வாரம் ஒரு கவிதை …” மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு “

 

மல்லுக்கட்டும்  ஜல்லிக் கட்டு …
……………………………………………………
துள்ளி வரும் காளை …அதை அடக்கும்
துடிப்புடன்  களத்தில் இளம் காளையர் !
இது போர்க்களம் இல்லையே…ஒரு
வீர விளையாட்டுக்களம்  தானே !
ஜல்லிக்கட்டு …இந்த ஒரு பெயரே
உசுப்பிவிடுமே  தூங்கும் இளைஞரை !
காளை மாட்டுடன் மல்லுக்கட்டிய  ஒரு
வீரர் கூட்டம் இன்று ஜல்லிக்கட்டுக்காகவே
மல்லுக்கட்டும் ஒரு அவலம் !  ஜல்லிக்கட்டு
நடக்குமா நடக்காதா ..இந்த கேள்விக்குறி
ஜல்லிக்கட்டுக்கு மாத்திரம் அல்ல …ஒரு
கூட்டத்தின் குறி நம் ஜல்லிக்கட்டு மாட்டின் மீதே !
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை
படித்ததில்லையா நாம் ?  அதே கதைதான்
மீண்டும் அரங்கேற்றம் இன்று  ஜல்லிக்கட்டில் !
ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் சந்ததிக்கு
சத்தமில்லாமல் ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்
துடிக்கிறது ஒரு கூட்டம் இன்று… அவர்
ஆடும் ஆட்டம் ஒரு “சோதனை  ஓட்டம் “
இன்று… கேட்கவே வேதனை நமக்கு !
சோதனை எது  வந்தாலும்  சாதிக்க வேண்டும்
நாம் ! மல்லுக்கட்டி  மீட்க வேண்டியது வெறும்
ஜல்லிக்கட்டு போட்டியை  மட்டுமல்ல !
நம்  ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் வாழ்வையும்  அதன்
இன வளர்ச்சியையும்  சேர்த்துதான் !
மல்லுக்கட்டுவோம்  ஜல்லிக்கட்டுக்கு …ஜெயித்துக்
காட்டுவோம் இந்த  உலகுக்கு நாம் யார் என்று !
My Tamil Kavithai  as published  in  www.dinamani.com
Natarajan

New Year Greetings and Wishes …

 

da8d8-baba2

God does not have an iPhone or Android Mobile…No iPad with  Him either..
But HE is the  favourite contact to all of us !
HE does not have any account in FaceBook ..But HE is our Best friend !
HE does not have any handle in Twitter…but we all follow HIM !
HE does not have internet with Wifi…but we are all connected to HIM !
We can call HIM at any time  and HIS customer Service never puts us on ” Hold” !
HE loves all of us equally without any bias or discrimination ..and no conditions apply.!
 We  pray to HIM that HE continues to remain in our  contact and shower HIS Blessings upon
all of us in the Year 2017 too as HE was doing all these years !
Let this request be the only Prayer to God from all of us on this Day !
Best wishes for a Happy , Healthy and  Prosperous New Year to you and your loved ones .
Natarajan
28th Dec 2016

வாரம் ஒரு கவிதை…” சுனாமி சுவடுகள் ” …

 

