நகைச்சுவையும், பக்தி சுவையும் வாரி வாரி தந்த வாரியார் !!!

நகைச்சுவையையும், உருக்கும் பக்திச் சுவையையும் தமிழ் உலகிற்கு வாரி வாரித் தந்தவர் வாரியார்.

இன்று வாரியார் பிறந்த நாள்….25 August….

“அன்பாய் அரும்பி, தமிழாய் மலர்ந்து, இசையாய் மணம் வீசி, அறமாய்க் காய்த்து, அருளாய்க் கனிந்தவர் – பாமரன் உள்ளத்தில் பரமனைப் பதித்தவர்
ஆன்மிகப் பெருவீட்டின் பூட்டைத் தமிழ்ச் சாவியால் எளியவர்களுக்கும் திறந்து காட்டியவர்; – பக்திச் சுவை ஊட்டியவர் -நகைச்சுவையால் உள்ளத்தைத் தொட்டவர். – அதில் உயர்கருத்தை நட்டவர். -தமிழே முருகன், முருகனே தமிழ் என்று கேட்பவரை உருக வைத்தவர் -திருமுருக கிருபானந்த வாரியார்” என்பது குமரி அனந்தன், வாரியார் சுவாமிகளைக் குறித்துக் தீட்டியிருக்கும் அழகிய சொல்லோவியம்.காங்கேயநல்லூரில் 1906 ஆகஸ்ட் 25- ல் பிறந்தவர் வாரியார். அவர்

‘சம்பந்தரைப் போல் தவழ்ந்தபடி, சுந்தரரைப் போல் நின்றபடி, மணிவாசகரைப் போல் இருந்தபடி, அப்பரைப் போல் தள்ளாடியபடி எண்பத்தேழரை ஆண்டுகள் இம் மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டியவர்; நாட்டு மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டியவர். அவரது பேச்சு, எழுத்து, வாழ்வு என்னும் மூன்றையும் இறுதி மூச்சு வரை ஆட்கொண்டிருந்த சுவைகள் இரண்டு. ஒன்று, பக்திச் சுவை; மற்றொன்று, நகைச்சுவை.என்ன வரும்; வராது ஒருமுறை மைசூர் மகாராஜா, “நீங்கள் முருகனுக்கு அதாரிடி என்று கேள்விப்-பட்டேன். முருகனை வணங்கினால் என்ன வரும்?” என்று வாரியாரிடம் கேட்டார். வாரியார், “என்ன வரும் என்பதைப் பிறகு சொல்வேன். என்ன என்ன வராது என்பதை முதலில் சொல்வேன்” என்றார். இப்படிச் சொன்ன உடன், மகாராஜா சிரித்துவிட்டாராம். “முருகனை வணங்கினால் வறுமை வராது, கால பாசம் வராது. இந்த இரண்டிற்குப் பதிலாகச் செல்வம் வரும், ஞானம் வரும். நோயும் துன்பமும் முருகனடியாரை நெருங்க மாட்டா” என்று வாரியார் கூறினார்.

மணிவிழா :

1966-ல் வாரியாருக்கு பெரிய அளவில் மணிவிழா நடத்த வேண்டும் என்று அவரது அன்பர்கள் திட்டமிட்டனர். ஆனால் அவர் விரும்பவில்லை. தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் சொன்ன காரணம்: “சிலர் மணிவிழா என்று ‘மணி’ திரட்டும் விழாவாகச் செய்து கொள்வார்கள். நான் அதை எள்ளளவும் விரும்ப-வில்லை.”சிலர் சிரிக்கவே மாட்டார்கள். சிரித்தால் தம்முடைய பெருமை குறைந்துவிடும் என்று எண்ணி வாழைப் பூவைப் போல் ‘உம்’ என்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டு பரிதாபப்பட வேண்டும் என்பது வாரியார் கருத்து.குடவாசல் சிவாலயத்தில் குடமுழுக்கு நடந்தது. அவ்விழாவில் வாரியார் கலந்து கொண்டு ‘மீனாட்சியம்மை திருமணம்’ என்னும் தலைப்பில் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.இடையிடையே சில நகைச்சுவை இடம்பெற்ற பொழுது பலரும் விழுந்து விழுந்து சிரித்தனர். ஒருவர் மட்டும் சிரிக்கவில்லை. இடையில் வாரியார் சுவாமிகளின் உரையில் ஓர் ஆச்சரியமான நகைச்சுவை வந்தது. எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். இடையில் சிரிக்காமல் இருந்த அந்த அன்பர் சிரிப்பை அடக்க முடியாமல் குபீரென்று சிரித்து விட்டார். வந்தது ஆபத்து. என்ன ஆபத்து என்று கேட்கின்றீர்களா? அவர் வாயில் புகையிலையை மென்று எச்சிலை அடக்கிக் கொண்டிருந்தார். அந்தப் தாம்பூல எச்சில் அருகில் இருந்தவரின் வெள்ளைச் சட்டை, சிவப்புக் கலர் தோய்த்தது போன்ற ஒரு காட்சியை உண்டாக்கியது. சிரிக்காதவர் சிரித்ததனால் இந்தத் தீமை ஏற்பட்டது என இந்நிகழ்வையும் தமது பேச்சுத் திறத்தால் சிரிப்புக்கு உள்ளாக்கினார் வாரியார். ‘சிரிப்பால் விளைந்த தீமை’ என அவர் இதைச் சுவையாகக் குறிப்பிட்டார்.

புத்திசாலி கணவன் :

புத்திசாலிக் கணவனுக்கும் முட்டாள் கணவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? இதோ, வாரியார் கூறுகிறார், ‘வாயை மூடு!’ என்று முட்டாள், தன் மனைவியைத் திட்டுகிறான். ‘நீ அமைதியாக இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?’ என்கிறான் புத்திசாலி. அறிவார்ந்த நகைச்சுவை என்பது இதுதான்!வாரியார் சுவாமிகளைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக ஒரே வரியில் மதிப்பிட வேண்டும் என்றால், இப்படிச் சொல்லலாம்: அவர் சொல்லின் செல்வர், சமயோசிதப் பேச்சில் வல்லவர். ஒருமுறை அவருடைய சொற்பொழிவு நடந்த பொழுது சில பேர் இடையில் எழுந்து வெளியே சென்றனர். அப்பொழுது வாரியார் , ‘சொல்லின் செல்வன்’ என்று அனுமனைக் குறிப்பிடுகிறார்கள். இங்கேயும் சில ‘சொல்லின் செல்வர்கள்’ இருக்கிறார்கள். நான் நல்ல விஷயங்களைச் சொல்லின், அதைக் கேட்காமல் செல்வதைத் தான் சொல்கிறேன்” என்று பேச்சின் இடையே அவர்களை மென்மையாக அங்கதச் சுவையுடன் சாடினார். அதற்குப் பிறகு யாரும் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.

வள்ளி வந்தது எப்படி :

முருகப் பெருமானின் துணைவி வள்ளி நாயகிக்கு அந்தப் பெயர் வந்ததற்கு வாரியார் புதுமையான ஒரு விளக்கத்தினைத் தருவார்:
“முருகப் பெருமானின் மனைவியை ‘வள்ளி’ என்று ஏன் அழைக்கிறோம்? முருகன் நாம் கேட்டதை எல்லாம் தரும் ‘வள்ளல்’. வள்ளல் என்பது ஆண்பால், அதன் பெண்பால் வள்ளி. ஆக, வள்ளலின் மனைவி ‘வள்ளி’ ஆனார்!வாரியார் நகைச்சுவைத் திறனைப் பறைசாற்றும் ஓர் எடுத்துக்காட்டு“கள்ளைக் குடித்தால் தான் போதை தரும் என்பது இல்லை. ‘கள்’ என்று சொன்னாலே போதும். பலர் மயங்கி விடுகிறார்கள். ஒருவரை ‘நீ’ என்று சொல்லுவதற்குப் பதில் ‘நீங்கள்’ என்று சொல்லிப் பாருங்கள். அவர் எளிதில் மயங்கி விடுவார். எல்லாம் அந்தக் ‘கள்’ செய்யும் வேலைதான்.”இதே போல், ‘இல்லாள்’ என்ற சொல்லுக்கு வாரியார் தரும் விளக்கமும் சுவையானது. ‘இல்லாள்’ இல்லத்தை ஆள்பவள். பெண்பாலாகத் தான் குறிப்பிடுகின்றோம். அதையே ஆண்பாலாகச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் ‘இல்லான்’ – ‘பாப்பர்’ என்று ஆகிவிடும். ஆகவே தான் பிச்சைக்காரன்கூட ‘அய்யா, பிச்சை’ என்று சொல்ல மாட்டான்; ‘அம்மா, பிச்சை’ என்று தான் சொல்லுவான். அந்தப் பிச்சைக்காரனுக்குக் கூடத் தெரியும், அய்யா பேரில் வீட்டு மனை இருக்காது என்று! எல்லாமே அம்மா பேரில் தான் இருக்கும். ஆகவே இல்லாள் உயர்ந்தவள் ஆகிறாள்!”

கரூருக்கு வருவாரா?

கரூரில் வாரியார் ஆற்றிய தொடர் சொற்பொழிவு முடிவடையும் நாள். பாராட்டிப் பேசியவர் ஒருவர், ‘மீண்டும் வாரியார் பேச்சை எப்பொழுது கேட்போமோ…?’ என்ற ஏக்கத்தோடு, ‘மீண்டும் கரூருக்கு எப்போது வருவீர்கள் சுவாமி?’ என்று ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு வாரியார், “கரூருக்கா? கரூருக்கு (கருவூருக்கு) மீண்டும் வரக்கூடாது என்பதற்காகத் தானே இத்தனை ஆண்டுகள் இறைவனை வேண்டிப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை மீண்டும் கரூருக்கு வாருங்கள் என்று சொல்கிறீர்களே…?” என்றாரே பார்க்கலாம். அரங்கம் கர ஒலியால் அதிர்ந்தது!வாரியார் மனைவி அமிர்தலட்சுமி காலமானார். மற்றவர்கள் கலங்கினர். அவர் இயல்பாக இருந்தார். “அவளுக்கு உரிய ஸ்டேஷன் வந்தது. இறங்கி விட்டாள். அடுத்த ஸ்டேஷனில் இறங்க நாமும் ஆயத்தமாக இருப்போம்” என்றார். யாரால் இப்படிக் கூற முடியும்? வாழ்வில் இடுக்கண் வந்து தாக்கும் வேளையிலும் எவரால் இவ்வாறு நகைச்சுவை உணர்வுடன் பேச முடியும்?
-முனைவர் இரா.மோகன், in Dinamalar.com

Natarajan

” வயது 94…. யோகா 100 ….யூ ட்யூப் யோகா பாட்டி, ஞானம்மாள் !!!

