வாரம் ஒரு கவிதை …” மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு “

 

மல்லுக்கட்டும்  ஜல்லிக் கட்டு …
……………………………………………………
துள்ளி வரும் காளை …அதை அடக்கும்
துடிப்புடன்  களத்தில் இளம் காளையர் !
இது போர்க்களம் இல்லையே…ஒரு
வீர விளையாட்டுக்களம்  தானே !
ஜல்லிக்கட்டு …இந்த ஒரு பெயரே
உசுப்பிவிடுமே  தூங்கும் இளைஞரை !
காளை மாட்டுடன் மல்லுக்கட்டிய  ஒரு
வீரர் கூட்டம் இன்று ஜல்லிக்கட்டுக்காகவே
மல்லுக்கட்டும் ஒரு அவலம் !  ஜல்லிக்கட்டு
நடக்குமா நடக்காதா ..இந்த கேள்விக்குறி
ஜல்லிக்கட்டுக்கு மாத்திரம் அல்ல …ஒரு
கூட்டத்தின் குறி நம் ஜல்லிக்கட்டு மாட்டின் மீதே !
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை
படித்ததில்லையா நாம் ?  அதே கதைதான்
மீண்டும் அரங்கேற்றம் இன்று  ஜல்லிக்கட்டில் !
ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் சந்ததிக்கு
சத்தமில்லாமல் ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்
துடிக்கிறது ஒரு கூட்டம் இன்று… அவர்
ஆடும் ஆட்டம் ஒரு “சோதனை  ஓட்டம் “
இன்று… கேட்கவே வேதனை நமக்கு !
சோதனை எது  வந்தாலும்  சாதிக்க வேண்டும்
நாம் ! மல்லுக்கட்டி  மீட்க வேண்டியது வெறும்
ஜல்லிக்கட்டு போட்டியை  மட்டுமல்ல !
நம்  ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் வாழ்வையும்  அதன்
இன வளர்ச்சியையும்  சேர்த்துதான் !
மல்லுக்கட்டுவோம்  ஜல்லிக்கட்டுக்கு …ஜெயித்துக்
காட்டுவோம் இந்த  உலகுக்கு நாம் யார் என்று !
My Tamil Kavithai  as published  in  www.dinamani.com
Natarajan

வாரம் ஒரு கவிதை…” எதிர் காலம் ” !!!

 

எதிர்காலம்
————-
நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை  படைத்து இவ்வுலகு …சொன்னான்
வள்ளுவன் !  வள்ளுவன் வாக்கையும் வென்று
நான் காண்பேன் கதிரவனை நாளை காலை
என்னும்  நம்பிக்கை நம் எதிர்கால கனவுக்கு
நாம் போடும் அடித்தளம் …இன்று இல்லாவிட்டால்
என்ன …”நாளை  நமதே” என்னும் நம்  நம்பிக்கை
மாற்றும் நம் எதிர்காலத்தை ஒரு வசந்த காலமாக !
புரியாத புதிர் அல்ல நம் எதிர்காலம் …ராசி
பலன் சொல்வதும்  அல்ல நம் எதிர்காலம் !
நம் எதிர்காலம் நம் கையில்தான் ..கை ரேகையில் அல்ல !
“நாளை நமதே ” என்னும் நம்பிக்கை  நனவாக
தேவை இன்று நம் கடின உழைப்பு …
உழைப்பு …விடா முயற்சி ..தன்னம்பிக்கை
இம்மூன்றும்  அருமையான  வித்தாகும்  ஒரு
முத்தான எதிர் கால மலர் பூங்கா  பூத்துக் குலுங்க!
எதிர்காலம் நமக்கு ஒரு வசந்த காலமாக மலரட்டும் !
எதிர் மறை நினைவும் உணர்வும் நம்மை விட்டு விலகட்டும் !
Natarajan

” Why Fear When HE is there …” ?

 

A man had been on a long flight. The first warning of the approaching problems came when the sign on the airplane flashed on: “Fasten your seat belts.” Then, after a while, a calm voice said, “We shall not be serving the beverages at this time as we are expecting a little turbulence. Please be sure your seat belt is fastened.”
 
As he looked around the aircraft, it became obvious that many of the passengers were becoming apprehensive. Later, the voice of the announcer said, “We are so sorry that we are unable to serve the meal at this time. The turbulence is still ahead of us.”
 
And then the storm broke. The ominous cracks of thunder could be heard even above the roar of the engines. Lightening lit up the darkening skies and within moments that great plane was like a cork tossed around on a celestial ocean. One moment the airplane was lifted on terrific currents of air; the next, it dropped as if it were about to crash. The man confessed that he shared the discomfort and fear of those around him.
 
As he looked around the plane, he could see that nearly all the passengers were upset and alarmed. Some were praying. The future seemed ominous and many were wondering if they would make it through the storm. And then, he suddenly saw a girl to whom the storm meant nothing. She had tucked her feet beneath her as she sat on her seat and was reading a book. Everything within her small world was calm and orderly.
 
