ஹைக்கூ எழுதும் டீக்கடைக்காரர்……

கோவையைச் சேர்ந்தவர் நா.முத்து. டீக் கடைக்காரர். கவிஞர். சாகித்ய அகாதெமி சார்பில், சிறந்த 100 ஹைக்கூ கவிதை தொகுப்புகளை தேர்ந்தெடுத்ததில் இவரது கவிதைத் தொகுப்பும் ஒன்று.

நா.முத்து 8-ஆம் வகுப்பு வரைதான் படித்தார். படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் அப்பாவுடன் டீக்கடைப் பணியில் சேர்ந்துவிட்டார். ஏன்? படிக்கவில்லை என்று

கேட்டபோது, “”எவ்வளவு புத்தகங்களை வேண்டுமானலும் வாசிப்பேன். ஆனால், மனப்பாடம் செய்து எழுதுவது  எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அதனால் தான் படிக்கவில்லை.

ஆனால், படிக்காதது இப்போது வருத்தமாக உள்ளது” என்கிறார்.

“தலைவர் எழுச்சியுரை, உற்சாகம் தந்தார் சுக்குக் காப்பிக்காரர்’

“நேரம் சரியில்லை கடிகாரக் கடை’ என்பது போன்ற நகைச்சுவை ஹைக்கூ கவிதைகளை அள்ளி வீசுகிறார்.

நகைச்சுவை ஹைக்கூக் கவிதைகளை மட்டுமே மையமாக வைத்து எழுதாமல், சமூக நோக்கிலும் பல ஹைக்கூக் கவிதைகளை எழுதியுள்ளார்.

“ஆயிரம் மரங்கள் மரணம்

ஆறுவழிச் சாலை ஜனனம்

அதில் ஆயிரம் வாகனங்கள் பயணம்

ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு வசனம்

மரம் நடுவோம், மழை பெறுவோம்’

என்கிற கவிதையை கோவை, அவிநாசி சாலையை மையமாக வைத்து எழுதியுள்ளார்.

ஹைக்கூ கவிதையில் ஆர்வம் வரக் காரணம் என்னவென்று கேட்டோம்:

“”நாம் பார்ப்பதெல்லாம் ஹைக்கூ தான். எதைப் பார்த்தாலும் எதாவது சொல்ல வேண்டும் என்கிற முனைப்பு தான் ஹைக்கூ கவிதை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது. எனவே, நான் பார்ப்பதை, யோசிப்பதை தெளிவாக சொல்ல வழிவகுத்தது ஹைக்கூ கவிதை தான்.

இதுவரை இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளேன். அதில், “இருக்கு’ என்கிற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, சூழல் சார்ந்த கவிதைப் புத்தகம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. “எடை குறைவாய்’ என்கிற கவிதைத் தொகுப்பை எழுதி வருகிறேன்.

குறும்படங்கள், வீதி நாடகங்கள், கோவை வானொலியில் கவிதைகள் வாசிப்பது, புகைப்படக் கலை, இலக்கியக் கூட்டங்களில் பேசுவது என தற்போது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

பாரதியார் கவிதைகள் மிகவும் பிடிக்கும். “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்பது என் மனதுக்குப் பிடித்த கவிதை. பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போதே உற்சாகமும், தைரியமும் பிறக்கும். எனவே, அவரது கவிதைகளை அதிகம் வாசிப்பேன்.

“நம் பிறப்பு சாதாரணமானதாக இருக்கலாம் ஆனால், நம் இறப்பு ஒரு சரித்திரமாக மாற வேண்டும்’ என்ற வரிகளுக்கேற்ப எவ்வளவு சாதாரணமானவராக இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதைக் கண்டறிந்து செயல்படுத்துவதே அறிவுடைமையாகும் என்பதற்கு சான்று டீக்கடை முத்து.

Source:::::www.dinamani.com

Natarajan

 

“இனிக்கும் இலையும் கசக்கும் இலையும்’ !!!