  •   

94 வயது பாட்டியைக் குறித்த நம் பொதுவான சித்திரம் என்ன? உடல் தளர்ந்து, தோல் சுருங்கி, தள்ளாட்டத்துடனோ, கம்பு ஊன்றியோ நடப்பார் என்றுதானே நினைப்போம். ஆனால் கோயம்புத்தூரைச் சேர்ந்த நானம்மாள் பாட்டி தன் உடம்பை நாணில் இருந்து புறப்படுகிற அம்புபோல உறுதியுடன் வைத்திருக்கிறார். கைகள் இரண்டையும் தரையில் ஊன்றியபடி முழங்கால்களை மடித்து அந்தரத்தில் நிற்கிறார். தலையும் முதுகும் தரையில் தாங்க, இடுப்பையும் காலையும் மேலே உயர்த்திப் பல நிமிடங்கள் மூச்சைப் பிடித்து இவர் சர்வாங்காசனம் செய்வதைப் பார்க்கும்போதே மெய் சிலிர்க்கிறது. ஹாலாசனம், சிரசாசனம், பத்மாசனம், பாதஹஸ்தாசனம் என்று 50-க்கும் மேற்பட்ட ஆசனங்களை இப்போதும் தொடர்ந்து செய்துவருகிறார்.

யோகா குடும்பம்

கோவை கணபதி பகுதியில் குடியிருக்கும் நானம்மாள் பாட்டியின் சொந்த ஊர் பொள்ளாச்சி காளியாபுரம். இவருடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே யோகா பயிற்றுநர்கள் என்பதால் நடைபழகிய வயதில் இருந்தே நானம்மாள் யோகாவையும் பயின்றார். பிறந்த வீட்டில் பயின்ற கலையை, புகுந்த வீட்டுக்குச் சீதனமாக எடுத்துவந்தார். சித்த வைத்தியக் குடும்பத்தைச் சேர்ந்த தன் கணவருக்கும் யோகாவைக் கற்றுத்தர, அவரும் மனைவியுடன் இணைந்து மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்துள்ளார்.

நானம்மாள் பாட்டியின் மகன்கள், மகள்கள், மருமக்கள், பேரக் குழந்தைகள் அனைவருமே யோகா ஆசிரியர்கள். அவரவர் வசிக்கும் ஊரில் யோகா பயிற்சி மையங்கள் வைத்து நடத்திவருகிறார்கள். பாட்டியுடன் சேர்ந்து இவர்களும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று யோகாவில் சர்வதேச அளவில் தங்கப் பதக்கங்களும், சாம்பியன்ஷிப் கோப்பைகளும் வாங்கிவந்துள்ளனர். இந்த யோகா பாட்டியிடம் யோகா கற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தொடுகிறது.

சித்தமும் யோகமும்

இப்போதும் தன் வீட்டு மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களுக்கு யோகா பயிற்சியை அளித்துவருகிறார். தள்ளாடும் வயதிலும் இப்படித் தளராமல் இருக்க எப்படி இந்த மூதாட்டியால் முடிகிறது?

‘‘எனக்குப் படிப்பு எதுவும் இல்லீங்க. ஒண்ணாங் கிளாஸ் போனதோட சரி. அதுகூட எனக்கு ஞாபகம் இல்லை. சின்னப்புள்ளையில எங்க தாத்தா, பாட்டி யோகா பண்ணும்போது நானும் பண்ண ஆரம்பிச்சுடுவேன்னு எங்க அப்பா, அம்மா சொல்லிக் கேட்டிருக்கேன். யோகா மட்டுமில்லை. கிராமத்து வைத்தியத்துல எங்க குடும்பம்தான் ஊருக்குள்ளே அந்தக் காலத்துல முன்னுக்கு இருந்தது” என்று சொல்லும் நானம்மாள் பாட்டியின் வீட்டில் ஒருவரும் ஊசி, மருந்து ஆகியவற்றை எடுத்துக்கொண்டது இல்லையாம். தன் குடும்பத்தில் அனைவருக்கும் சுகப் பிரசவம் ஆனதற்கும் யோகாதான் காரணம் என்கிறார் நானம்மாள்.

“என் வீட்டுக்காரர் குடும்பம் சித்த வைத்தியத்துல பிரமாதமா இருந்ததால அவர் ரெண்டும் கலந்து சனங்களுக்கு நல்லது செஞ்சார். சித்தமும் யோகமும் ஒண்ணுதான்னு அந்தக் காலத்துல சொல்லுவாங்க. என் சின்னம்மா 103 வயசு வரைக்கும் இருந்தா. நான் யோகா செஞ்சிட்டிருக்கும்போது குழந்தைகளும் செய்ய ஆரம்பிச்சிரும். அப்படித்தான் இப்ப எங்க குடும்பமே யோகாவிலேயே நெறைஞ்சு நிற்குது!’’ என்று பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்ளும் நானம்மாளுக்கு இன்றுவரை மூக்குக் கண்ணாடியின் தேவை ஏற்படவே இல்லை. ஊசியில் நூல் கோத்து, துணி தைக்கிற அளவு பார்வைத் திறன் இருக்கிறது. காது நன்றாகக் கேட்கிறது. சிறு பிள்ளை போல் குடுகுடுவென மாடி ஏறுகிறார். இவரது கை, கால் வீச்சு, மூட்டுக்கள் வளைப்பிற்குச் சிறுமிகளாலேயேகூட ஈடுகொடுக்க முடிவதில்லை.

வீடு முழுக்க பதக்கங்களும், கோப்பைகளுமாக நிறைந்து கிடக்கிறது. ஒவ்வொன்றையும் எங்கே எப்போது வாங்கியது என்பதை நினைவில் நிறுத்திச் சொல்கிறார் நானம்மாள்.

வெளிநாட்டிலும் வெற்றி

திருப்பூரில் இன்டர்நேஷனல் யூத் யோகா ஃபெடரேஷன் சார்பாக 2012-ல் நடந்த போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கிறார். அதில் வெற்றிபெற்றதன் மூலம் அந்தமான் சென்றிருக்கிறார். பிறகு 2013 பிப்ரவரியில் அந்தமானில் 60 பேர் கலந்துகொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

“இந்த வயசுல ஏரோப்ளான் ஏறிப் போக முடியுமான்னு சோதனை போடறதுக்காக வீட்டுக்கே டாக்டருங்க, அதிகாரிங்க எல்லாம் வந்துட்டாங்க. எல்லாம் செக்-அப் பண்ணி பார்த்துட்டு ஏரோப்ளான்லயும் ஏத்தி விட்டுட்டாங்க. ஏரோப்ளான் சொய்ய்…ன்னு பறக்குது. எனக்கு ஒண்ணுமே ஆகலை. எங்கூட வந்த சின்னஞ்சிறுசுக எல்லாம் காதுக்குள்ளே அடைக்குது. காது வலிக்குதுன்னு சொல்லுதுக. சிலது அழுதுடுச்சு. அதுகளை பயப்பட வேண்டாம். அஞ்சு தடவை வாயை நல்லா திறந்து மூச்சுவிட்டு மூடுங்கன்னு சொன்னேன். அதுகளுக்கு வலி போயிடுச்சு!’’ என்று தன் அனுபவத்தைச் சொல்லிச் சிரிக்கிறார் பாட்டி.

மகனின் பெருமிதம்

இவருடன் இணைந்து வீட்டில் யோகா மையத்தை நடத்திவரும் இவருடைய மூன்றாவது மகன் பாலகிருஷ்ணன், “என் அம்மா 50 முக்கியமான ஆசனங்களை இந்த வயதிலும் செய்கிறார். பெண்களில் இந்த வயதில் இவ்வளவு ஆசனங்கள் செய்கிறவர் இந்திய அளவில் இவர் மட்டுமாகத்தான் இருக்கும். யு-டியூபில் யோகா லேடி என்று குறிப்பிட்டால் முதலில் ஒரு அமெரிக்கப் பெண்மணியின் பெயர் வரும். அடுத்ததாக அம்மாவின் பெயர்தான் வருகிறது. அம்மாவின் யு-டியூப் வீடியோவை இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள் என்பது பெருமையாக இருக்கிறது!’’ என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

படங்கள்: ஜெ. மனோகரன்

சென்னை 375: சென்னையில் மிளிர்ந்த பெண்மை !!!

  • ருக்மணி அருண்டேல்
    ருக்மணி அருண்டேல்
  • டாக்டர் லஷ்மி
    டாக்டர் லஷ்மி
  • டி.பி.ராஜலட்சுமி
    டி.பி.ராஜலட்சுமி
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
  • சமைத்துப் பார் மீனாஷி அம்மாள்
    சமைத்துப் பார் மீனாஷி அம்மாள்
  • எம்.எஸ்.சுப்புலட்சுமி
    எம்.எஸ்.சுப்புலட்சுமி

சென்னை தினம் கொண்டாடுகிற வேளையில் சமூக மாற்றத்துக்கான காரணகர்த்தாக்களாகவோ, ஏதோ ஒரு துறையில் களம்கண்ட காரிகைகளாகவோ இருந்த சென்னைப் பெண்களையும் சேர்த்தே கொண்டாட வேண்டும். அப்போதுதான் அந்தக் கொண்டாட்டம் முழுமை பெறும். அந்த வகையில் சமூகத்துக்குப் பங்காற்றிய பெண் ஆளுமைகள் பற்றிய தொகுப்பு:

டாக்டர் லக்ஷ்மி, குடும்ப நாவல்களின் முன்னோடி

திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் என்ற ஊரில் 1921-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி திரிபுரசுந்தரியாகப் பிறந்தவர். இவர் எழுதுவதற்காக வைத்துக் கொண்ட புனைப்பெயர் ‘லக்ஷ்மி’. சிறு வயதில் இருந்து மருத்துவராகும் கனவைச் சுமந்துகொண்டு படிப்பில் சிறந்து விளங்கிய இவர், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அப்போதே கதைகளையும் எழுதத் தொடங்கினார்.