Sometimes she closed her eyes, then she would read again; then she would straighten her legs, but worry and fear were not in her world. When the plane was being buffeted by the terrible storm, when it lurched this way and that, as it rose and fell with frightening severity, when all the adults were scared half to death, that marvelous child was completely composed and unafraid.
 
The man could hardly believe his eyes. It was not surprising therefore, that when the plane finally reached its destination and all the passengers were hurrying to disembark, he lingered to speak to the girl whom he had watched for such a long time. Having commented about the storm and behavior of the plane, he asked why she had not been afraid. The sweet child replied:
 
“Sir, my Dad is the pilot and he is taking me home.”
 
Dear friends, this is a story, I received through internet. The implicit faith of this little child, set me thinking…. If each one of can have an implicit faith in our Supreme Father, we will have no reason to be afraid of any thing in life…
What do you think? 
Source…Author  unknown… input from a friend of mine
Natarajan

வாரம் ஒரு கவிதை…” பணத்தின் மறு பக்கம் “

 

பணத்தின்  மறுபக்கம் …
…………………….
செல்லாத பணம் இது ..வேண்டாம் இது எனக்கு இனிமேல்!
தன்  மதிப்பு இழந்த பணம் வெற்று  காகிதமானதே ஒரே நாளில் !
நன் மதிப்புடன்  வாழ்ந்த மனிதர் பலர் விதியால் தன் பொருள்
இழந்து அவர் வாழ்வின் மறுபக்கம் காணும்  சோகம்
பார்த்து  மனம் கலங்கியதுண்டு  நான் ! ஒரே ஒரு
வரியால்  தன் மதிப்பை இழக்கும்  வரை பணத்துக்கும்
தெரியாது அதன் மறுபக்கம் என்ன என்று …!
பணத்தின் மறுபக்கம் என்ன என்று  பார்க்கும் மனிதனுக்கு புரிய வேண்டும்
அவன் வாழ்வின்  மதிப்பு  அவன் சேர்க்கும் பணத்தால் அல்ல என்று !
Natarajan
7th Dec 2016

வாரம் ஒரு கவிதை…” செல்லாக் காசு ” !!!

 

செல்லாக் காசு
………….
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம் ஒரே ஒரு சொல்லால் செல்லாக் காசானதே !
பார்த்து நடந்து கொள்  தம்பி …புரிந்து கொள்ளவேண்டும்  நீ …
செல்வாக்கு ஒருவனுக்கு அவன் சேர்த்து வைக்கும் பணத்தால் அல்ல என்று !
 சுத்தமான  சொல்வாக்கு தரும் உனக்கு ஒரு தனி செல்வாக்கு !
கறை  படியா கரமும் நெறிபிறழா வாழ்வு முறையும் சேர்த்து வைக்கும்
உனக்கு எங்கும் என்றும்  செல்லுபடியாகும் ஒரு செல்வாக்கை !
காசு பணம் செல்லாது நாளை முதல் என்று சொல்ல முடியும் ! ஆனால் மாசற்ற
செல்வாக்கு செல்லாது இனிமேல் என்று சொல்ல முடியுமா யாரும் ?
யோசிக்க வேண்டும் நீ…  தம்பி !
Natarajan
http://www.dinamani.com  dated 21st Nov 2016

வாரம் ஒரு கவிதை …” பட்டதாரி ” !!!

 

பட்டதாரி …
………..
பட்டங்கள் பலப் பல …வாங்கிய பட்டம் தேனாய் இனிக்கும் பட்டதாரிக்கு  வேலை
ஒன்று  கட்டாயம் கிடைத்தால் ! வேலை  இல்லாவிட்டால் “வேலையில்லா “
என்னும் ஒரு புதிய பட்டம் மட்டும் கிடைக்கும்  அந்த பட்டதாரிக்கு !
சட்டம் ஒன்றும் இல்லையே பட்டம் வாங்கினால் வேலை உண்டு என்று !
சட்டம்  படித்த  பட்டதாரிக்கே  வேலை இல்லையே இன்று !
“வேலையில்லா பட்டதாரி” என்னும் ஒரு  வட்டத்தில் சுழலாமல்
திட்டம் போட்டு தன்  கையே தனக்கு உதவி என ஒரு தொழில்
செய்ய நீ முனையும் நேரம்  “வேலையில்லா ” பட்டதாரி உன்
வாழ்வில் ஒரு நல்ல நேரமாக மாறும் !
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்  கவலை உனக்கு
இல்லை இனி என ஒத்துக்கொள் என்னும் ஆன்றோர்
வாக்கு  இன்றும்  பொய்யா வாக்குதான் ! மறவாதே இதை நீ
தம்பி ! உனக்கு ஒரு வேலை நீ தேடுவதை விடுத்து “செயலி “
எத்தனை  எத்தனை  “செயல் ” படுத்த முடியும் உன்னால்   என்று
சற்றே மாற்றி யோசி தம்பி ! மாறலாம் நீ  ஒரு தொழில் முனைவோனாக !
உன் கணினியும்  கைபேசியுமே  உனக்கு மூலதனம் ! உன் தொழில்
நுட்ப அறிவும்  , “செயலி ” உருவாக்கும்  திறனும் மாற்றும்
உன்னை,  நீ  பலருக்கு வேலை கொடுக்கும் தொழில் பட்டதாரியாக !
வேலை இல்லா  பட்டதாரி இல்லை இங்கு இனிமேல் என்னும் ஒரு
நாளை மலர செய்வதே இனி உன் வேலை ! மாற்றி யோசிக்கும்
யாருக்கும் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் உண்டு கட்டாயம் !
Natarajan
8th nov 2016