வாகீசக் கலாநிதி கி.வா.ஜ.வுக்கு பல மூலிகைகளைத் தெரியும். உணவில் கீரைகளையும், மூலிகைகளையும் சேர்த்துக் கொண்டால் நோய் வராமல் தடுக்கலாம் என்று அடிக்கடி சொல்வார். இவர் பர்மாவுக்குச் சென்றிருந்தபோது, அன்பர்கள் இவரை சிவத்தலம் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கே குன்றின்மேல் “குன்று தோறாடும் குமரன்’ கோயில் உள்ளது. கி.வா.ஜ. குன்றின் மேல் ஏறி முருகனை வணங்கிவிட்டு கீழே இறங்கி வந்தார். அடிவாரத்தில் ஒரு மடம் இருக்கிறது. அங்கே நிறைய செடி, கொடிகள், மூலிகைகள் இருந்தன. இவர் அங்கிருந்த குன்றிமணிக் கொடியில் உள்ள இலையைப் பறித்து ஒருவரிடம் கொடுத்து… “இதை உண்ணுங்கள் இனிக்கும்’ என்றார்.

அந்த அன்பர் அதனை உண்டு “இனிக்கிறது’ என்றார். உடனே இவர் “நீங்கள் அதிலிருந்து இன்னும் இலையைப் பறித்து வாருங்கள். அவற்றையே “கசக்கும் இலை’ ஆக்குகிறேன் என்றார். அனைவருக்கும் வியப்பு. எப்படிச் செய்ய முடியும்? இனிக்கும் இலையைக் கசக்கும் இலை ஆக்க முடியுமா? ஆவலுடன் அன்பர் இலையைப் பறித்து இவர் கையில் கொடுத்தார்.

எல்லோரும் ஆவலாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்… இவர் அந்த இலைகளை இரண்டு கைகளிலும் வைத்துக் கசக்கினார்.

மற்றவர்களைப் பார்த்து “இப்போது இது நான் கசக்கும் இலை ஆகி விட்டதல்லவா” என்றார். அனைவரும் சிரித்தனர்.

-“பெரிய மனிதர்கள் அரிய செய்திகள்…’ நூலிலிருந்து.

SOURCE::::: http://www.dinamani.com

Natarajan

லீ: சிங்கப்பூரின் சிற்பி…….மறக்க முடியாத மாமனிதர் …

சிங்கப்பூர் வரலாற்றில், சிங்கப்பூர் என்ற சொல்லோடு பிரித்துப் பார்க்க முடியாததாக இருந்த இன்னொரு சொல் உதிர்ந்திருக்கிறது: லீ குவான் யூ. சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியும் இவரே, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய நேருவும் இவரே!

உலக வரைபடத்தில் சின்னஞ் சிறிய புள்ளியாக இருக்கும் சிங்கப்பூரை, இன்று நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் என்று பல துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் சாதனை நாடாக மாற்றியமைத்த மாயாஜாலக்காரராகவே உலகத் தலைவர்கள் இவரைப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு, சிங்கப்பூர் என்ற சுதந்திர நாடு உருவான நாள்தொட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியே சிங்கப்பூரின் ஆளும் கட்சி. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ, தொடர்ந்து 8 முறை பிரதமராக இருந்தவர். உலகின் மிக நீண்ட காலப் பிரதமர்!

லீயுடன் ஓர் உரையாடல்

உலகம் முழுவதும் லீயைப் பற்றி இரு விதமான பேச்சுகள், மதிப்பீடுகள் உண்டு. அவர் சிங்கப்பூரை வளர்த்தெடுக்க எந்தக் கட்டுப்பாடுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினாரோ, பெரும்பாலும் அதுதான் இந்தப் பேச்சுகள், மதிப்பீடுகளின் மையப்புள்ளி. ஒருமுறை, நான் படித்த சிங்கப்பூர் தேசியக் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக லீ குவான் யூ வந்திருந்தார். அவருடைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் அவரோடு கலந்துரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லீ – சிங்கப்பூர் இரண்டுக்குமான பல்வேறு யூகங்களுக்குப் பதிலாக அமைந்ததோடு, அவருடைய தனித்துவமான அரசியல் – நிர்வாகப் பார்வையையும் வெளிக்காட்டியது அந்த உரையாடல்.

