் “குடு குடு’ என்று  மேடை ஏறி நிற்க.. “சபைக்கு நமஸ்காரம் செய்திட்டுப் பாடு” என்று சண்முகவடிவு சொல்ல… மேடைப் பயம்,  சபைக் கூச்சம் ஏதும் இன்றி இந்துஸ்தானி ராகத்தில் “ஆனந்த ஜா…’  என்ற மராட்டியப் பாடலை  அருமையாகப்  பாட….  கச்சேரிக்கு வந்திருந்த அனைவரும் கை  தட்டி ரசித்தார்கள்.  இதுதான் எம்.எஸ் அம்மாவின் முதல் மேடை  அனுபவம்.

இன்னொரு  தருணத்தில்,  சண்முகவடிவு  மகள் எம்.எஸ்ஸுடன்  சென்னை சென்றிருந்தார். சண்முகவடிவு  வீணை  மீட்ட அதைப் பதிவு செய்து இசைத்தட்டாக  வெளியிட, ’டுவின்’  இசை நிறுவனம்  சென்னைக்கு அழைத்திருந்தது.  அங்கேயும்  அம்மா கேட்டுக் கொண்டதன் பேரில்  எம். எஸ். பாட…  இசை நிறுவனத்தார்  இப்படி  ஓர்  இனிமையான குரலா.. என்று ஸ்தம்பித்து நின்றனர்.  இசைப் பொக்கிஷத்தை   அடையாளம் கண்டு கொண்டு அதை அங்கீகரிக்கும் விதமாக,  உடனே,  “மரகதவடிவும் செங்கதிர்வேலும், விதிபோலும் இந்த…’  என்னும் இரண்டு பாடல்களை  எம். எஸ்ஸை  பாடச் சொல்லி  இசைத்தட்டாக  வெளியிட்ட பின்னர்தான் வேறு வேலை பார்த்தனர். இசைத்தட்டு  ஸ்டிக்கரில், பாடியிருப்பது  “மிஸ். சுப்புலட்சுமி, வயது பத்து’ என்று அச்சிட்டிருந்தனர்.

எம்.எஸ் அம்மாவின்  அதிகாரப்பூர்வ மேடைக் கச்சேரி  1935 -ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது அவருக்கு வயது பத்தொன்பது. மிருதங்க ஜாம்பவான் புதுக்கோட்டை  தட்க்ஷிணாமூர்த்தி பிள்ளையின் மணிவிழாவின் போது அம்மாவின் சங்கீதக் கச்சேரி அற்புதமாக  அரங்கேறியது.  அன்றைய மைசூர் சமஸ்தானத்தின்  அரச  சபையில்  திருக்கோகர்ணம்  ரங்கநாயகி  அம்மாள் மிருதங்கம் வாசிக்க  எம்.எஸ். பாட… தென்னகம் முழுவதையும்  அவரின் குயில் குரல் இனிமை, தென்றலாகத்  தழுவி சிலிர்க்க  வைத்தது.

தெய்வீக அழகும்,  சுருண்ட முடியும்,  பாடும் போது  பாவங்களை  முகத்தில் நர்த்தனம்  ஆடவிடும்  திறமையை  அம்மாவிடம் கண்ட  திரைப்பட இயக்குநர் கே. சுப்ரமணியம் அம்மாவை  தனது சொந்தப் படமான  “சேவாசதனம்’ படத்தில் கதாநாயகியாக்கினார். 1936-இல் அம்மாவின்  திரையுலகப் பிரவேசம்  நடந்தது. அப்போது  பாடல்கள்  சிறப்பாக அமைந்தால் படம் வெற்றி பெறும் என்ற நிலைமை.   “சேவாசதனம்’ பாடல்கள் பிரமாதமாக அமைந்திருந்ததால் படம்அமோக வெற்றி பெற்றது. “சேவாசதனம்’  படத்தில் எம்.எஸ். பாடிய “மா ரமணன்,  உமா ரமணன்’,  “சியாம சுந்தர கமலவதன’, “ஆதரவற்றவர்க்கெல்லாம்’ போன்ற  பாடல்களைப்  பாடாத,   முணுமுணுக்காத  ஆண் பெண்  அன்று தமிழகத்தில் இல்லை.  அந்த அளவுக்கு  அந்தப் பாடல்கள் ஹிட்டாகியிருந்தன. இந்தப் படம் மூலமாக  அறிமுகமான  தேச விடுதலை தியாகி டி.சதாசிவம் அவர்களை  எம். எஸ். அம்மா 1940 -இல்  திருமணம் செய்து கொண்டார்.