மருத்துவக் கல்விக்கு இனிமேலும் தன்னால் செலவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், படிப்பை நிறுத்திவிட்டு ஊருக்கு வரச் சொல்லியும் இருந்த தந்தையின் கடிதம் திரிபுரசுந்தரிக்கு வேதனையையும் திகைப்பையும் அளித்தது. அந்தச் சமயத்தில்தான் ஒரு அமெரிக்கச் செய்தித்தாள் நறுக்கு அவர் கண்ணில் பட்டது. அமெரிக்க மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர், தன் படிப்புக்காகக் காய்கறி லாரி ஒட்டிச் சம்பாதித்து அதில் வரும் வருவாயில் படித்து அறுவைசிகிச்சை நிபுணர் ஆனார் என்ற தகவல் அவரைப் பொறுத்தவரை திருப்புமுனையாக இருந்தது.

நாள்தோறும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருந்து பிராட்வே வழியாக டிராம் வண்டியில் பயணிக்கும்போது ஒரு நிறுத்தத்தில் ‘ஆனந்த விகடன்’ பெயர்ப் பலகை கொண்ட அலுவலகத்தைப் பார்த்திருந்த திரிபுரசுந்தரி, அதன் ஆசிரியர் எஸ்.எஸ். வாசனைச் சந்தித்து உதவி கேட்க முடிவுசெய்தார். மறுநாளே ஒரு கதையை எழுதி வரச் சொன்னார் வாசன். இரவு முழுவதும் கண் விழித்து ‘தகுந்த தண்டனையா?’ என்ற சிறுகதையை எழுதி அளித்தார். அப்போதைய விகடன் பொறுப்பாசிரியர் கல்கியைச் சந்தித்து ‘லக்ஷ்மி’ என்ற புனைப்பெயரையும் இட்டுக் கொடுத்தார்.

கதை பிரசுரமானது. ஏழு ரூபாய் சன்மானம் கிடைத்தது. அடுத்தடுத்து அவருக்கு உதவும் வகையில் ஒரு சிறுகதைக்கு 10 ரூபாய் வீதம் சன்மானம் அளிக்கப்பட்டது. அடுத்து ஒரு சிறு தொடர் எழுதவும் வாய்ப்பு வந்தது. அதற்குச் சன்மானம் ஐநூறு ரூபாய்.

மருத்துவராக ஆன பிறகு திரிபுரசுந்தரிக்கு அவரது எழுத்தே வாழ்க்கைத் துணையையும் அளித்தது. தாய்மை என்ற மருத்துவ நூலுக்காக விருது வாங்கச் சென்றபோது இலங்கையில் கண்ணபிரான் என்பவரைச் சந்தித்து அது திருமணமாகக் கனிந்தது.

சென்னையில் ஒரு டிராம் வண்டிப் பயணம் மூலம் தனது விதியையே மாற்றிக்கொண்ட குடும்பக் கதையாசிரியர் டாக்டர் லக்ஷ்மிக்கு ‘ஒரு காவிரியைப் போல’ நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசும் கிடைத்தது. இவர் 1987-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி காலமானார்.

சமைத்துப் பார் மீனாக்ஷி அம்மாள், சமையல் உலகின் ராணி

மெட்ராஸின் உணவு வரலாற்றில் மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் எளிமையாகக் காணப்படும் 188-ம் எண் வீட்டுக்கு முக்கிய இடம் உண்டு. 70 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்ப் பெண்களின் கைவிளக்காக விளங்கிவரும் சமைத்துப் பார் புத்தகங்களின் நூலாசிரியர் மீனாக்ஷி அம்மாள் அங்கேதான் வாழ்ந்தார்.

ஒரு இளம் பெண் அடுப்பு முன்பிருந்து பானையைக் கிளறுவது போன்ற கோட்டுச் சித்திரம்தான் சமைத்துப் பார் புத்தகத்தின் அட்டைப்படம். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு புதிதாகத் திருமணமாகி வெளியூர் செல்லும் அனைத்துப் புதுப்பெண்களும் தங்கள் மாமியாரையும், நாத்தனார்களையும் மனம் குளிர்விக்கப் பிரியமான தாயாகத் தன் புத்தகம் வழி உதவியிருக்கிறார் மீனாக்ஷி அம்மாள்.

பதின்ம வயதிலேயே இவருக்குத் திருமணம் நடந்தது. மூத்த மகன் பிறந்த இரண்டு வருடங்களிலேயே மீனாக்ஷி அம்மாளின் கணவர் இறந்துவிட்டார். இரண்டு வயது மகன், ஏழு வயது மைத்துனர், மாமியார் இவர்களைக் காக்க வேண்டிய பொறுப்புகளுக்கு இடையேதான் இந்தப் புத்தகத்தை எழுதினார் மீனாக்ஷி அம்மாள்.

1951-ல் முதல் பதிப்புக் கண்ட சமைத்துப் பார் இதுவரை எண்ணற்ற பதிப்புகளைக் கண்டுவிட்டது. இப்புத்தகம் 1968-ல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில் இதுவரை எழுதப்பட்ட சமையல் நூல்களில் மீனாக்ஷி அம்மாவை அடித்துக்கொள்ள இன்னும் யாரும் வரவில்லை.

ஒரு காலகட்டம்வரை சமையல் புத்தகம் சமையலறைகளில் ரகசியமான ஒன்றாகவே பெண்களால் பராமரிக்கப்பட்டது. சமைப்பதற்காக ஒரு புத்தகத்தின் துணையை நாடுவதை, அப்போதுள்ள குடும்பங்கள் விரும்பவில்லை. திருமணமாகும் வயது வந்த பெண் சமையல் திறனையும் இயற்கையாகப் பெற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்தச் சூழ்நிலையில் அனைத்துத் தமிழ்ப் பெண்களுக்கும் மீனாக்ஷி மாமி ஒரு கேடயமாக மாறியிருந்தார் என்றால் ஆச்சரியமில்லை.

இப்போதும் ஐ.டி துறை சார்ந்து மேல்நாடுகளில் பணிபுரிய வேண்டிய நிலையில் இருக்கும் இளைஞர்களுக்கும், மணப்பெண்களுக்கும் இந்தப் புத்தகம் வரப் பிரசாதமாகவே உள்ளது.

நெருங்கிய குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டு, பெரிதாக இடமாற்றம் இல்லாமல் கூட்டுக் குடும்பமாக இருந்த நிலை மாறிய காலத்தில் எழுதப்பட்ட நூல் சமைத்துப் பார். கூட்டுக் குடும்பங்கள் சிறு குடும்பங்களாக மாறிய நிலையில் ‘சமைத்துப் பார்’ மீனாக்ஷி அம்மாள், எழுதியே லட்சாதிபதி ஆனார்.

டி.பி. ராஜலட்சுமி, தமிழ் சினிமாவின் தலைமகள்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில் இசைக் குடும்பத்தில் பிறந்தவர் டி.பி. ராஜலட்சுமி. தந்தை பஞ்சாபகேச அய்யர், தாயார் மீனாட்சி. அக்கால வழக்கப்படி அவருக்கு ஏழு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டது. வரதட்சிணைக் கொடுமையால் திருப்பி அனுப்பப்பட்டார். மகளின் நிலை கண்டு துயருற்ற அவரது தந்தை மனம் வாடி மரணமுற்றார்.

ராஜலட்சுமி சிறு வயதிலேயே வறுமை வாட்டாமல் தன் விதவைத் தாயுடன் திருச்சி வந்தார். தன் தந்தை கற்றுக்கொடுத்த பாடலை ஒரு கோயிலுக்குச் சென்று மனமுருகப் பாடிப் பார்க்கத் தொடங்கினாள் அந்தச் சிறுமி. அந்தக் குரல்தான் அவருக்கு பின்னர் வாழ்வு தந்தது.

திருச்சியில் சி.எஸ். சாம்பண்ணா நாடகக் குழுவில் தாயும் மகளுமாகப் பணியில் சேர்ந்தனர். முதலில் ஸ்த்ரீபார்ட் வேடங்களில் நடித்த ஆண்களுக்குப் பாடத் தொடங்கிய ராஜலட்சுமி, பவளக் கொடி நாடகத்தில் முதல் முறையாகக் கதாநாயகியாக நடித்தார். நாடக உலகில் ஜொலித்த ராஜலட்சுமியை வெள்ளித்திரை அள்ளிக்கொண்டது. 1929-ம் ஆண்டு வெளிவந்த கோவலன் படத்தில் ராஜலட்சுமி அறிமுகமானார். 1931-ல் பேசும் படமாக வெளிவந்த காளிதாஸில் கதாநாயகியானார். அதில் அவர் பாடி, ஆடிய “மன்மத பாணமடா மாரில் பாயுதடா” பாடலைத் தமிழகமே கொண்டாடியது.

நடிகையாக வெற்றிபெற்ற ராஜலட்சுமி மதுரை வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பல பரிணாமங்கள் இவருக்கு உண்டு. டி. பி. ராஜலட்சுமி இறுதிக் காலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 1964-ம் ஆண்டு சென்னையில் காலமானார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி, காற்றினிலே வரும் கீதம்

மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் தன் 17 வயதில் முதல் முறையாக எம்.எஸ் பாடிய அனுபவம் குறித்து ஒரு ரசிகர் எழுதியுள்ளார். வளரிளம் பருவத்தில் உள்ள பெண் தன் தாய் பக்கவாட்டில் தம்புரா வாசிக்கப் பாடிய போது, அனுபவம் கொண்ட முன்னணி இசைக் கலைஞர்கள்கூட அந்தப் புதிய குரலை அற்புத உணர்வுடன் ரசித்துப் பாராட்டியதாக குறிப்பு உள்ளது. காரைக்குடி சாம்பசிவ ஐயர், எம்.எஸ்ஐப் பார்த்து, “குழந்தே, உனது குரலில் வீணை இருக்கிறது” என்றாராம்.

1916-ல் செப்டம்பர் 16-ம் தேதி சுப்ரமணிய அய்யருக்கும், சண்முகவடிவுக்கும் பிறந்தவர் மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி. அவரது பாட்டி அக்கம்மாள் வயலின் கலைஞர், அம்மா வீணைக் கலைஞர்.