மாணவர்கள் நிறையக் கேட்டோம், எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிங்கப்பூர் – இன்றைய சிங்கப்பூர் பற்றிக் கேட்டபோது, அப்படியே மவுனத்தில் ஆழ்ந்தார். ஒரு இடைவெளிக்குப் பின் பேசினார்: “50 வருடங்களுக்கு முன் இந்தச் சின்ன தீவில் பிழைப்புக்காக வந்து இறங்கியவர்கள்தான் இன்றைய வளர்ந்து நிற்கும் சிங்கப்பூருக்கான திடமான அஸ்திவாரத்தைப் போட்டவர்கள். எந்தெந்த நாடுகளில் இருந்தோ இங்கு வந்திறங்கி, பத்துக்குப் பத்து சதுர அடியில் எட்டுப் பேர் நெருக்கியடித்துக்கொண்டு கிழிந்த உடைகளும், போஷாக்கு இல்லாத உணவும் கொண்டு உயிர் வளர்த்தவர்கள் கொடுத்த உழைப்புதான் இந்த நாட்டுக்கான உரம். இன்று மழை பெய்யும்போது குடை பிடிக்கும் அவசியம் இல்லாமல் சாலை ஓரம் எங்கும் கூரை வேயப்பட்டிருக்கிறது. உலக அரசாங்கங்கள் பாடம் படிக்கும் நவீன சொகுசுப் பேருந்து போக்குவரத்து வசதியை அனுபவிக்கிறோம். இதற்கெல்லாம், முகம் மறந்து போன அந்தப் பாட்டன்களுக்கும் முப்பாட்டன்களுக்கும் நாம் செலுத்த நன்றி மிச்சம் இருக்கிறது.”

மாறாத வடு

சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்பியவர் லீ. ஒன்றிணைந்த மலேசியாவின் வர்த்தகத் தலைநகராக சிங்கப்பூர் இருக்க வேண்டும் என்று கனவு கண்டவர்.

மலேசியாவுடன் சிங்கப்பூரை இணைக்க நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால், மலேசிய அரசாங்கத்துடன் சரியான உடன்படிக்கை ஏற்படாத காரணத்தால், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, கண்கள் கலங்க, தலைகுனிந்து விசும்பியபடி சிங்கப்பூர் -மலேசியப் பிரிவினை அவர் அறிவித்தார். பின்னொரு நாளில், அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “1965-ல் சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரிந்த சுதந்திரக் குடியரசாக நான் அறிவித்தேன். நாடு முழுவதும், பலரும் அதைப் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடினர். ஆனால், எனக்கோ தூக்கங்கள் இல்லாத இரவுகளாக, மிகுந்த மன உளைச்சலுடனேயே நாட்கள் கழிந்தன. சிங்கப்பூருக்கு இது வாழ்வா, சாவா பிரச்சினை. ஒரு தனி நாடாக இயங்குவதற்குத் தேவையான இயற்கை வளம், மனித வளம் எதுவும் நம்மிடம் கிடையாது. சிங்கப்பூரின் சொத்து, கடல் வணிகத்துக்கு ஏதுவான நமது புவியியல் அமைப்பு மட்டுமே. இருந்தாலும் நமது குறைகள் அனைத்தையும் தகர்த்து, இன்று உயர்ந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோம். இதற்கான முழு பாராட்டும், நம் மண் மீது நம்பிக்கைகொண்டு இங்கு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது அயராத உழைப்புமே.”

தன் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொரு சிங்கப்பூர் வாசியையும் அவர், தங்களை வருத்திக்கொண்டு நாட்டைச் செதுக்கிய தியாகிகளாகவே பார்த்தார்.

ஒழுக்கம் மட்டுமே உயர்வு தரும்

19-ம் நூற்றாண்டின் தொடக்கங்களில், சிங்கப்பூர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இயங்கிவந்தது. மற்ற பிரிட்டிஷ் காலனிகளைப் போலவே சிங்கப்பூரும் ஓரளவு வளர்ச்சி கண்டது. இருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான உள்கட்டமைப்பு வசதிகள் அந்தக் காலகட்டத்தில் இல்லை. சொல்லப்போனால், அன்றைய சென்னையின் நிலவரத்தில் அரைப் பங்குகூட இல்லை.

சிங்கப்பூர் விடுதலை பெற்று, லீ குவான் யூ ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், கடுமையான சட்டங்கள் பாய்ந்தன. சாலையில் எச்சில் உமிழ்ந்தால் பிரம்படி; பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் ஜெயில் தண்டனை; போதைப் பொருட்கள் உட்கொண்டாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை – இப்படியான சட்டங்களால் நாடே கிடுகிடுத்துப் போனது. இதனால் பலரது விரோதத்துக்கும் அவப்பெயருக்கும் லீ ஆளாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அதையெல்லாம் அவர் பெரிதாகப் பொருட் படுத்தவில்லை. “நாட்டின் வளர்ச்சிக்குச் சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். அது ஆரம்பத்தில் ஒரு கசப்பான கஷாயமாகத்தான் இருக்கும். ஆனால், காலப்போக்கில் அதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அறுவடை செய்வீர்கள்” என்றார்.