“சகுந்தலை’ படத்தைத் தயாரித்த  ராயல் டாக்கீஸ்  நிறுவனத்தினர் எம்.எஸ்ஸை தங்களது புதிய தயாரிப்பான  “சாவித்திரி’  பட  நாயகியாக  நடிக்க வைக்க விரும்பினர்.  திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று  எம். எஸ் வந்த வாய்ப்பை ஏற்க   மறுத்துவிட்டார்.  சில நாட்கள்  கழித்து, கல்கி  இதழைத் தொடங்குவதற்கு முதலீடு தேவைப்பட்டதால், “சாவித்திரி’ படத்தில் நடிக்கிறேன் என்று தகவல் அனுப்பினார்.

“நீங்கள்  நாயகியாக நடிக்க சம்மதிக்காததால் மராத்தி நடிகை  சாந்தா ஆப்தேயை  நாயகியாக  போட்டுவிட்டோம்.  நாரதர் வேடத்திற்கு  யாரையும் தேர்வு செய்யவில்லை.  படத்தில் நாரதருக்குத்தான் அதிக பாடல் காட்சிகள். நீங்கள்தான்  நாரதராக நடிக்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டார்.  கணவர் சதாசிவம்  “ம்ம்.. தாராளமாக நடி” என்று உற்சாகப்படுத்தினார்.  எம். எஸ்ஸும்  உடனே  சம்மதித்தார். இந்த செய்தி வெளியே தெரிந்ததும்,  பட வெளியீட்டாளர்கள்  படத்தை வெளியிடும் உரிமையைப் பெற  தயாரிப்பாளரை மொய்த்து  விட்டார்கள்.  பட உரிமையும் நல்ல விலைக்கு விற்பனையானது.

எம்.எஸ்ஸுக்கு  சம்பளமாக கிடைத்த நாற்பதாயிரத்தை  அப்படியே கல்கி இதழ் தொடங்க  தந்துவிட்டார்.

1946-ஆம் ஆண்டு  எம். எஸ் நடித்து  வெளியான “மீரா’ திரைப்படம் தமிழகத்தைக் கொள்ளைக் கொண்டது. கல்கி  எழுதிய “காற்றினிலே வரும் கீதம்’, “கிரிதர கோபாலா’ போன்ற  பாடல்கள்  தமிழக மக்களின்  செவிகளில் தேனைச் சொரிந்தன.  அந்த கானங்களின்  இனிமையில் தமிழகம் மயங்கிப் போனது. தமிழில்  வெற்றி கண்ட  “மீரா’  ஹிந்தியிலும்  “மீரா’வாகவே  தயாராகி  அகில இந்திய சாதனைப்  படமானது. பிரதமர் ஜவஹர்லால் நேரு, எம். எஸ். அவர்களை ’இசை அரசி’ என்று அழைக்க வைத்தது மட்டுமல்லாமல், இந்த இசை அரசிக்கு முன் நான் வெறும் பிரதமர் மட்டுமே.. என்று  நெகிழ்ந்து பாராட்டி, எம். எஸ். அவர்களின் குடும்ப நண்பர் ஆனார் நேரு.

சபர்மதி ஆசிரமத்தில் அண்ணலின் முன்னிலையில்  அம்மா  பல முறை பாடியுள்ளார்.  நாடு விடுதலையான 1947- ஆம் ஆண்டு  வந்த  காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 -இல் எம். எஸ். பாட வேண்டும்  என்று காந்தி விரும்ப.. தான் பாடிய பாடலை  ஒலி நாடாவில்  பதிவு செய்து அம்மா அனுப்பி வைத்தார். பிரபல  காந்தி அஞ்சலி பாடல்களான  எம். எஸ். பாடிய   “வைஷ்ணவ ஜனதோ’, “ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல்கள்  அண்ணல் காந்தியை வென்ற பாடல்கள். காந்தியின்  மறைவிற்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் பாடல்களாகிவிட்டன.