1936-ல் திரைப்படத்தில் நடிப்பதற்காகச் சென்னை வந்தபோது, ஏற்கனவே நாடறிந்த பாடகியாகப் புகழ்பெற்றுவிட்டார். சேவா சதனம், மீரா உள்ளிட்ட படங்களில் பாடி நடித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், எழுத்தாளர் கல்கியின் நண்பருமான டி.சதாசிவத்தை 1940-ல் மணந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இசை சாதனைக்காக பாரத ரத்னா விருது பெற்றார். மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு எனப் பெரிய தலைவர்களை எல்லாம் வசீகரித்த குரல் அவருடையது.

சதாசிவத்தின் மரணத்துக்குப் பிறகு மேடைகளில் பாடாமலேயே இருந்த எம்.எஸ். 2004-ம் ஆண்டு சென்னையில் காலமானார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மருத்துவச் சேவையுடன் மானுட சேவை

பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவது இப்போதும் அரிதாக உள்ள சூழ்நிலையில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உண்மையான புரட்சிப் பெண்ணாக, சமூக மனுஷியாகப் பெரிய சாதனைகளையும் பங்களிப்புகளையும் செய்தவர் முத்துலட்சுமி ரெட்டி.

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள திருக்கோகர்ணத்தில் 1886-ல் நாராயணசாமி, சந்திரம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் படித்த முத்துலட்சுமி, நன்றாகப் படித்ததால் உயர்நிலைப் பள்ளிவரை செல்ல அவருக்கு அனுமதி கிடைத்தது.

மாணவர்கள் தேறுவதே அரிதாக இருந்த மெட்ரிகுலேஷன் பரீட்சையில் வெற்றிபெற்ற ஒரே மாணவியாக முத்துலட்சுமி திகழ்ந்தார். அதற்குப் பிறகு அவர் படிப்பதற்குத் தடைகள் உடைந்தன. 20 வயதில் மருத்துவக் கல்வியில் சேர்ந்து, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெயரைப் பெற்றார். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் சமூகப் பணியிலேயே அவரது ஈடுபாடு இருந்தாலும் சகோதரிகளின் வாழ்வை உத்தேசித்துத் தன் மனமொத்த கணவராக டி.சுந்தர ரெட்டியைத் தேர்ந்தெடுத்தார்.

சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்றத் தலைவர் ஆனார். பின்னர் சென்னை சட்டமன்றத்தின் முதல் துணைத் தலைவராகவும் மெட்ராஸ் மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் இருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் துயரத்தை நேரில் கண்ட முத்துலட்சுமி ரெட்டி, உடனடியாக சென்னையில் அவ்வை இல்லத்தைத் தொடங்கினார். தனது நெருங்கிய உறவினர் புற்றுநோயால் அவதிப்பட்டு இறந்ததைக் கண்டு அரசின் உதவிகூட இல்லாமல் நண்பர்களின் ஆதரவைப் பெற்றுச் சென்னை புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியவர் முத்துலட்சுமி ரெட்டி.

ஆங்கிலேய இந்தியாவில் அப்போது வழக்கத்தில் இருந்த தேவதாசி முறையையும், பால்ய மணத்தையும் ஒழிக்க பெரியார் ஈ.வே.ரா. மூவலூர் ராமாமிருதம் அம்மையாருடன் இணைந்து போராடினார். 1956-ல் முத்துலட்சுமி ரெட்டிக்கு பத்மபூஷன் விருதளித்து இந்திய அரசு கவுரவித்தது. 1968 ஜூலை 22 அன்று அவர் காலமானார்.

ருக்மிணி அருண்டேல், பல்துறைப் பேரொளி

ருக்மிணி தேவி 1904-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி நீலகண்ட சாஸ்திரி – சேஷம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். பொதுப் பணித்துறை பொறியாளராக இருந்த அவருடைய தந்தை, அன்னிபெசண்ட் அம்மையார் உருவாக்கிய தியசாபிகல் சொசைட்டியின் தீவிர உறுப்பினராகச் செயலாற்றியவர். தந்தையின் அறிமுகத்தால் ருக்மிணி தேவியிடம் சிறு வயதிலேயே அன்னிபெசண்ட் அம்மையாரின் தாக்கம் இருந்தது.

தியசாபிகல் சொசைட்டியில் பணியாற்றிய வெள்ளையரான ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்ற ஆங்கிலேயருடன் காதல் வயப்பட்டார். ருக்மிணி தேவியாக இருந்தவர் 1920-ல் ஜார்ஜைத் திருமணம் செய்து ருக்மிணி அருண்டேல் ஆனார்.

தியசாபிகல் சொசைட்டியின் இளைய மெய்ஞானிகள் கழகத்தின் தலைவராகப் பதவியேற்ற அருண்டேல் தம்பதியினர் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து மெய்ஞானசபையின் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

லண்டனில் 1924-ம் ஆண்டு பிரபல பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவிடம் ருக்மினி நடனம் கற்றுத் தேர்ந்தார். அப்போதுதான் இந்தியப் பாரம்பரிய நடனமான பரதக் கலையை நோக்கி ருக்மிணி அருண்டேலின் கவனத்தை அன்னா பாவ்லோ திருப்பினார்.

பரதம் என்பது கவுரவத்துக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படாத காலம் அது. அதனால், அதைச் சொல்லித்தரவும் அவ்வளவாக ஆட்கள் இல்லை. பரதக் கலை ஆசிரியர்களைத் தேடிப்பிடித்து பரதம் பயின்றார் ருக்மிணி.

கலாக்ஷேத்ரா உதயம்

மயிலாப்பூர் கௌரி அம்மா, பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் நடனம் பயின்ற ருக்மிணி, தியசாபிகல் சொசைட்டியின் வைர விழா நிகழ்ச்சியில் தனது முதல் அரங்கேற்றத்தை 1935-ல் நடத்தினார்.

1936-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை அடையாறில் கலாக்ஷேத்ரா அமைப்பைத் தனது கணவருடன் இணைந்து தொடங்கினார்.

தி பெசண்ட் தியசாபிகல் ஹை ஸ்கூல், தி மரியா மான்டிசோரி ஸ்கூல் ஃபார் சில்ரன், தி கிராஃப்ட் எஜூகேசன் அண்ட் ரிசர்ச் சென்டர் மற்றும் உ.வே.சாமிநாதையர் நூலகம் ஆகியவற்றையும் கலாக்ஷேத்ரா வளாகத்துக்குள் அமைத்துள்ளார். சென்னைக்கு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதுமிருந்து மாணவர்கள் தங்கிப் பயிலும் கலைப் புகலிடமாக திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ரா திகழ்கிறது.

1956-ல் ருக்மிணி தேவிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பதவி தேடிவந்தபோது, அது தன் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்று இவர் மறுத்தார்.

மனதில் நிறைந்திருக்கும் மதறாஸ் !!!

நினைவில் உறைந்திருக்கும் சென்னையின் தோற்றம் மாறினாலும் அதன் மனசு மாறிவிடவில்லை.

எனக்கும் சென்னைக்குமான (என்னுடைய மனதில் என்றும் மதறாஸ்தான்) உறவு மிக நெருக்கமானது; உணர்வுரீதியாக மட்டுமல்ல; புவியியல்ரீதியாகவும். ஏனெனில், நான் இருந்த செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் இடையிலான தூரம் 60 கிலோ மீட்டர்தான். என்றாலும், நான் சென்னைக்கு வந்தது எனது 13-வது வயதில்தான்.

ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று, “நாளைக்கு என்னுடன் மெட்றாஸ்க்கு வர்றியாடா?” என்று கேட்டார். அப்போதெல்லாம் சென்னைக்குப் போவது என்பது கிட்டத்தட்ட வெளிநாடு போவதுபோலத்தான். உடனே, சந்தோஷமாகத் தலையாட்டினேன். மறுநாள், சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அப்பா மடியில் உட்கார்ந்ததும், காற்று தாலாட்ட நன்றாகத் தூங்கிவிட்டேன். “மெட்றாஸ் வந்துடிச்சி” என்று அப்பா உலுக்கியவுடன், விழித்த என் கண்கள் முன் பரந்து விரிந்து கிடந்தது சென்னை. பாரி முனையில் இறங்கினோம். ஒரே ஜன நெரிசல், பரபரப்பு. பேருந்து நிலையம் எதிரில் அப்பா பதநீர் வாங்கிக் கொடுத்தார். பழக்கடை தாண்டி கந்தகோட்டம் என்று ஓர் இடத்தில்தான் அப்பா, தன் கில்ட் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்குவார். இந்த முறை, என்னையும் சென்னைக்கு அழைத்துவந்திருந்தார்.

நினைவின் சொர்க்கம்

பின்னர், தேவி பாரடைஸ் திரையரங்கம் வளாகத்துக்குள் நுழைந்தோம். அங்கு படம் பார்க்கவில்லை. வெறுமனே திரையரங்கைச் சுற்றிக் காண்பித்தார் அப்பா. அங்கே வட்டமான, சரிவுப் பாதை ஒன்று இருக்கும். படிக்கட்டு இல்லாமல் சுற்றிச் சுற்றி மேலும் கீழும் போகக்கூடிய பாதை. அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த வட்டப் பாதைக்கு நடுவில் சுமார் மூன்று அல்லது நான்கு அடி பருமனும், அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவுக்கு உயரமும் கொண்ட செவ்விந்தியர் ஒருவரின் சிலை ஒன்றிருக்கும். அதன் மேல் தண்ணீர் பீறிட்டு அடிக்கும்படி செயற்கை நீரூற்று ஒன்றை அமைத்திருந்தார்கள். மறக்க முடியாத நினைவு அது. சென்னைக்கு வந்த முதல் நாளில் அணிந்திருந்த உடைகூட நினைவிருக்கிறது.

அதன் பின்னர், சென்னை என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமானது. கிறிஸ்தவக் கல்லூரியில் பி.யு.சி. படித்தேன். அவ்வப்போது ரயிலில் ஏறி தாம்பரத்திலிருந்து பாரி முனைக்குப் போய்வருவேன். எப்போதாவது கோடம்பாக்கம் லிபர்ட்டி, குரோம்பேட்டை வெற்றி போன்ற திரையரங்குகளில் படம் பார்ப்போம். நான் நடிகனாக வேண்டும் என்று விரும்பிய என் அப்பா, சென்னை திரைப்படக் கல்லூரியில் என்னைச் சேர்த்துவிட்டார்.