ஆழிப்  பேரலை  இங்கு பதித்த சுவடுகள் என்றும் 
அழியாத வடுக்கள் அன்றோ ! ஆண்டு பன்னிரண்டு 
ஆனாலும் மறக்க முடியுமா  அந்த நாளை இன்றும் ?
சுனாமியின் சுவடுகளில் கால் பதித்து  மரம் பல பலி 
கொண்டு ஒரு நகரின் வாழ்வு  முடக்கி " வார்தா "
ஆடிய ஆட்டம் ஆழிப் பேரலையின் மற்றுமொரு 
அவதாரமா ?  பஞ்ச பூதங்கள் வரிசை கட்டி கொஞ்சமும் 
இரக்கம் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக   அசுர ஆட்டம் போடுவது  
ஏன்  இந்த இசை  விழா மாதத்தில் மீண்டும்  மீண்டும் ?
வசை பாடவில்லை நான் உங்களை பஞ்ச  பூதங்களே! 
அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உங்கள் மீது !
எங்களைக் காக்கும் தாய் அல்லவா நீங்க ...பிள்ளைகள் 
எங்களை நீங்க தண்டித்தது போதும் ...உங்க அடிகளின் 
வடுக்கள் கட்டாயம் தடுக்கும் எங்களை உங்கள் கண்டிப்பான 
நெறி முறை  விதி முறை  மீறாமல் இனிமேல் ! நம்புங்க எங்க வாக்கை !
நம்பி எங்களை வழி நடத்துங்க ஒரு தடங்கல்  இல்லா 
பாதையில் நாங்கள்   எங்கள் பாத  சுவடு பதிக்க

Natarajan

www.dinamani.com ---26th Dec2016

 

Joke of the Day…”Won’t your wife be furious…” ?

 

A man was walking in the city, when he was accosted by a particularly dirty and shabby-looking bum who asked him for a couple of dollars for dinner.

The man took out his wallet, extracted two dollars and asked, “If I gave you this money, will you take it and buy whiskey?”

“No, I stopped drinking years ago,” the bum said.

“Will you use it to gamble?”

I don’t gamble. I need everything I can get just to stay alive.”

“Will you spend the money on greens fees at a golf course?”

“Are you NUTS!? I haven’t played golf in 20 years!”

The man said, “Well, I’m not going to give you two dollars. Instead, I’m going to take you to my home for a terrific dinner cooked by my wife.”

The bum was astounded. “Won’t your wife be furious with you for doing that? I know I’m dirty, and I probably smell pretty bad.”

The man replied: “That’s OK. I just want her to see what a man who’s given up drinking, gambling and golf looks like.”

Source…www.ba-bamail.com

Natarajan

வாரம் ஒரு கவிதை… ” புதையல் ” !

 

புதையல்
……….
கையில் இருக்கும் பொருளின் மதிப்பு தெரியாது நமக்கு
அது மண்ணுக்குள் புதையும் வரை … உறவுகளும்
இதில் அடங்கும் !  அன்பும் ஆதரவும்  தேடும்
முதியோரை உனக்கு கிடைத்த  புதையலாக
நினைத்து அரவணைத்தால் வேறு  எந்த ஒரு புதையலையும்
தேடி என்றும் அலைய வேண்டாம் தம்பி நீ !
காலம் மாறும்!  காட்சியும் மாறும்!  நீயும் ஒரு
புதையலாக தெரிய வேண்டும் ஒரு நாள் உன் பிள்ளைக்கு!..இந்த
புதையல் மட்டும் மண்ணில்  புதையாமல் வளர வேண்டும்
ஒரு மரமாக உன் வீட்டில் என்றும் ! புதையல் மரம்
துளிர்த்து தளிர்த்து வளர விதைத்திடு ஒரு விதை  நீ இன்று !
Natarajan
http://www.dinamani.com  dated 28th Nov 2016

படித்து நெகிழ்ந்தது …” பாசத்தின் வாசனை “

 

நவம்பர் 8, 2016

இரவு. டி.வி. சீரியலில், ஏதோ காரணத்துக்காக கதையில் வரும் 15 கேரக்டர்களும், ஒரே சமயத்தில் ‘க்ளோஸ் அப்’பில் அதிர்ச்சியடைந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஃப்ளாஷ் நியூஸில் ஓடிய ‘ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற செய்தியைப் பார்த்து இல்லத்தரசிகள், சீரியல் கேரக்டர்களை விட நூறு மடங்கு அதிர்ந்துபோனார்கள். ஏனெனில் அவர்களிடம் கொஞ்சம் பணம் இருந்தது. அது அவர்களின் கணவர்களால் வரி செலுத்தப்பட்ட பணம்தான். ஆனால் கணவர்களுக்குத் தெரியாத கறுப்புப் பணம்!