Source…By – பிஸ்மி பரிணாமன்  in http://www.dinamani.com

Natarajan

 

Why iodine is added to Salt ….?

 

Iodine in a gaseous state. The fact that it is purple in this state is how it got its name, from the Greek for violet (iodes)

Today I found out why iodine is added to salt.

Iodine first began being added to salt commercially in the United States in 1924 by the Morton Salt Company at the request of the government.  This was done as a response to the fact that there were certain regions in the U.S., such as around the Great Lakes and in the Pacific Northwest, where people weren’t getting enough iodine in their diets due to it not being prevalent in the soil in those regions.  Among other problems, this caused many people to develop goiters (swelling of the thyroid gland, also sometimes spelled “goitre”).

About 90% of people who develop a goiter do so because of a lack of iodine in their diets, so the simple solution was to add iodine to something pretty much everyone consumes fairly regularly, namely salt. This practiced was not thought up by the U.S., but was copied from the Swiss who were adding iodine to salt at this time for the same reason.  This resulted in researchers at the University of Michigan testing this practice out with good results and subsequently Morton Salt Company adopting the practice on a national level.

This ultimately didn’t cost Morton and the other salt companies that followed suit much money, only a few cents per person per year in iodine, but drastically cut the number of people who developed goiters in the United States and beyond as the practice gradually became adopted throughout much of the developed world.

Today because most food in developed countries like the United States often isn’t grown locally, coming from all over the country and world, depending on the food item, continuing to add iodine to salt isn’t strictly necessary.  People in regions where the soil is lacking in iodine will likely consume plenty of food from regions where it is not, thus getting the iodine their bodies need, particularly because our thyroids don’t need much to function properly.

For reference, the U.S. Food and Drug Administration recommends that you consume about 150 micrograms of iodine per day and, on average, men in the United States gets about double that amount per day and women each consume about 210 micrograms of iodine per day.  Your thyroid itself only needs about 70 micrograms per day to function properly.

Even though most people get plenty of Iodine in their diets, because Iodine is so critical to our bodies functioning properly and the Tolerable Upper Intake Level is so high (about 1100 micrograms per day, and you won’t take a fatal dose unless you ingest about 2 million micrograms, or 2 grams), adding it to salt is still recommended by many government health agencies the world over to stave off certain health problems.

Specifically, Iodine is a critical element used by your thyroid in being able to synthesize certain gland secretions which, among other things, influences your heart, metabolism, nerve responses, etc.  Further, a lack of iodine during pregnancy and in the baby’s diet after being born can cause a myriad of significant health and developmental problems.  Iodine deficiency has also been linked to increased difficulty with information processing, diminished fine motor skills, extreme fatigue, depression, weight gain, and low basal body temperatures, among other things.

Bonus Facts:

  • Iodine deficiency, besides being a leading cause of goiters in the world, is also currently the number one easily preventable cause of mental retardation in the world, due to the fact that, despite iodized salt being fairly prevalent, there are still about two billion people in the world today that are iodine deficient.
  • Iodine was discovered by accident by the son of a saltpeter manufacturer, Bernard Courtois, in 1811.  This was thanks partially to the Napoleonic Wars which resulted in saltpeter, for gunpowder, being in high demand (the Napoleonic Wars also helped give us canned food and cheap and easily made pencils, read more at the links).  In the process of producing saltpeter, sodium carbonate was needed.  In order to get the sodium carbonate, the saltpeter manufacturers would isolate it from seaweed by burning the seaweed and washing the ash with water.  The waste from this process was then destroyed with sulfuric acid.  At one point, Courtois accidentally added too much sulfuric acid to the waste and he observed a purple vapor, which crystallized on cold surfaces.  He then gave samples of this substance to others to study in more detail as he suspected he’d discovered a new element.  One person he gave the substance to was chemist Joseph Louis Gay-Lussac, who subsequently  announced at the Imperial Institute of France that Coutois’ discovery was either a new element or was some compound of oxygen.  Another scientist, Humphry Davy, also studied the substance and determined that it was indeed a new element.
  • During the Cold War, it was a common practice for people to have iodine pills on hand in case of a nuclear strike.  Among many other problems we’d all have during a nuclear war is the issue of radioactive iodine accumulating in our thyroids.  In order to combat this accumulation, the idea was to take an iodine pill and give your thyroid so much iodine that it wouldn’t be able to absorb the radioactive iodine.
  • The first confirmed people to figure out how to cure most goiters were the Chinese during the Tang Dynasty (618-907).  During that time, they treated people with goiters by grinding up the thyroids of sheep and pigs to form a powder which was then consumed in a pill or in powdered form.  These animal thyroids are very iodine rich, so this cure worked quite well, though they didn’t realize why at the time.
  • The Pharmacopoeia of the Heavenly Husbandman also implies that as early as the 1st century BC the Chinese cured goiters with sargassum (a type of seaweed), which also contains significant quantities of iodine.  Whether this dating is accurate or not, at least as far as recorded history goes, it appears that the Chinese were the first to come up with an effective cure for a goiter.
  • Seafood typically contains relatively large amounts of iodine, so if you eat much seafood, you’re very likely getting more than enough iodine, without consuming salt laced with it.
  • According to a study done at the University of Texas about 47% off major salt manufacturers no longer put enough iodine in their salt to meet the U.S. Food and Drug Administration’s recommended levels.  This problem is further exacerbated when salt is exposed to air or in humid regions.  This will gradually lower the iodine content in the salt over time.
  • Salt is typically iodized by spraying it with potassium iodate at a rate of 60 ml per one ton of salt (which comes to a little over $1 of potassium iodate per ton of salt).
  •  Salt with iodine added makes for a poor choice for curing, as the iodine in large enough quantities will add a certain amount of bitterness to the cured food.
  • While pure salt doesn’t technically expire, when iodine is added, it does, having a shelf life of about five years on average, according to Morton Salt Company.
  • Calcium silicate is typically added to table salt as an anti-caking agent, to keep the salt flowing smoothly, rather than clumped together as it absorbs moisture.  Around .5% of the contents of a typical table salt container is calcium silicate.
  • Iodine was originally named “iode” by Gay-Lussac from the Greek word for violet (iodes), due to the purple vapor observed which formed the crystals.

Source….www.today i foundout.com

Natarajan

ஒப்பில்லா ஓணம்….!!!

1

 

பண்டிகைகளும் விரதங்களும் பாரத நாட்டு மக்களின் இரண்டு கண்களாகத் திகழ்கின்றன. நமது நாட்டின் சமூகப்பண்பாட்டை வளர்ப்பதோடு மக்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் அவைகள் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று ஓணம் பண்டிகை. கேரளாவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் (மலையாளத்தில் சிங்க மாதம்) ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை பத்து நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்.

திருமால் தசாவதாரங்களில் முதன் முதலாக மனித உருக்கொண்டு தோன்றியது வாமன அவதாரத்தில்தான். சிறு அந்தணச்சிறுவனாய் தோன்றி மகாபலியிடம் மூன்று அடி மண்கேட்டு பிறகு அவரே பெரிய உருக்கொண்டு திருவிக்ரமனாய் வந்து மகாபலி சக்ரவர்த்தியை பாதாள லோகத்தில் அழுத்திய அவதாரம் இது. தன் குலகுரு அறிவுரையையும் பொருட்படுத்தாமல் கொடுத்தவாக்கை காப்பாற்ற மகாபலி காட்டிய வள்ளல் தன்மையை வெளிப்படுத்தவும், அதே சமயம் அவன் மனதில் குடியிருந்த ஆணவப்பேயை அழிக்கவும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டதே வாமனதிருவிக்ரம அவதாரம். இதனையே “ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று ஆண்டாள் தனது திருப்பாவை பாசுரங்களில் போற்றிப் பாடுகின்றாள். “மகாபலியின் மனத்தூய்மையை சோதிக்க வைத்த பரீட்சையா..?’ என்று குருவாயூரப்பனை நோக்கி வினவுகிறார் நாராயண பட்டத்ரி தனது நாராயணீயம் காவியத்தில்.