அப்போதெல்லாம் செங்கல்பட்டிலிருந்து ரயிலில் வந்து மாம்பலத்தில் இறங்குவேன். பனகல் பூங்கா ஓரமாக நடந்து, ஜி.என். செட்டி சாலை வழியாக வேர்க் கடலையைக் கொறித்துக்கொண்டே நடந்து போனால், ஜெமினி சர்க்கிள் வரும். அதைத் தாண்டிய வுடன் திரைப்படக் கல்லூரி. ஜி.என். செட்டி சாலையில் கடலையை மென்றுகொண்டே நடந்துபோவது ஒரு சுகமான அனுபவம். அவ்வளவாக ஆள் நடமாட்டமே இருக்காது. பெரிய பெரிய மரங்கள் இருந்தன. அந்தச் சாலை எனக்கு ஒரு நண்பன்போல. அதில் உட்கார்ந்து அழுதிருக்கிறேன். அங்கிருந்த ஒரு பூங்காவில் தூங்கியிருக்கிறேன்.

70-களில் சென்னையில் தனி வீடுகள்தான் நிறைந் திருந்தன. வழக்கமாக நான் போகும் ஜி.என்.செட்டி சாலையில் ஒரு வீட்டுக்கு வெளியே ‘நச்சினார்க்கினிய சிவன், வண்டார் பூங்குழலி’ என்று பெயர்ப் பலகை இருக்கும். அந்தப் பெயர்களைப் பார்த்துவிட்டுத்தான் கடந்து போவேன். திரைப்படக் கல்லூரியிலிருந்து சபையர், அங்கிருந்து பிரிட்டிஷ் கவுன்சில், கொஞ்சம் தள்ளி ஸ்பென்சர்ஸ், பிறகு தேவி பாரடைஸ், சாந்தி, ஜங்ஷனைக் கடந்தால் ராஜாஜி ஹால் ஊடே நுழைந்து வலது பக்கம் திரும்பினால் டி.வி. ஸ்டேஷன், அதையும் கடந்தால் மெரினா பீச்; இவ்வளவுதான் அப்போதைய சென்னை. நடந்தே கடந்து சென்றுவிடக்கூடிய நகரமாகத் தான் சென்னை அப்போது எனக்குத் தோன்றியது.

தாஜ் கோரமண்டலில் வேலை செய்தபோது, நுங்கம்பாக்கம் பகுதிகளிலெல்லாம் சைக்கிளில் சுற்றுவேன். ஷிஃப்ட் முறையில் வேலை செய்ய வேண்டி யிருந்தது. செங்கல்பட்டிலிருந்து வரவும் முடியாது. இங்கே அறை எடுத்துக்கொண்டு தங்கவும் வசதியில்லை. எனவே, நானும் என் நண்பர்களும் இப்போது உள்ள அண்ணா மேம்பாலம் சர்க்கிளில் தூங்குவோம். எங்களைப் போலப் பலரும் அங்கு தூங்குவார்கள். விடியும் வரை நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அதன் பிறகு தூங்கி எழுந்து தாஜ் கோரமண்டல் பணியாளர் களுக்கான ஓய்வறையில் தயாராகி, வேலைக்குச் சென்றுவிடுவோம். அதன் பின் வாழ்க்கையில் பல மாற்றங்கள். அனைத்திலும், சென்னை எனக்கு ஆறுதலாக, கூடவே பயணித்தது.

மாறிப்போன முகம்

இப்போதைய சென்னையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னவோ மனதுக்கு உவப்பானதாக இல்லை. அன்று நடந்ததுபோல இன்று ஜி.என். செட்டி சாலையில் நடக்க முடியாது. நடைபாதைகளும் இல்லை, மரங்களும் இல்லை. நச்சினார்க்கினிய சிவனும் வண்டார் குழலியும் எங்கு போனார்களோ தெரியவில்லை. அந்த இடத்தில் பளபளப்பான வணிகக் கட்டிடங்கள் நின்றுகொண்டிருக்கின்றன.

இப்போது இருப்பதை வளர்ச்சி என்று கூறுவது விசித்திரமாக இருக்கிறது. நாம் நாமாகவே இருக்க வேண்டும் என்றால், அதற்கு இப்போதைய சென்னையில் இடமே இல்லை. அப்போது மூர் மார்க்கெட் இருந்தது. விரக்தியான மனநிலையில் அங்கே நுழைபவர்களை உற்சாகமாக மாற்றிவிடும் அதிசயப் பிரதேசம் அது. பழைய கடிகாரங்கள், வித்தியாசமான பொருட்கள், புத்தகங்கள், மீன்கள், பறவைகள் என்று பல விஷயங்களும் அங்கு இருக்கும். அதேபோல், பழைய ஸ்பென்சரும் வசீகரமான இடம்தான். ஆனால், அது மேல்தட்டு மக்களுக்கானது.

இன்றைய சென்னைக்கென்று தனிப்பட்ட எந்த அடையாளமும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள பல இடங்கள் பிடிக்காதபோதும், கதீட்ரல் சாலையில் இருக்கும் தாவரவியல் பூங்கா எனக்குப் பிடிக்கும். அதேபோல், எழும்பூர் அருங்காட்சியகமும், அதன் பின்னால் அடைந்திருக்கும் காடும் மிகவும் பிடித்தமானவை. கலைஞர்கள், இலக்கியவாதிகள் கூடும் இடமாக இருந்த டிரைவ் இன் உட்லேண்ட்ஸ் இடிக்கப்பட்டது பெரும் வலியைத் தந்தது. குப்பைகளும் அழகுணர்ச்சியின்மையும் சென்னையின் அழகைக் குறைக்கின்றன என்பது உண்மைதான். ‘நான் வாழும் நகரம் இது’ என்ற பொறுப்பு வந்தாலே எல்லாம் மாறிவிடும்.

மாறாத மனசு!

பொதுவாக, சென்னைவாசிகள் நடந்துகொள்ளும் முறை, பழகும் முறை, விருந்தினர்களைக் கவனிப்பது ஆகியவற்றைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் உண்டு. என்னைப் பொறுத்தவரை தன்னை நாடி வருபவர்களுக்கு நம்பிக்கை தரும் நகரம் இது. காசில்லாமல்கூட எப்படியாவது இங்கே வந்துவிட்டுப் போகலாம். இன்னும் கையேந்தி பவன்கள் உள்ளன. ஒன்றுமில்லாதவருக்குக்கூட ஏதாவது ஒன்று இங்கே கிடைத்துவிடும். இன்னொரு நல்ல விஷயம். சென்னைவாசிகளிடம் நாம் ஏதாவது கேட்டால், நின்று, பொறுமையாகச் சொல்லிவிட்டுத்தான் போவார்கள். என்னைப் பொறுத்தவரை என்றுமே ஒரு நட்புணர்வுள்ள நகரமாகத்தான் இன்றும் இருக்கிறது, என் ‘மதறாஸ்’.

– நாசர், நடிகர், இயக்குநர், தொடர்புக்கு: kameelanasser@gmail.com

Source::::The Hindu….Tamil
Natarajan

மதறாஸப்பட்டணத்துக்குப் பெருமை சேர்த்த முதல் விமானம் !!!

ஆசியாவின் முதல் விமானம் எங்கே பறந்தது தெரியுமா? நாட்டின் பல முதன்மைகளைப் பெற்ற நமது பழைய மெட்ராஸில்தான். உலகின் முதல் வெற்றிகரமான விமானத்தை ரைட் சகோதரர்கள் செலுத்தி, அடுத்த 7 ஆண்டுகளில் இந்த விமானம் சென்னையில் றெக்கை கட்டிப் பறந்திருக்கிறது.

 

தின்பண்டத் தயாரிப்புத் தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தவர் இத்தாலியிலுள்ள மெசினா பகுதியைச் சேர்ந்த ஜாகோமோ டி ஏஞ்சலிஸ் (Giacomo D’Angelis). வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் 1880-ல் இந்தியாவுக்கு வந்து மேசன் ஃபிரான்சேஸ் நிறுவனத்தை அன்றைய மெட்ராஸ் மவுண்ட் ரோடில் (இன்றைய அண்ணா சிலை சந்திப்பு அருகே) தொடங்கினார். இந்தியாவில் உணவு விநியோகிக்கும் சேவை யைத் தொடங்கிய முதல் நிறுவனம் அதுதான். ஆம்ப்டில் பிரபு காலத் தில் மெட்ராஸ் ஆளுநரின் அதிகாரப்பூர்வ உணவு விநியோகஸ்தராக ஏஞ்சலிஸின் நிறுவனம் இருந்திருக்கிறது. இதில் நல்ல அனுபவம் பெற்ற டி ஏஞ்சலிஸ், 1906-ல் ஓட்டல் டி ஏஞ்சலிஸ் என தன் பெயரிலேயே ஒரு உணவகத்தைத் தொடங்கினார். இந்த ஓட்டல் இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தியதாகக் கருதப்படுகிறது.

சென்னையிலேயே முதன்முறையாக இந்த ஓட்டலில்தான் மின் தூக்கி, மின்விசிறிகள், ஐஸ் தயாரிப்பு அமைப்பு, குளிர்பதனக் கிடங்கு, வெந்நீர்க் குழாய்கள் போன்றவை இருந்திருக்கின்றன.

டி ஏஞ்சலிஸ் நடத்திய அந்த ஓட்டல் இருந்த இடம் எதுவென்றால், இன்றைய சென்னை அண்ணா சாலை கெயிட்டி திரையரங்கம் அருகே உள்ள பாட்டா ஷோரூம் இருந்த இடம்தான்.

ஜாகோமோவுக்குப் பின்னால் சுவாரசியமான மற்றொரு கதை இருக்கிறது. ஓட்டல் ஆரம்பித்து கொஞ்ச காலத்திலேயே பிரான்சைச் சேர்ந்த பிலாரியோ, விமானம் மூலமாகவே ஆங்கிலேயக் கால்வாயைக் கடந்து ஆச்சரிய சாகசம் நிகழ்த்திய செய்தி ஜாகோமோவின் கண்களில் பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பம் மீது தீவிர ஆசை கொண்டிருந்த ஜாகோமோவுக்கு, தானும் பறக்க வேண்டும் என்று ஆசை றெக்கை வெளியே எட்டிப் பார்த்தது. தானே ஒரு விமானத்தை வடிவமைத்தார். அது ஒரு பைபிளேன். ரைட் சகோதரர்கள் ஓட்டியது போன்று, மேலும் கீழும் இரண்டு றெக்கைகள் பொருத்தப்பட்டதே பைபிளேன்.