அதுமட்டுமல்லாமல், தெளிவான பொருளாதாரக் கொள்கைகளாலும், முதலீட்டுக் கட்டமைப்புகளாலும் சிங்கப்பூரை என்றென்றைக்கும் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் சொர்க்கமாக மாற்றினார். சமீபத்திய உதாரணம், ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எடுவார்டோ சாவரின், தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டு, சிங்கப்பூர்வாசியாகி இருப்பது.

அரசியலுக்குத் தகுதி தேவையில்லையா?

அரசியல் பதவிகளுக்கு நிறைய தகுதிகள் வேண்டும் என்று நினைத்தவர் லீ. “எதன் அடிப்படையில் உங்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்டபோது சொன்னார்: “எந்தப் பதவியும் இல்லாமலே திறனுடன் செயல்படுபவர்களை ‘சைக்கோமெட்ரிக் சோதனைகள்’ வழியாக ஆராய்வதுதான் முதல் பணி. அந்தப் பயிற்சியில் அவர்கள் அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தக்கூடிய திறன் படைத்தவர்கள் என்று தேர்வானால், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்தச் சலுகைகளும், பதவி உயர்வுகளும் அளிக்காமல் தத்தமது தொகுதிகளை அவர்கள் எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்போம். முடிவில் அவரவர் திறனுக்கேற்ப அவர்களை இளநிலை அமைச்சர்களாகவோ, அமைச்சராகவோ நியமிக்கிறோம். இத்தனை கடும் சோதனைகளைக் கடந்துவருபவர்கள், பெரும்பாலும் சேவை மனப்பான்மையுடனும், தன்னலம் கருதாச் சமூக அக்கறையுடனும் செயலாற்றக் கூடியவர் களாகவே இருக்கிறார்கள்.”

இப்படித் திறமையான, நேர்மையான அரசியல்வாதியைக் கண்டெடுப்பது, வெறும் முதல்கட்டப் பணி மட்டுமே. அதன் பிறகு, அவர்கள் அதே நேர்வழிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ஊக்கமூட்டுவதாக இருக்க வேண்டும். “மக்களின் காசுக்கு ஆசைப்படாத அளவுக்கு ஊதியத்தை அரசே அளித்துவிட்டால், அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளியில் கை நீட்ட மாட்டார்கள்” என்பதும் லீயின் நம்பிக்கை களில் ஒன்று. சிங்கப்பூரின் ஆறு முன்னணித் துறைகளில் அதிக ஊதியம் பெரும் முதல் எட்டுப் பேரின் வருமானம் எவ்வளவோ, அதில் மூன்றில் இரண்டு பங்கு சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியம். லீயின் நம்பிக்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை.

வாரிசு அரசியலுக்கும் தகுதி தேவை

“பலம் மிக்க அரசியல் குடும்பத்து வாரிசுகள், சமுதாயத்தில் கட்டாயம் உயர்பதவி வகிக்கலாம். ஆனால், அதில் ஒரு தர்மமும் வேண்டும்” என்று சொல்வார் லீ. அவரது மூத்த மகன் லீ சியன் லூங், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 13 வருடங்கள் சிங்கப்பூர் ராணுவத்தில் முறையே பயிற்சி பெற்ற லீ சியன் லூங், 1990-ல் துணைப் பிரதமர் ஆனார். 14 வருடங்கள் கழித்து, 2004-ல் பிரதமர் ஆனார்.

இளைய மகன் லீ சியன் யாங், ஸ்டான்பர்ட் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவரும் சிங்கப்பூர் ராணுவத்தில் பணியாற்றியவர். பின் அந்நாட்டின் புகழ்பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, பின் அதன் முதன்மை நிறுவனராக உயர்ந்தார். இப்போது சிங்கப்பூர் விமானப் படைத் தலைவர்.