நான் இந்தச் செய்தியைப் பார்த்தபோது, ஒரு நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்படும் திட்டம் என்ற முறையில் எனக்கு சந்தோஷம்தான். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சின்னக் கவலை. என் கையில் சில்லறையாக நூற்றைம்பது ரூபாய்தான் இருந்தது. ஆனால், என் மனைவி மட்டும் இது குறித்து எந்தக் கவலையும் படாமலிருப்பதைப் பார்த்து உஷாரானேன்.

நிச்சயமாக இவள் கையில் ஏதோ பணம் இருக்கிறது. “உன்கிட்ட ஏதும் பணம் இருக்கா?” என்றேன் பணிவாக. “ம்… ஆயிரம் ரூபாய் இருக்கு…” என்ற என் மனைவி, பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு தண்ணீர் ஜக்கின் மூடியைத் திறந்து காண்பித்தாள். உள்ளே நூறு ரூபாய் நோட்டுகளில், நீண்ட நாட்கள் கழித்து வெளிச்சத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் மகாத்மா காந்தி என்னைப் பார்த்துச் சிரித்தார்.

இதுபோல் அன்றிரவு நாடு முழுவதும், லட்சக் கணக்கான அஞ்சறைப் பெட்டிகள், உண்டியல்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உளுத்தம்பருப்பு டின்கள் திறக்கப்பட்டன. தங்களுக்குத் தெரியாமல் மனைவிகள் பணம் சேர்த்து வைத்ததற்காகக் கோபப்படுவதா, இல்லை, இக்கட்டான தருணத்தில் சில்லறை நோட்டுகள் தந்து கைகொடுப்பதற்காகச் சந்தோஷப்படுவதா என்று புரியாமல் கணவர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள். ஒரு பெண்மணி பல்லாண்டுகளாகச் சேமித்து வைத்திருந்த தன் உண்டியலை உடைத்து எண்ணி, அதில் இருபதாயிரம் ரூபாய் இருப்பதைப் பார்த்து அவரே பதறிவிட்டார்.

பணிக்குச் செல்லாத இல்லத்தரசிகள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பெரும்பாலும் அவை ஒவ்வொரு நோட்டாக, தனித்தனியாக நான்காக மடித்து வைக்கப்பட்டிருக்கும். அவை நெடுநாட்களாக மடிக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதால், அதனைப் பிரித்தாலும், நோட்டின் மடிப்புகள் தெளிவாகத் தெரியும்.

மேலும் இல்லத்தரசிகளின் பணத்துக்கு ஒரு தனி வாசனையும் உண்டு. அஞ்சறைப் பெட்டியில் வைத்திருந்த பணத்தில் மசாலா வாசனை. கோதுமை மாவு டப்பாவில் வைத்திருந்த பணத்தில் கோதுமை மாவு வாசனை. சர்ஃப் டப்பாவில் இருந்த பணத்தில் சோப்புப் பவுடர் வாசனை. இந்த வாசனை நோட்டுகளை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

நான் சென்னைக்கு வேலைக்கு வந்த புதிதில், எனது மாமா வீட்டில் தங்கியிருந்தேன். ஏறத்தாழ எட்டு வருட காலம் படுத்த படுக்கையாக இருந்த என் பாட்டியை என் மாமாவும், அத்தையும் நன்கு பராமரித்துவந்தார்கள். ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பாட்டி, “டேய்… கதவைச் சாத்திட்டு வா…” என்று கூற, நான் கதவைச் சாத்திவிட்டு வந்தேன். அவர் தனது கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையின் தலைமாட்டைத் தூக்கினார், அங்கு நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த, ஏராளமான பத்து ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்தார். பின்னர் தலையணைக்குக் கீழ், மருந்து டப்பாவிலிருந்து என்று வரிசையாக அவர் பத்து ரூபாய் நோட்டுகளாக எடுக்க, நான் அதிர்ந்துபோனேன். என்னிடம் ரகசியம் பேசுவது போல், “எவ்வளவு இருக்குன்னு எண்ணு” என்றார். நான் எண்ணிவிட்டு, “ரெண்டாயிரத்து நானூறு ரூபாய்…” என்றபடி பணத்தை முகர்ந்து பார்த்தேன். அதில் ஜெலுஸில், தைலம், மாத்திரைகள் என்று எல்லாம் கலந்த மருந்து வாசனை அடித்தது.