பிறகு மெட்ராஸ் சிம்சன் நிறுவனத்தில், அதை உருவாக்கித் தர அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தில் இருந்த அன்றைய பிரபல பொறியாளர் ஜான் கிரீன் அதை வடிவமைத்திருக்கலாம். ஏனென்றால், விமானத்தை உருவாக்கியது சிம்சன் நிறுவனம் என்று பாரதியாரின் ‘இந்தியா’ இதழ் குறிப்பிடுகிறது. ‘‘இவ்விமானம் சென்னையில் டாஞ்சலிஸ் ஓட்டலின் பிரெஞ்சு முதலாளி டாஞ்சலிஸின் திட்டப்படி சிம்சன் கம்பெனி பட்டறையில் ‘தமிழ் வேலைக்காரர்களால்’ கட்டப்பெற்றது’’ என்று பாரதியார் எழுதியிருக்கிறார்.

சிறிய இன்ஜின் கொண்ட அந்த விமானத்தை பல்லாவரம் மலைப் பகுதியில் ஓட்டி முதலில் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார் டி ஏஞ்சலிஸ். அதில் நம்பிக்கை கிடைக்கவே, தீவுத் திடலில் பொது மக்களிடம் கட்டணம் வசூலித்து பறந்து காட்டியிருக்கிறார். அது நடந்த நாள் 10 மார்ச் 1910. இந்த விமானத்தில் ஒரே நாளில் பல முறை அவர் பறந்து காட்டியிருக்கிறார். அவருடைய அழைப்புக்கு ஏற்ப கூட்டத்தில் இருந்த ஒருவரும், விமானத்தில் உடன் பறந்துள்ளார்.

ஆசியாவிலேயே ஓடிய முதல் எரிசக்தி விமானம் அதுதான். இதன் மூலம் ஆசியாவிலும் இந்தியாவிலும் முதல் விமானத்தை ஓட்டியவர் என்ற பெருமையை டி ஏஞ்சலிஸ் பெறுகிறார். இந்தச் செய்தி ராயல் ஏரோ கிளப் இதழான ‘ஃபிளைட்’டில் உடனடியாக, அதாவது 1910 மார்ச் 26-ம் தேதியே பதிவாகியுள்ளது. லெவிட்டஸ் நிறுவனமே இந்தத் தகவலை வெளியிட்டது. இந்திய விமான வரலாற்றிலோ அலகாபாதில்தான் முதல் விமானம் பறந்ததாக பதிவாகியுள்ளது. ஆனால், அதற்கு 9 மாதங்களுக்கு முன்னதாகவே டி ஏஞ்சலிஸ் இந்த விமானத்தை ஓட்டியிருக்கிறார்.

‘‘இந்தியாவில் மட்டுமல்ல; ஆசியாவில் பறந்த முதல் விமானமும் ஏஞ்சலிஸ் ஓட்டிய விமானம்தான்’’ என்று விமான வரலாற்று ஆராய்ச்சியாளரும் ஓய்வுபெற்ற கேப்டனுமான கபில் பார்கவா குறிப்பிட்டிருக்கிறார். 1910 டிசம்பர் 10-ம் தேதி அலகாபாத்தில் முதல் விமானம் பறந்ததாகவும், அதே ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது விமானம் பறந்ததாகவும் பதிவுகள் உள்ளன. வழக்கம்போல இதிலும் முந்திக்கொண்டு உயரப் பறந்து, வானை அளந்து, சாதனை படைத்துவிட்டது நமது மெட்ராஸ்.

இந்தச் சாதனையில் இன்றைய அண்ணா சாலையும் ஒரு தனிப் பெருமையைப் பெறுகிறது. டி ஏஞ்சலிஸின் ஓட்டல் இருந்த இடம், சிம்சன் நிறுவனம், தீவுத்திடல் ஆகிய மூன்றும் அமைந்திருக்கும் இடம் மெட்ராஸின் அன்றைய மவுன்ட் ரோடு, சென்னையின் இன்றைய அண்ணா சாலை!

– ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

Keywords: சென்னை, சென்னை 375, சென்னை விமான நிலையம், மதறாஸப்பட்டணம், மதறாஸ்

Source::::The Hindu…Tamil

Natarajan

Message For the Day…” Do Not Get Confused That You are Unique…”

There are four goals (Purusharthas) in the world that people aspire for. They are Righteousness (Dharma), Wealth (Artha), Desire (Kama) and Liberation (Moksha). Realising God is the worthiest and highest goal in life. When such God is seen, realised and a close relationship is established with Him, the happiness one enjoys then, that state of liberation, that principle of love has been called as devotion of the highest order (Parabhakthi). This devotion is liberation itself; it is attaining oneness with God. Liberation is the ability to look for unity in diversity, rather than calling out the obvious differences. Attaining Parabhakthi is not easy. It is definitely possible for those who yearn and work towards it. Do not get confused that you are unique and others are different. You will be in doubt if you miss the principle of unity in your daily lives. So long as there is doubt, you cannot realize the eternal truth.

Sathya Sai Baba

” இயற்கையை பேணி காக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இன்று…”

1

தூக்கம் களைந்து, திடுக்கிட்டு எழுந்தேன். மணி அதிகாலை 4:30. என்னடா இப்படி ஒரு கனவு? 2042 ஆம் ஆண்டில் இப்படியா இருக்கும்? காற்றை விலைக் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையா? நினைத்து பார்க்கவே பயமாக உள்ளதே.. புரண்டு புரண்டு படுத்து பார்த்தேன், தூக்கம் வரவில்லை. மொட்டை மாடியில் கொஞ்சம் நேரம் உலாவி விட்டு வரலாம் என்று தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் எடுத்து கொண்டு மாடிக்கு சென்றேன்.

தண்ணீரை சிறிது பருகிவிட்டு, தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலை பார்த்தேன். கனவில் வந்தது சரிதான், 10-20 வருடங்களுக்கு முன், சுழற்சி முறையில் (REVERSE OSMOSIS) சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையோ, பிளாஸ்டிக் பாட்டிலையோ பயண்படுத்தியது கிடையாது. ஆனாலும் இப்போது நோய்க்கிருமிகளும், வைரஸ்களும் அதிகமாகி கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. வாயில் நுழையாத பல நோய்களின் பேரையும் மாத்திரைகளையும் திணித்து கொண்டே இருக்கிறது மருத்துவ உலகம். எங்கும் இரசாயன மயம்.

வீடு அமைந்திருந்த தெருவில் வெட்டபடாமல் எஞ்சி இருந்த மரங்கள் வழக்கம் போல், மனிதர்களுக்கு சேவை செய்துக்கொண்டிருந்தன. மனிதன்  விழிக்கும்முன் எழுந்து விடும் உயிரினங்கள், தங்களுக்குள் மனம் விட்டு பேசிக்கொண்டு, சிறகடித்துக்கு கொண்டிருந்தன. அவைகளை கூர்ந்து கவனித்தேன். கனவின் பாதிப்பு சற்றும் குறையாது இருக்கவே, மீண்டும் சில சிந்தனை ஓட்டங்கள்..

சில வருடங்களில் பெரும்பாலான பறவை இனங்கள் அழிந்து போய்விடுமோ? கைப்பேசிகள் கிராமத்தில் கூட நம்மை கூவி எழுப்பும் நிரந்தர சேவல்கள் ஆகிவிடுமோ? விளை நிலங்கள் எல்லாம், விலைக்கு விற்கப்படும் நிலங்களாக மாறி வருகிறது. சைவர்களும், அசைவர்களும் ஓரிரு  தலைமுறைகளுக்கு பின் ஒன்றாகி விடுவார்களோ? வருங்காலத்தில் அனைவருக்கும் உணவு, மாத்திரையாக தான் இருக்கக்கூடுமோ? அறுசுவை விருந்து என்பது மறைந்து, அறுசுவை மருந்து என்று ஆகக் கூடிய சூழ்நிலை வருமோ? உணவே மருந்து என்ற நேற்றைய கூற்று பொய்யாகி, மருந்தே உணவு என்று நாளைய கூற்று ஆகிவிடுமோ?

2

 

சிறுவயதில் நாம் அனுபவித்த பல நல்ல விஷயங்களையும், கள  விளையாட்டுகளையும், ஆத்மார்த்தமான உணர்வுகளையும், உறவுகளையும் இந்த தலைமுறையினர் நம் கண்ணெதிரே இழந்து வருகின்றனர். எலேக்ட்ரானிக் உலகம், இந்த தலைமுறையினரை கபளீகரம் செய்து கொண்டிருக்கையில், அடுத்த தலைமுறைகள் மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு உறக்கம் போன்றவற்றைக் கூட இழந்து விடுவார்களோ?

அடுக்கடுக்காய் பல கேள்விகள். என்ன தான் பூவுலகில் நடக்கிறது? ஒரு சிறிய உதாரணம். இப்போது கூட நாம் வசிக்கும் நகரத்தை விட்டு, ஒரு மணி நேரம்  நகரத்திற்கு வெளியில் உள்ள இடங்களுக்கு சென்று பார்த்து வந்தால் அப்படி ஒரு புத்துணர்ச்சி, மனநிம்மதி!! இதற்கு முக்கிய காரணங்கள் பெருகி வரும் வாகனங்களும், அவை கக்கும் கார்பன்-மோனாக்ஸைடும், போக்குவரத்து நெரிசலும் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று பெருநகரங்களில் வசிக்கும் பலருக்கு ஆஸ்த்மா, தோல் ஒவ்வாமை (அலர்ஜி), நுரையீரல் நோய், கண்கள் பாதிப்பு என்று அடுக்கி கொண்டே போகுமளவிற்கு நோய்கள். அத்தனை உடல் ரீதியான கோலாருகளுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த கார்பன்-மோனாக்ஸைடு திகழ்கின்றது.

“சொந்த கிராமத்தில் போய் இரண்டு நாள் தங்கி வந்தேன், உடலும் மனமும் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தது தெரியுமா?” என்று நம்மிடம் நிறைய நண்பர்கள் கூற கேள்வி பட்டிருப்போம், நாமும் அதை உணர்ந்திருப்போம். ஆனாலும் என்ன செய்வது? பிழைப்பிற்காக பெருநகரங்களை தேடி ஓடி வந்து விட்டோம், நமது  அடுத்த தலைமுறைகளுக்கு தேவைப்படும் என்று நகரங்களில் வீட்டை கடனில் (LOAN) வாங்கி, ஆயுள் முழுதும் வேலைப்பார்த்து வீட்டுக்கடன் (EMI) கட்டி கொண்டு இருக்கிறோம்.