இப்படி லீ குடும்பத்து வாரிசுகள் அரசில் கோலோச்சினாலும், யாரும் அவர்களுடைய தகுதியைக் கேள்விக்குள்ளாக்க முடியாது, இந்திய / தமிழக அரசியலைப் போல ‘வாரிசு முறை’ இவர் விஷயத்தில் சர்ச்சை ஆகவில்லை.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

சுமார் 50 ஆண்டுகளாக எதிர்க் கட்சிகளை ஒரு சில தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க விட்டுக்கொண்டிருந்த லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சி, 2011 தேர்தலில் சறுக்கல் களைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் தங்கள் கைவசம் இருந்த முக்கியமான 6 தொகுதிகளை இழந்தது. இதன் தொடர்ச்சியாக, செயற்குழுவைக் கூட்டி, சுயபரிசோதனையில் இறங்கியது லீயின் கட்சி. “இன்றைய இளைஞர்களுக்குத் தங்கள் எதிர்காலம் மீதும், நாட்டின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை உள்ளது. இணையம் வழியாக அவர்கள் பதிவிடும் கருத்துக்கள், நாடாளுமன்றம் வரை ஒலிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். உடனுக்குடன் மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த நவீன குரல்களுக்குச் செவிசாய்க்கும் சுறுசுறுப்பான அமைச்சர்களையே தங்கள் பிரதிநிதிகளாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒன்று, கால மாற்றத்துக்கு ஏற்றார்போல் நம்மை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். அல்லது இளைய சமுதாயத்துக்கு வழிவிட்டு, கவுரவமாக நாம் விலகிக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, இதுவரை மக்கள் செயல் கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்துவரும் நான், அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிக்கொள்வதாக அறிவிக்கிறேன்” என்று அறிவித்தார் லீ.

தன்னைப் போன்ற மூத்தவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைத் தானே முன்னின்று ஏனையோருக்கு உணர்த்தினார்.

கல்லறையிலிருந்து வருவேன்

தன் மீதான விமர்சனங்கள் மீது – கட்டுப்பாடுகள், சுதந்திரத் தலையீடு, கருத்துச் சுதந்திரம், ஏனைய அரசியல் தலைவர்கள் / கட்சிகள் மீதான கட்டுப்பாடு – பற்றியும் லீ பேசியிருக்கிறார். “தேசத் தலைவர் என்று வந்துவிட்டால், மக்களின் பார்வையும், விமர்சனங்களும் நம் மீது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியான விமர்சனங்களைக் கருத்தில்கொண்டு, ஆட்சிமுறையில் மக்களுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். என் பார்வையில் கருத்துச் சுதந்திரம் அவசியம். எனினும், அது சரியான அளவுகோலில் உரிய எல்லைக்குள் இருப்பதும் அவசியம்.

சிங்கப்பூரை ஆட்சி செய்பவர் எவராக இருந்தாலும், அவரிடத்தில் இரும்பு போன்ற திடம் இருக்க வேண்டும். ஏதோ, வந்தோம் சென்றோம் என்று விளையாட்டாக ஆட்சி செய்துவிட்டுப் போக இது ஒன்றும் சீட்டாட்டம் இல்லை. சிங்கப்பூரை வளர்க்க நான் என்னுடைய மொத்த ஆயுளையும் அர்ப்பணித்திருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை, நாளை நான் இறந்த பிறகும், என் நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் அச்சுறுத்தல் நேர்ந்தால், கல்லறையில் இருந்தும் எழுந்துவருவேன்!”

இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு!

லீக்கு தமிழர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வெளிப்படையாக இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.

“இலங்கை கட்டாயம் ஒரு சந்தோஷமான நாடாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பார்த்துப் பொறுக்க முடியவில்லை. இலங்கையில் சிங்களர்கள் இருந்த காலம் தொட்டுத் தமிழர்களும் இருந்துவருகின்றனர். அந்த நிலப்பரப்பில் இரு இனத்தவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், திறமையில் தமிழர்களைக் காட்டிலும் பின்தங்கிய சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால் தமிழர்களைக் கொன்றுவருகின்றனர். அதை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடுத்த போர் என்னைப் பொறுத்தவரை நியாயமானதே!

நான் ராஜபக்சவின் சில பிரச்சாரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவர் ஒரு ‘சிங்கள வெறியர்’ என்றுதான் தோன்றுகிறது. வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யக் கூடியவர் என்று புரிகிறது.

இந்தப் போரில் தமிழர்களின் தோல்வி தற்காலிக மானது. அவர்கள் வெகு நாட்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. கூடிய விரைவில் மீண்டு வருவார்கள்” என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருக்கிறார்.