என் மாமா பல ஆண்டுகளாக இளநீர் வாங்குவதற்காக, லிம்கா வாங்குவதற்காக என் பாட்டிக்குக் கொடுக்கும் காசிலிருந்து சேர்த்த பணம் அது. நான், “உங்களால நடக்கவே முடியாது. இந்த வயசுல பணத்தைச் சேர்த்து என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டபோது, அதற்கு அவரிடம் பதில் இல்லை. வெளியே கத்திக்கொண்டிருந்த காகத்தை ஜன்னல் வழியாக நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர், “தெரியல… இப்படியே சேர்த்துப் பழக்கமாயிடுச்சு…” என்று பணத்தை வாங்கி மீண்டும் மெத்தைக்குக் கீழ் வைத்துக்கொண்டார். இனி அந்தப் பணத்தை அவர் செலவழிக்க வழியே இல்லை என்ற நிலையிலும், அவர் சேமித்துக்கொண்டே இருந்தார். அவர் இறந்த பிறகு, அவருடைய பீரோவிலும், பெட்டியிலும் ஆங்காங்கே செருகி வைத்திருந்த பணத்தை எண்ணியபோது எட்டாயிரம் ரூபாய் இருந்தது. எல்லாம் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த தனித் தனி நோட்டுகள்.

பல ஆண்டுகள் கழித்து, அதே போன்ற நோட்டுகளை மீண்டும் பார்த்தேன். கடந்த ஆண்டு என் அம்மா சென்னை வந்து விட்டு ஊருக்குத் திரும்பினார். எக்மோரில் ரயில் ஏற்றிவிடுவதற்காகச் சென்றிருந்தேன். ரயில் கிளம்பும் நேரத்தில் பேச்சுவாக்கில், “நாளைக்கு என் பிறந்த நாள்” என்றேன். “ஆமாம்டா… நான் மறந்தே போயிட்டேன்” என்று ஒரு வினாடி யோசித்துவிட்டு, தனது பர்ஸை எடுத்தார். கார்டு விசில் ஊதும் சத்தம் கேட்டது. “அம்மா… நான் கிளம்புறேன்…” என்று கூற, “இருடா” என்ற அம்மா பர்ஸில் துளாவி நான்கு, நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி வெளியே எடுத்தார், “இதுல எதாச்சும் ட்ரெஸ் வாங்கிக்கோ…” என்று பணத்தை நீட்டினார். “என்கிட்ட பணம் இருக்கும்மா” என்றபோது ரயில் நகர ஆரம்பித்தது. “உன்கிட்ட இல்லன்னா கொடுக்குறேன்? வாங்கிக்க” என்று என் கையில் பணத்தைத் திணித்தார்.

ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் மகனின் பிறந்த நாளுக்கு, எந்த வேலையிலும் இல்லாத, ஒரு அறுபத்தைந்து வயதுத் தாய் கொடுத்த காசு அது. எனது கல்லூரிக் காலத்தில், அம்மா என் மீது கோபமாக இருக்கும்போதெல்லாம், “தாயே… இந்தப் பாவிய மன்னிச்சுடு” என்று அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட, அவர் சிரித்துவிடுவார். அதன் பிறகு நெடுநாள் கழித்து அன்று ஓடும் ரயிலில், நான்கு பேர் வேடிக்கை பார்க்க, மெல்லக் குனிந்து என் அம்மாவின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு வேகமாக ரயிலிலிருந்து இறங்கினேன். ரயில் என்னைக் கடந்து சென்றதும், அந்த நோட்டுகளைப் பல வினாடிகள் பார்த்தேன். நீண்ட காலமாக மடித்து வைக்கப்பட்டு, மொடமொடப்பாக இருந்த நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணினேன். ஆயிரம் ரூபாய் இருந்தது. முகர்ந்து பார்த்தேன். அதில் அந்துருண்டை வாசனை வந்தது. அம்மா அதை பீரோவில் வைத்திருந்திருப்பார்.