முக்கியமான தகவல். யேல் நிறுவனம், கொலம்பியா பல்கலைக்கழகத்தில்  ஒவ்வொரு வருடமும், பல நாடுகளில், சுற்றுச்சூழல் செயல்திறன் (ENVIRONMENTAL PERFORMANCE INDEX)  எவ்வாறு உள்ளது என்று பட்டியலிட்டு வெளியிடுகிறது. மொத்தம் 178 நாடுகளில் கணக்கெடுத்ததில், நமது நாட்டிற்கு 155ஆவது இடமே கிடைத்துள்ளது வேதனையான உண்மை.

3

 

சற்று ஆழமாக யோசித்து பார்த்தால், ஒரு விஷயம் நன்றாகப் புலப்படும். அடுத்த தலைமுறைக்கு உண்மையான சொத்து எனும் ஒன்றை நாம் விட்டு செல்வதென்றால், கண்டிப்பாக அவை ஆரோக்கியமும், மனநிறைவும், சந்தோஷம் தரக்கூடிய சுற்றுப்புற சூழலும், நல் வாழ்க்கை முறையும் தான். சிலர் இருக்கும் வாழ்கையை தொலைத்து, அடுத்த தலைமுறைகளுக்கு என்று சொத்துகளை வாங்கி குவிப்பர், ஆனால், சில வருடங்கள் கழித்து, அந்த நகரங்களில் வாழக் கூடிய சூழ்நிலையே கிடையாது எனும் நிலை வரும்போது, அந்த சொத்துக்களுக்கு  எல்லாம் என்ன மதிப்பு இருக்கும்?

4

 

சரி என்னதான் செய்யலாம், காற்று மாசுப்படிருந்தாலோ, வசிப்பிடத்தைச் சுற்றி  குப்பையாக இருந்தாலோ, சாதாரன மக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? அதெல்லாம் அரசாங்கம் தானே பார்க்கவேண்டும் என நினைத்தால், நாம் பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக நாம் சில அடிப்படை விஷயங்களை கடைப்பிடித்து, குழந்தைகளுக்கும் கற்றுத் தர ஆரம்பிக்கவேண்டும். சிறு துளி தான் பெரும் வெள்ளம், சின்னஞ்சிறு நல்ல சேமிப்புகள் தான், நாளைய பேராபத்தை தவிர்க்கும் கேடயங்கள். அதை உணர்ந்து, நாம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய, தினமும் கடைபிடிக்க வேண்டிய, நம்மளால் செய்ய இயன்ற செயல்கள்..

1. ஒவ்வொருவரும் தான் வாழ்ந்து முடிக்கும் முன், 10 மரங்களாவது   பின்வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்லலாம்.

2. புகை பிடிப்பவர்கள், புகை பிடிப்பதை விட்டுவிடலாம் அல்லது முடிந்தளவு குறைத்துவிடலாம்.

3. மாடியிலும் வீட்டுத்தோட்டங்களிலும், சின்னஞ்சிறு செடிதொட்டிகளும், பூத்தொட்டிகளும் வளர்க்கலாம். உதாரணத்திற்கு, சோற்றுக்கற்றாழை (ALOE VERA).. இதனை கண்டிப்பாக வீட்டில் வளர்க்கலாம். காற்றிலிருந்து பல மாசுகளை குறைக்கும் வல்லமைகொண்ட கற்றாழையில் மருத்துவ குணங்களும் ஏராளம் உள்ளது. நம் நாட்டிலிருந்து பல கற்றாழைகள், அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

4. சிலந்தி ஆளை (SPIDER PLANT), பாக்கு பனை, ஸ்நேக் பிளாண்ட் (SNAKE PLANT), மணிப் பிளாண்ட் (MONEY PLANT), மார்கினாட்டா போன்ற பல செடிகள் காற்றில் உள்ள நச்சித்தன்மையும், விஷத்தன்மையும் அகற்றுகின்றன. வீட்டில் அவைகளை வைத்தும் அழகுப் பார்க்கலாம்.

5. வீட்டிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் எங்காவது போக வேண்டுமென்றால், வாகனங்களை தவிர்த்து, நடந்தே செல்லலாம்.

6. ரயில், பஸ் போன்ற போக்குவரத்துகளை, அதிக அளவில் உபயோக படுத்த ஆரம்பிக்கலாம். அதுவும் தனியாக போகும் போது கண்டிப்பாக பொது போக்குவரத்துகளை பயன்படுத்தலாம்.

7. வாகனங்களில் தனியாக செல்வதை விட்டுவிட்டு, நண்பர்களுடனோ, அலுவலகம் செல்லும் போது கூட வேலை செய்பவர்களோடும் (CAR POOLING) செல்லலாம்.

8. பிரிட்ஜ் (FRIDGE) தண்ணீரை பயன் படுத்துவதற்கு பதில், பழையமுறையான, பானை தண்ணீரை பருகுவதும், உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் நன்று.

9. தேவை இல்லாதபோது, வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருள்களை அணைத்து வைத்துவிட வேண்டும். ஏஸியை (AC) முடிந்த அளவு குறைப்பது  உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் நன்று.

10. காகிதங்கள உபயோகத்தை முடிந்த வரை குறைத்து கொள்ளலாம்.

11. குழைந்தகளுக்கு குப்பையை குப்பைத்தொட்டியில் போட சொல்லியும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொள்ளவும் கற்றுத் தர வேண்டும். மக்கும் குப்பை, மக்கா குப்பை எனத் தனியாக பிரித்து அதை சுழற்சி முறையில் பயன்படுத்துவோரிடம் தந்து பயன்பெறலாம்.

12. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகளை பயன்படுத்த தொடங்கலாம். தண்ணீர் மற்றும் பல இயற்கை வளங்களை விரயமாக்காமல் பாதுகாக்கவேண்டும்.

நண்பர்களே, இது தவிர வேறு ஏதேனும் கருத்துக்கள் காற்று மாசுப்படுதலை தவிர்க்க உங்கள் மனதில் தோன்றினாலும், எங்களுடனும், உங்கள் நட்பு வட்டாரங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்த தலைமுறைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால், சுற்றுப்புரத்தை சுத்தமாக வைத்துகொள்வோம். நம்மால் இயன்ற அளவு மேலே சொன்ன விஷயங்களைக் கடைப்பிடிப்போம்.

இயற்கையை பேணிக் காப்போம், இயன்ற வரை சுற்று சூழலை மாசுபடுதலில்  இருந்து காப்போம். பசுமையான ஒரு சமுதாயத்தையும், ஆரோக்கியமான வாழ்வையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ Team.  in  BEPOSITIVETAMIL.COM

Natarajan

Image of the Day… Double Moon on 27 Aug 2014 ? …. A Hoax mail Under Circulation !!!

I thought we were going to make it through August 2014 without the double moon on August 27 hoax being revived. I was wrong. Google searches have made this post the most popular on our site for two days running. Yes … it’s happening again. An email must be circulating – somewhere, social media must be buzzing – with the suggestion that – on August 27, 2014 – Mars will appear as large as a full moon in Earth’s sky. Here’s a sample of what it typically says:

SEE MARS AS LARGE AS THE FULL MOON ON 27TH AUGUST 2014. Should be spectacular! Truly a once in a lifetime experience!

Hoax image via social media.

Will Mars and the moon will appear the same size on August 27, 2014? Nope.

 

I saw a version of this a few years back that included a powerpoint presentation, suggesting that Mars and Earth’s moon will appear as a “double moon” in late August. I’ve also seen the photo below, circulating on Facebook.

This image is circulating on Facebook, with the claim that Mars will appear as big and bright as a full moon on August 27, 2014.  It's a hoax.  Don't believe it.  Mars never appears as large as a full moon in Earth's sky.

It sounds amazing! Can it possibly be true?

No. It can’t. The email and photo are perpetuating a hoax that rears its crazy head every summer. The hoax has circulated every summer since 2003. Eleven years running! That’s a long time for a hoax to run, in our world of information.

Mars can never appear as large as a full moon as seen from Earth. The moon will not be full on August 27, 2014 (you might spot it briefly as a thin crescent in the west after sunset, though). And Mars will not be at its brightest or closest in August of 2014, or at any time in 2014. In 2014, Mars is closest to Earth on April 8, but it won’t be as close this year as in some years.

Want to see planets, meteor showers, eclipses? Visit our night sky page – updated daily!

As seen from Earth, in months when Mars does appear side by side with a full moon (and, again, that’s not happening in August of 2014), Mars’ diameter is about 1/140th the diameter of the full moon.

You would have had to line up 140 planet Mars – side by side – to equal the moon’s diameter.

Ah, Mars. World of dreams and visions. Mars is the world orbiting one step outward from Earth’s orbit. This world is slightly smaller than Earth – but slightly larger than Earth’s moon. Mars is also much much farther away than Earth’s moon. It’s hard to comprehend what little specks the planets and moons are in contrast to the vastness of space, but let me put it this way. Earth’s moon is about a light-second away. Traveling at 186,000 miles per second, light bouncing from the moon’s surface takes about a second to reach us here on Earth. Meanwhile, light from Mars takes much much longer to reach Earth – from several minutes to about 20 minutes – with the difference being the result of Earth’s and Mars’ motions around the sun. In other words, when Mars is on the same side of the sun as Earth, its distance from us is less than when it’s on the far side of the sun from us.

The moon is much closer than Mars, and that’s why we see the moon as a bright disk in our sky. Meanwhile – to the eye – Mars never appears as anything but a starlike point.

So how did this rumor of Mars-as-big-and-bright-as-the-moon get started? It started with an actual (though much more subtle) event in 2003. On August 27 of that year, Earth and Mars came very slightly closer than they’d been in nearly 60,000 years. Our two worlds, center-to-center, were less than 35 million miles apart – just over three light-minutes apart. The last people to come so close to Mars were Neanderthals. Astronomy writers like me had a field day that year, talking about Mars at its closest. Was it a spectacular sight? Yes! It looked like a dot of flame in the night sky.

Was Mars as big and bright as the moon, even at its closest in 2003? Never.