– ஏ. ஆதித்யன்,

சிங்கப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் – எழுத்தாளர்,

இந்தோனேசிய http://www.ayobis.com நிறுவனத்தின் முதன்மை நிறுவனர், தொடர்புக்கு : adi1101990@gmail.com 

Source:::: http://www.tamil.thehindu.com

Natarajan

Germanwings Flight Crash… Is A 320 Still a Safer Aircraft …?

IT IS technologically advanced and used by major airlines across the globe with one taking off on average every two seconds.

However, despite two major crashes involving an A320 in the space of just three months, the jet remains one of the world’s safest.

That’s the view of leading aviation expert Neil Hansford who told news.com.au that the plane was so technologically advanced it practically flew itself.

The chairman of Strategic Aviation Solutions, with more than 30 years experience in the industry, said if there was a major design fault in the plane the world would have known about it before now.

His comments comes in the wake of Germanwings Flight 4U9525, which crashed on a remote mountain range in the French alps overnight.

Germanwings Flight 4U9525 was travelling from Barcelona, Spain, to Dusseldorf, Germany, when at approximately 10.30am local time on Tuesday, the plane lost radio contact.

The flight was just 46 minutes in when trouble struck, plummeting 31,200 feet in 8 minutes.

It is the second major crash involving an A320 in just three months.

AirAsia Flight QZ8501 crashed into the Java Sea in stormy weather on December 28 during what was supposed to be a short trip from the Indonesian city of Surabaya to Singapore.

In 30 seconds, it rose from 32,000 feet to 37,400 feet, then dipped to 32,000 feet, before descending for around three minutes.

The plane’s stall alarms were going off for four minutes before the crash.

In both cases Mr Hansford said he didn’t believe it was a fault of the plane itself which caused them to crash and added investigators couldn’t rule anything out.

“An A320 takes off every two seconds around the world,” Mr Hansford said,.

“The A320 is a sophisticated aircraft which is not flown in the traditional way in that the computer flies the aircraft, the pilot operates the computer.”

Mr Hansford maintained despite the two crashes, the plane remained one of the world’s safest and it was just sheer coincidence and force of numbers that two crashes had taken place in as many months.

He still believed the A320 was the trump aircraft as evidenced by the sheer numbers of them flying popular flight routes including between Paris and London and Sydney to Melbourne.

Mr Hansford said the plane’s hi-tech systems meant if there was a fault in the plane, or if an engine had failed, the pilot would have had time to save it.

He also said the black box would reveal further details which would come to light sooner than in recent crashes including the Air Asia and Malaysian crashes last year.

“Unlike Malaysian and Indonesian authorities however, the French and German authorities and their carriers will be more transparent,” he said speaking of the retrieval of the black box and the release of information.

The A320 remains a popular aircraft among the world’s airlines with a good safety record.

The A320 remains a popular aircraft among the world’s airlines with a good safety record. Source: AP 

THE A320:

Regarded as a workhorse of modern aviation, similar to the Boeing 737, there are more than 3600 of them in operation worldwide, according to Airbus, which also makes nearly identical versions of the plane, the smaller A318 and A319 and the stretched A321. An additional 2500 of those jets are flying, according to AFP.

The A320 family has a good safety record, with just 0.14 fatal accidents per million takeoffs, according to a Boeing safety analysis.

This particular jet was delivered to Lufthansa — the parent company of Germanwings — in 1991 and had about 58,300 flight hours over 46,700 flights.

The airline is the budget offshoot of major carrier Lufthansa, and this is the first deadly incident in its 13-year history.

This A320 had also passed its last routine check on Monday and its captain had more than 10 years flying experience, Sky News reported.

Airbus is investigating whether a mechanical fault is to blame, however this particular Airbus A320 of Germanwings underwent full maintenance in 2013, according to the head of the company Thomas Winkelmann.

“But we cannot rule out a structural issue: a failure of a part of the structure caused by an absence of detailed maintenance or the wear of a particular element that will become apparent after tens of thousands of flight hours,” the former investigator said.

“In the history of aviation, it’s only when accidents occur that we are able to detect unforeseen weaknesses on parts of a plane where maintenance procedures were not thought necessary.”

LOW COST, LOW SAFETY?:

Xavier Tytelman, an air safety specialist told AFP while this particular plane was 24 years old, that didn’t necessarily mean it was less safe than newer planes.