இந்த அவதாரத்தை தொடர்புப் படுத்தி பேசப்படும் திருத்தலம் திருக்காட்கரை (எர்ணாகுளத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது) மலை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று. இதனை வாமன úக்ஷத்திரமாகக் கருதி, கோயில் கொண்டிருக்கும் மூலவரை வாமனராக வழிபடுகின்றனர் பக்தர்கள். இங்கு தன்னை ஆட்கொள்ள வந்தவன் திருமாலே என அறிந்து அவரிடம் மகாபலி மன்னன், ஆண்டுக்கு ஒருமுறை பாதாள லோகத்திலிருந்து தான் வந்து உலக மக்களைச் சந்திக்க அருளுமாறு வேண்டி அவ்வரத்தையும் பெற்றான். அந்தப் பேறு பெற்றது ஒரு ஆவணிமாதத் திருவோணநாளாகும். அந்நாளே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் இவ்வூரில் வாழ்ந்த விவசாயி ஒருவர் தன் வாழைத் தோட்டத்தில் வாழை குலை தள்ளாமல் அழிவதுகண்டு இத்தல பெருமாளை வேண்டி தங்கத்தால் வாழைமரக் குலை ஒன்றை சமர்ப்பித்தான். பெருமாளின் நேத்ர கடாஷத்தினால் வாழை மரங்கள் குலைகளுடன் செழித்து வளர்ந்தன. அது முதல் அந்த மரத்தின் பழங்கள் நேத்ரபழம் என்றும், பெருமாளிடம் நேர்ந்து கொண்டு காய்த்ததால் நேந்திரம் பழம் என்றும் பெயர் பெற்றது.

இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் “வாமன ஜெயந்தி’ உற்சவம் பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. நம்மாழ்வார் பாசுரம் பெற்ற தலம் இது. தங்கள் வாழ்க்கையுடன் ஒன்றி, தங்கள் மனதில் நீங்கா இடம் பெற்று தங்களை தேடிவரும் மாமன்னன் மகாபலியை வரவேற்பதே ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சமாகும். அத்தப்பூ என்று பூக்களால் போட்ட கோலங்களை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அன்று காணலாம். பெண்கள் கை கொட்டுக்களி என்று நடனம் ஆடுவதும், பல வகை பதார்த்தங்களைக்கொண்டு அறுசுவை உணவு விருந்து வைத்தலும், படகுபோட்டி, விளையாட்டு போட்டி நடத்துவதும், யானைகளை அலங்கரித்து அதற்கு சிறப்பு உணவு படைத்தலும், ஆலயங்களில் சிறப்பு வழிபாடும், என கேரளாவே அமர்க்களப்படும்.

ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்று கூடி ஒரு தேசிய விழாவாகக் கொண்டாடுவது சிறப்பு. தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் இவ்விழா கொண்டாடியதை சங்ககால ஏடுகள் குறிப்பிடுகின்றன. மயிலை கபாலீசுரர் ஆலயத்தில் திருவோணவிழா நடைபெற்றுவந்ததை திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.

காலைத் தூக்கியபடி திரிவிக்ரமனாய் காட்சியளிக்கும் திருமாலின் உலகளந்தான் கோலத்தை தமிழ்நாட்டில் காஞ்சியில் உலகளந்தப்பெருமாள் ஆலயத்திலும், திருக்கோவிலூர், சீர்காழி (காழிச்சீராம விண்ணகரம்) திருநீர்மலை போன்ற திவ்ய தேசங்களில் தரிசிக்கலாம். திருக்கோவிலூரில் வாமனர் சந்நிதியும் உண்டு. இங்கு பிரதி திருவோணம் நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பு.

எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி (ஆவணி, சிரவணம்) ஓணம் பண்டிகை மற்றும் வாமன ஜெயந்தி நாளாகும். இந்த நன்னாளிலே ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி வணங்கினால் அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து வாழ்வர் என்பது திண்ணம்.

Source…….www.dinamani.com

Natarajan