But the legend continues …

Bottom line: Mars will not appear as large as the full moon on August 27, 2014. Mars will notever appear as large as a full moon in Earth’s sky. The email – or social media – claims to the contrary are a hoax.

Source:::: Earth sky news

Natarajan

Joke of the Day…” They are My Friends…”

Three men were sitting on a park bench. The one in the middle was reading a newspaper; the others were pretending to fish. They baited imaginary hooks, cast lines, and reeled in their catch.

A passing policeman stopped to watch the spectacle and asked the man in the middle if he new the other two.

“Oh yes” he said. “They ‘re my friends.”

“In that case,” warned the officer, “you’d better get them out of here!”

“Yes, sir” the man replied, and he began rowing furiously

Source::::joke a day.com

Natarajan

An Inspiring and Success Story Of Mannam Madhusudana Rao…

Jubilee Hills is Hyderabad’s most coveted address, and a drive past the mansions here reveals why.

Some houses look elegant while many are hideous, but all are quite large. JubileeHeights, the lavender-and-pink apartment block on road number 86, is not imposing.

Neither is the first floor duplex apartment, the home of Mannam Madhusudana Rao.

There is a stuffed toy tiger and a doll in a blue dress on a shelf. A picture of Shirdi Sai Baba hangs on the wall, below a flat-screen TV in the living room – familiar kitsch found in many a middle-class home. Yet, the house is a powerful symbol of having arrived.

“I had come to this area earlier, when I was in the eighth or ninth grade, to help my brothers who were working as masons at the house of the Nagarjuna Constructions chairman (AVS Raju),” says Rao, founder and managing director of MMR Infra Projects.

That’s when he started dreaming about living here, his assistant Kumaraswamy interjects. Rao corrects him. “I decided to live here only now. When I was working here, I could not even dream of it,” says the soft-spoken entrepreneur dressed in an ill-fitting brown jacket and trousers with a slight sheen and a pale yellow shirt. He says he got the house “cheap” four years ago, paying “2.5”. I must have looked puzzled because he immediately adds, “2.5 CR (Rs 2.5 crore), madam.” The house measures 4,000 square feet, he says, with a hint of pride.

The pride in Rao, someone who otherwise comes across as approachable but confident, is hardly misplaced.

The 39-year-old, the fifth child of an illiterate labourer couple and only the second of their eight to be educated, now helms various ventures that bring in a turnover of between Rs 75 crore and Rs 90 crore.

The journey he has traversed covers much more than the 400 kilometres between his village, Palukuru in Andhra Pradesh’s Prakasam district, and the capital.

For Rao was not only born into an impoverished family, he is also a Dalit, though he prefers to use the terms “working class people” and “our community” in multiple conversations over two days.

His story has been highlighted in the recent book, Defying The Odds: The Rise of Dalit Entrepreneurship (by Devesh Kapur, D Shyam Babu and Chandra Bhan Prasad; published by Random House India), and is the subject of a PBS documentary scheduled to be broadcast in the United States early next year. And it is a rather remarkable one, of creating opportunities and, as the title of the book says, defying the odds.

For generations, Rao’s family had provided inexpensive labour to the local landlords.

There was little money in the household. Inspired by neighbours who managed to find jobs after studying engineering, Peraiah, Rao’s father, sent him and his elder brother to school, first in the village, and then to the social welfare hostel for scheduled caste/tribe children.

While his brother went on to take a degree in engineering, Rao earned a diploma at a polytechnic because his parents felt that might be a safer option.

No job awaited them after graduation, so they took up construction work with their siblings in Hyderabad, at houses or digging trenches to lay cables. And then the miracle happened.

One day, waiting to be interviewed for a job at a firm of engineers, he overheard an executive talk about the immediate need for workers to lay cables.

Rao offered to get the required number of labourers and, using his connections with the workers, who he was a part of, showed up with them and the project moved once again, much to the firm’s satisfaction.

His first contract earned him a profit of Rs 25,000. The odd bump in the road apart, there was no looking back.

He went on to become a labour contractor for telecom majors such as Tata Teleservices and Vodafone, and at the height of that business, was maintaining 32,000 kilometres of optic fibre cable across five states.

With telecom in a downswing, he has diversified into infrastructure, construction, mining and software, and plans to enter various other sectors.

 

Rao has just returned from meeting Prime Minister Narendra Modi with other delegates of the Dalit Chamber of Commerce and Industry, or DCCI.

“We were initially given only 10 minutes but that stretched to 30 minutes and he spoke to each of us individually,” says the recently-appointed president of the organisation’s Andhra chapter.

When his turn came, he apprised Modi of the need to implement the 4 per cent reservation in procurement by public sector units for goods by SC/STs which so far exists mainly on paper.

“I think it will be mandatory from next year. He was very responsive,” he says. Soon, he leaves for an appointment in his white Toyota Fortuner, one among his five cars.

A photo of that meeting with Modi appeared in Sakshi, the Telugu daily, much to the joy of his parents who still live in his village.

“They were very proud. A lot of people congratulated them,” says elder brother Madhav, who opted for the safer option of a government job at BSNL.

Madhav’s office is near the Charminar, in the bustling old quarter of Hyderabad, with its maze of lanes and bazaars selling the famed bangles, pearls and attar.

The BSNL office itself has none of the charm of the area, with the peeling walls and general air of tiredness you associate with sarkari offices.

While Rao is slim and tall, his brother is slightly shorter and heavier. Both were athletes in their youth.

Their parents, Madhav says, wanted Rao to give up his business and take up a government job till as recently as the mid-2000s because entrepreneurship was an unknown devil.

But now, with Rao building houses for them, two of his brothers and his father’s brother, as well as buying some agricultural land in the village, they have come around.

All this is a far cry from their childhood, when they were not allowed to go to the houses of the upper caste, use the same vessels or sit with them. But things have changed with education among the upper castes and others.

“Now, we call them singularly,” he says. I ask what that means. “I can call someone Ramesh, instead of Ramesh garu,” he explains. With his brother, there is no discrimination, with members of the upper caste inviting him for functions and asking him for advice and jobs for their children. But this is not in all cases, he clarifies.

Success and prosperity have indeed triggered social mobility. Rao was able to become a member of the exclusive Jubilee Hills Club with ease.

“They just asked me for money and I could give them that. Nobody asked me about my community,” he says, laughing.

Then again, it cannot buy out prejudice. “I would be paying the bill for everyone at the table, yet there would be remarks about how people from my community don’t usually live in this area,” he says, more in amusement than resentment.

By one account, Rao bought his Jubilee Hills house on an impulse when somebody at a social event remarked how fortunate it was that no Dalit lived here – the abode of film stars, politicians and businessmen.

Rao does not dwell on instances of discrimination and says that he has never resorted to reservation in his career, which has largely been with the private sector, nor has he used it for admission for his two children.

But his brother says once it started becoming well-known that Rao was a Dalit, it was not as easy to get contracts even with private telecom players, which was one of the reasons for diversifying into other sectors.

Rao’s rise, says Sripathi Ramudu, professor at Hyderabad’s CentralUniversity and a friend, “has done away with the stereotype that Dalits are not good at business”.

On his morning walk at 7 am around Jubilee Hills’ lotus pond, a lovely oasis for the rich with tall wild grass, palms and a gazebo but no lotuses, Rao says he felt he was a burden on his parents and that a government job would not have been enough to take care of all of them, which was why he turned to business.

But his brother says that his friends at the polytechnic in Ongol, mostly sons of entrepreneurs who had decided to follow in their fathers’ footsteps, influenced him deeply.

Rao’s years in the college were a turning point, says Madhav, because he was elected a student leader, built good relations with his fellow students and political leaders and made a large group of friends.

This ability to network is one of his chief attributes and has stood him in good stead, various acquaintances concur.

He has excellent relations with labourers because he speaks their language and they trust him, says Srinivas Puttapaga, founder of Suraksha Group which runs several educational institutes and poultry units.

Rao also built relationships with bureaucrats, critical when it came to getting various clearances for laying cables.

Those who know him well affirm that the other “key” to his success is his ability to work hard, on many days up to 18 hours a day.

“He reaches home mostly only after 11 pm and sleeps just for five hours,” says his wife, Padmalatha, a junior telecom officer with BSNL.

When she married him, she was worried about the risk entrepreneurship carries with it but was finally convinced by his hard work.

“Confidence bahut zyada hai,” she says, smiling. In spite of Rao’s success, she has kept her job which pays her Rs 40,000 every month, perhaps because she feels the need for a fallback, should life come full circle, or because it is anathema to give up the much-coveted government job even if one’s spouse is earning in crores.

G Srinivasa Rao, joint director at the commissionerate of industries in the Andhra Pradesh government, says when he first met Rao at a DCCI event two years ago, he was impressed with the pertinent questions he asked, unlike the others present, and the five-minute interaction became a two-hour session.

“I travelled to Kakinada with him once and during the journey, he talked only about two things: creating wealth and helping society by promoting entrepreneurship,” says the bureaucrat.

Rao says he is passionate about helping people from backgrounds similar to his. So, roughly 60 per cent of his 200 permanent employees are from villages, are poor and come from backward communities, he says, sitting comfortably at his corporate office on Kavuri Hills where we meet in the afternoon.

A friend who has dropped in, G Ratna Kumar, managing director of the Irrigation Development Corporation, attempts to lionise Rao by saying that when a contract labourer committed suicide, he sent the family Rs 100,000.

He was just a contract labourer and he did not need to do that, Kumar says. Rao corrects him softly, “I know the boy’s father well.”

Rao is currently executing a Rs 100-crore township in Rajahmundry, and his plans are many.

He is looking to take his revenue to Rs 250-300 crore by the next year, and multiply that to an eye-popping Rs 4,000 crore in five years.

The major earners will be mini hydropower projects and pharmaceuticals, both areas he will be entering soon.

Other sectors include solar power, rural SEZs, satellite townships in the bifurcated Andhra Pradesh and shipping.

He says he takes three to six months to evaluate the feasibility of entering a new sector and reads books and makes site visits in preparation.

He also engages consultants from the Indian Institute of Management and the IndianSchool of Business, who charge up to Rs 70,000 for 24 hours.

Has he ever gone against their advice? “Well, I have not entered many sectors they advised me to,” he says. His aim, he adds, is to retire at 45 and devote the rest of his time and money to social work.

That appears to be a reasonable ambition.

 

Source::::Indulekha Aravind In Rediff.com

Natarajan