While new aircraft are more efficient which gave airlines who use them a major cost advantage as fuel can account for a quarter to half of operating costs, it didn’t mean they couldn’t be used by budget carriers.

According to him, new planes can also mean lower maintenance costs. Each four or five years passenger jets require an extensive overhaul, which is both costly in itself and requires taking the plane out of service for weeks.

“Low-cost airlines don’t have any incentive to invest in such maintenance and just before planes arrive at that age they sell them,” Mr Tytelman told AFP.

However the Germanwings A320, was probably in its final years of commercial service and pulling old planes out of service wasn’t an issue of safety but rather economics.

“Low cost, that means less comfort, but not less safety,” Mr Tytelman said.

‘EASY TO BLAME A DEAD MAN’:

Another international aviation expert Arthur Wolk told 3AW Breakfast that the cause of the crash would be determined really quickly.

“If there was not foul play, and that will be determined pretty quickly, it looks like another example of the angle of attack sensors being iced over,” he told the program.

He speculated that “angle attack sensors” at the front of the aircraft may have “iced over”, causing the plane to “pretty much go straight down”, which was the same problem that contributed to the 2009 Air France crash.

“It’s easy to blame a dead man … but this is a problem even the best pilots can’t handle,” he told the radio program.

Two planes of German airline Germanwings are pictured at Cologne/Bonn airport yesterday.

Two planes of German airline Germanwings are pictured at Cologne/Bonn airport yesterday. Source: AFP 

SOURCE:::: http://www.news.com.au

Natarajan

” சித்திர ராமாயணம் ….”

Sri Rama Navami March,28 2015
ஸ்ரீ ராம ஜயம்
 
ஸ்ரீராம நவமி இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது .
கம்பரின் வரிகளையும் படித்துப் பாரீர்
 ..
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திர மாகிய
இராம நாமத்தின் மகிமையை மிக அற்புதமாக விளக்குகிறது.
ஸ்ரீ இராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீ இராமரை வழிபடுவோர்
ஸ்ரீ இராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சனேயர் அருளையும் பெறுவர் என்பது திண்ணம் ..
ராமாயணம் சென்று கேட்க முடியாதவர்கள்
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் ,
பூஜை செய்யமுடியாதவர்கள் .
குறைந்த பட்சம் இந்தபதிவை முழுமையாக படிக்கலாம்
.ராமர் அருள் பரிபூரணமாக கிடைக்கும் .
சித்திர ராமாயணம் …படம் பார்த்து ராமாயணத்தை அசை போடலாம்
SOURCE:::::: input from a friend of mine
Natarajan

Joke of the Day…” If Words and Figures do not Match …” !!!

It was five in the evening, the bank was almost closed. All of a sudden, the Branch Manager received a phone call from a lady.
 
In a sweet voice she said – sir I urgently need Rs.10000. I’ll reach your bank in 10 minutes. Could you please wait for me?
 
 
Her voice was so captivating that the Branch Manager could not say ‘no’.
 
He instructed his cashier to keep the cash ready. The cashier obeyed his boss with great reluctance .
After a while, a dark complexioned lady with ugliest of face and a huge tummy came to the bank, presented a cheque and asked for the money.
 
The BM was taken aback, as he was expecting a cute lady.
 
He immediately told the lady that they had already closed the cash
for the day and she should come next day.
 
The cashier was so furious and he asked the BM, if his intention was to not to pay, why he was made to sit late.
 
BM – It is the Universal rule of banking that……..
.
.
.
.
If words and figure don’t match, payment will be declined. ������
Source::::: input from a friend of mine
Natarajan

Message For the Day…” How to Visualize the Form of God at all Times…”…

There are three stages of sadhana (spiritual practice). They are concentration, contemplation and meditation. Concentration entails fixing your gaze on one form. Contemplation occurs when you are able to perceive the form within you, even in its absence. Meditation means when, as a result of this exercise, this form is permanently imprinted in your heart. If you continue to meditate in this manner, the form will constantly be fixed in your heart. You should not confine your spiritual practices only to concentration and contemplation. While it is true that these are the first steps in your spiritual practices, you must progress further; you must transform concentration to contemplation, and then contemplation into meditation. When you carry this out, you will continue to visualize the form of God at all times. The ancientrishis (seers) adopted this form of meditation. That is why God manifested before them whenever they wished, talked to them and fulfilled their desires.

Sathya Sai Baba