அதன் பிறகு எத்தனையோ மாதங்கள் ஓடிவிட்டன. இருந்தாலும் எழும்பூர் ரயில் நிலையத்தில், அந்துருண்டை வாசனை அடிக்கும் அந்தப் பழைய நூறு ரூபாய் நோட்டுகளுடன், நான்காம் நம்பர் பிளாட்ஃபார்மில் நின்ற அந்த இரவை இன்னும் என்னால் மறக்கவே முடியவில்லை. இன்று உங்கள் கையில் கிடைக்கும் ஒரு மடிப்புக் கலையாத நோட்டில், ஏலக்காய் வாசனையோ, மஞ்சள் தூள் வாசனையோ, தைல வாசனையோ அடித்தால், அது ஒரு தாய்க் காசின் வாசனை. அது உங்கள் தாயின் காசாகக்கூட இருக்கலாம்!

(

ஜி.ஆர். சுரேந்தர்நாத்

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com

http://www.tamil.thehindu.com

Natarajan

வாரம் ஒரு கவிதை …”வழி தவறிய பயணங்கள் ” !!!

 

 “வழி தவறிய பயணங்கள்”
………………………………………………………..
வழி தவறிய பயணம் நெறி தவறி தொடர்ந்தால்  அது
செல்லாத காசுக்கு சமம் !..சொல்லாமல் சொல்லும் அது உன் வாழ்க்கை
ஒரு செல்லாத காசு என்று …! பகிர்ந்து உண்ணும் பண்பும்  நலிந்தோரிடம்
அன்பு காட்டும் மனமும் இல்லாத ஒருவன் வாழ்க்கை பயணம்
கரை சேர்க்காது அவனை ஒரு நாளும் ! நெறிமுறை எதுவும்
இல்லாத வாழ்வும் கறை படிந்த கரங்கள் சேர்க்கும் பணமும்
தரை தட்ட வைக்கும் அவன்  வாழ்க்கை பயணக் கப்பலை !
வாழ்க்கை பயணத்தில் கரை சேர வழி பல உண்டு …ஒரு
வழி தவறினாலும்  நெறி பிறழாமல் ஒருவன்  தொடரும்
பயணம் சேர்க்கும்  செல்வாக்கு அவன் வாழ்வுக்கு !
Natarajan
http://www.dinamani.com  dated 14th Nov 2016

வாரம் ஒரு கவிதை… ” பட்டாசு சத்தம் ” !

 

பட்டாசு  சத்தம்
……………
பட்டாசு சத்தத்தில் பறக்க   மறந்தன பறவைகள் …கண்
திறக்காமல் பயந்து  அழுதன    சிறு குழந்தைகள் !
மறக்காமல்  இனிப்பு சுவைத்து வாழ்த்துக்கள் சொன்னது
“பெரிய” மனிதர்கள் நாம் மட்டுமே !  !   ஆனால் …வெடித்த
பட்டாசு சத்தத்தில் நாமும் மறந்தது நமக்கு பட்டாசு கொடுக்கும்
அந்த சிவகாசி சிறாரின்  அவல நிலையை !…வான வேடிக்கை
வெளிச்சத்திலும் நாம் நினைத்துப் பார்க்க   மறந்தது ஒரு சிவகாசி தொழிலாளியின்
இருண்ட   வாழ்க்கையை …!  அது மட்டுமா ?
நீரின்றி வாடும் தன்  நிலம் பார்த்து சத்தம்  போட்டு
அழும் அந்த  உழவனின்  மனக்குமுறலை  மறைத்ததும்
இந்த பட்டாசு சத்தம்தான் !
சுத்தமான காற்று  சத்தமில்லாமல்  தொலைந்து
மறைந்து போனதும் இந்த பட்டாசு  சத்தம் போட்டு
விட்ட கரும் புகையினால்தானே !
தீப ஒளி மட்டும்  ஏற்றி  புத்தாடையுடன் பலகாரமும்  நலிந்தோர்
வீட்டுக் குழந்தைகளுடன்   பகிர்ந்து மகிழும் பண்பை நம் பிள்ளைக்கு
நாம் போதிக்க வேண்டும் ஒரு பால பாடமாக ! இந்த பாடம்
ஒரு நல்ல வித்தாகும் பட்டாசு சத்தமும் புகையும் இல்லா தீபாவளி
திருநாள் ஒருநாள் பூத்து மலர !
Natarajan
http://www.dinamani.com  …on 1st Nov 2016

சஷ்டி கவசம் பிறந்த கதையை தெரிஞ்சுக்கோங்க! …

Source..    Valaiyapettai R. Krishnan in http://www.vikatan.com

Natarajan
உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிந்த பெரும்பாலான இந்து மக்கள் இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் தினமும் ஒலிக்கும் திருமுருகனின் தெய்வீகத் தமிழ்ப்பாடல் அது. படிப்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும் மந்திர மறை நூல்! அது என்னவென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே!

mur_1_18161

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட…

என்று தொடங்கி கேட்கும் இடங்களிலெல்லாம் நம்மைத் திரும்ப உச்சரிக்கவைக்கும்; உள்ளத்திலும் உடலிலும் அதிர்வு தரும் ஆற்றல் மிக்க அழகு முருகனின் அருந்தமிழ்ப் பாமாலை. அதுதான் அனைவரும் அறிந்த கந்தர் சஷ்டி கவசம். இதனைப் பாடியவர் தேவராய சுவாமிகள் என்னும் அருளாளர். அவர் இக்கவசத்தைப் பாடிய பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.

ஒருமுறை, பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் சென்றார் தேவராயர். மலையைச் சுற்றி கிரிவலம் வந்தார். அங்குள்ள மண்டபங்களில் உடல்நோயால் பீடிக்கப்பட்டவர்கள். மனநோயால் வருந்துவோர், வறுமையால் வாட்டமுற் றோர் எனப் பலர் அழுவதும் அரற்றுவதும் கண்டு மனம் வருந்தினார். அவர்கள் அனைவரும் நலம்பெற ஞானபண்டிதன் வழிகாட்ட வேண்டும் என்று மனத்தில் உறுதிகொண்டார். பழநியாண்டவர் கோயில் மண்டபத்தில் துயில் கொண்டார். அன்றிரவு அவரது கனவில் பழநியப்பரமன் பிரசன்னமானார்.

mur_2_18409

‘உன் எண்ணம் ஈடேற அருளினோம்.பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகிலுள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடு!’’ என்று ஆசியளித்து கந்தவேள் மறைந்தார்.

உடனே பரவசத்துடன் எழுந்தார் தேவராயர். ‘‘அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!’’ என்று ஆடிப்பாடி மகிழ்ந்தார். மயில்மேல் வலம் வரும் அயில் வேலனைப் போற்றுவோர்பால் மறலியும் அணுகமாட்டான் என்று முருகன் திருவருளை வியந்து போற்றி பாமாலை சூட்டியருளினார். அதுதான் 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம் என்னும் புகழ்பெற்ற தோத்திரம்.

mur_6_18306

mur_3_18027

பாலதேவராய சுவாமிகள்

கந்தர் சஷ்டி கவசம் பாடிய தேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர், அவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை என்றும், அவர் கணக்கர் வேலை பார்த்தவர் என்றும் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் சில நூல்களில் குறிப்புகள் உள்ளன.

வீராசாமிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லாமல் முருகன் திருவருளால் தேவராயர் பிறந்தார். நன்கு கல்வி கற்று வியாபார நிமித்தமாக பெங்களூரு சென்று அங்கு தமது வணிகத் தொழிலை மேற்கொண்டார். திருவாவடுதுறை ஆதினத்தில் பெரும் புலவராகத் திகழ்ந்த திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பெங்களூர் வந்தபோது தேவராயர் அவரைத் தமது இல்லத்துக்கு அழைத்து உபசரித்து மகிழ்ந்தார்.

பிள்ளையவர்களிடம் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாம் இயற்றிய கவிதைகளை மகாவித்வானிடம் காட்டி பிழை திருத்தம் செய்துகொள்வாராம். தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேட மலை மாலை முதலிய நூல்களை தேவராயர் இயற்றியதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் எழுதியுள்ள மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வரலாற்றில் தேவராயர் அவரது மாணவர் என்பதற்கான குறிப்பு எதுவும் காணப்பெறவில்லை.

mur_4_18407

சஷ்டிக்கவசம் பாடப்பட்டது எந்த ஊரில்?

தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசம் பாடியுள்ளார் என அறிய முடிகிறது. தற்போது அனைவரும் பாராயணம் செய்யும் கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது என்று கூறிகிறார்கள். ஆயினும் இக்கவசத்தின் நிறைவுப் பகுதியில் ‘பழநிமலையின் மீது’ கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிறு  குழந்தை வடிவாகிய முருகப் பெருமானது செம்மையான திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்’ (பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி (225, 226) என்று பாடியுள்ளார். எனவே இக்கவசம் பழநியில் பாடப்பெற்றது என்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றையும், இவ்வரிகளையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.

மேலும் ‘எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய் (156, 157) மைந்தன் என்மீது உன் மனமகிழ்ந்து அருளித் தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்! (198, 199) எனைத்தடுத்து ஆட்கொள் எந்தனது உள்ளம் மேவிய வடிவுறும் ‘வேலவா போற்றி’ (227,228) என்ற வரிகள் மூலம் பழநிப் பரமன் ஆட்கொண்டு இக்கவசம் பாட வைத்ததை உறுதியாகக் கூறலாம். இப்பாமாலையை சிரகிரி எனப்படும் சென்னிமலையில் அரங்கேற்றியதாகச் சிலர் கூறுவர். ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் காணப்பெறவில்லை.

mur_5_18101

கவலைகள் தீர்க்கும் கந்தசஷ்டி கவசம்

இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறு முறை ஓதி ஜபம் செய்து திருநீறணிய எல்லா நோயும் நீங்கும்; நவக்கிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்வர்; என்றும் இன்பமுடன் வாழ்வர் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் தேவராயர்.
‘சரவணபவ’ எனும் திருநாமம் இந்த கந்தர்சஷ்டி கவசத்தின் மூல மந்திரமாகும். இந்நூலின் முதல், இடை, கடை (1, 16, 162, 237) பகுதிகளில் இந்த மூலமந்திரத்தைப் பொருத்தி இதனைப் பாடியுள்ளார் என்று கருத முடிகிறது. முருகனடியார்கள் அனைவரும் விரும்பிப் படிக்க வேண்டும் என்பதற்காக வள்ளியம்மையாரின் குழந்தையாகிய தேவராயன் இயற்றியதாகக் (கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை) குறிப்பிடுகிறார். கவசத்தின் ஒவ்வோர் அடியும் கந்தசுவாமியின் திருக்கையிலுள்ள வேலைப் போன்றது.
ஞானாசாரியார் ஒருவரின் மூலம் அந்த அடிகளின் உண்மைப் பொருள்களைத் தெளிவாக உணரலாம். உடல், உள்ளம், உயிர் அனைத்துக்கும் வேலே கவசமாக உள்ளது. கந்தர் சஷ்டி கவசம் மந்திர மறை நூல் என்பது, பாராயணம் செய்து பலன் அடைந்தவர்களது அனுபவ உண்மையாகும்.

mur_7_18532