Kalam’s brother turns 100, says takes life as it comes…

04th_kalam-brot_gl_3068500e

A.P.J. Mohamed Muthu Meera Maraikayar, elder brother of former president APJ Abdul Kalam.— Photo: L. Balachandar

Kalam wanted a year-long celebration after Mr. Maraikayar turned 100 years

Centenarian A.P.J. Mohamed Muthu Meera Maraikayar, elder brother of former President A.P.J. Abdul Kalam, looks at the elegantly-designed wooden casket staked with perfume bottles with a tinge of disappointment.

It was a special gift for him left behind by his younger brother.

Tears welled in his eyes as he takes a look at the wooden box of perfumes, bought by Kalam during his trip to Uttar Pradesh a couple of months before he died on July 27, 2015, as a special gift to be presented to his brother on the occasion of his 100th birthday on November 5.

Kalam never accepted gifts when he attended functions and when Uttar Pradesh Chief Minister Akilesh Yadav offered the perfumes, he accepted saying his brother was fond of perfumes and he would gift the box on his 100th birthday. Kalam paid a token sum before accepting the gift from Mr. Yadav, says Nazeema Maraikayar, daughter of the centenarian.

“We are celebrating the birthday without joy and with a sense of disappointment. It would have been joyous had my brother Abdul Kalam was around,” Mr. Maraikayar says in an interaction with the The Hindu at the ‘House of Kalam’ here on Thursday, recalling his close and affectionate association with the late president.

Kalam wanted a year-long celebration after Mr. Maraikayar turned 100 years but destiny had it that he could not celebrate the birthday at all. “God has given me the strength to overcome the absence of my brother,” he says.

Assisted by Ms. Nazeema, the centenarian recalls the grand family reunion they had in June 2014, when Kalam visited the family and celebrated his brother’s 98th birthday, five months ahead. It was a memorable event as more than 100 family members gathered and Kalam interacted with Mr. Maraikayar and other family members for more than three hours before flying back to Delhi.

Mr. Maraikayar, active, hale and healthy, is abreast with latest developments and enquires whether Chief Minister Jayalalithaa is still undergoing treatment at Apollo and whether DMK leader M. Karunanidhi has recovered from his illness. He flips through dailies and watches select programmes on television, says Ms. Nazeema.

The Chennai floods and the tsunami devastation brought him back the terrifying memories of 1964 cyclonic storm that wiped out Danushkodi, he says, recalling the devastation.

He was not awed by the latest development in science and technology. Discoveries bound to happen as long as mankind looked for changes. “I live my life as it comes and accept whatever happens,” Mr Maraikayar says, turning philosophical.

 Source….

Natarajan

சஷ்டி கவசம் பிறந்த கதையை தெரிஞ்சுக்கோங்க! …

Source..    Valaiyapettai R. Krishnan in http://www.vikatan.com

Natarajan
உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிந்த பெரும்பாலான இந்து மக்கள் இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் தினமும் ஒலிக்கும் திருமுருகனின் தெய்வீகத் தமிழ்ப்பாடல் அது. படிப்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும் மந்திர மறை நூல்! அது என்னவென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே!

mur_1_18161

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட…

என்று தொடங்கி கேட்கும் இடங்களிலெல்லாம் நம்மைத் திரும்ப உச்சரிக்கவைக்கும்; உள்ளத்திலும் உடலிலும் அதிர்வு தரும் ஆற்றல் மிக்க அழகு முருகனின் அருந்தமிழ்ப் பாமாலை. அதுதான் அனைவரும் அறிந்த கந்தர் சஷ்டி கவசம். இதனைப் பாடியவர் தேவராய சுவாமிகள் என்னும் அருளாளர். அவர் இக்கவசத்தைப் பாடிய பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.

ஒருமுறை, பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் சென்றார் தேவராயர். மலையைச் சுற்றி கிரிவலம் வந்தார். அங்குள்ள மண்டபங்களில் உடல்நோயால் பீடிக்கப்பட்டவர்கள். மனநோயால் வருந்துவோர், வறுமையால் வாட்டமுற் றோர் எனப் பலர் அழுவதும் அரற்றுவதும் கண்டு மனம் வருந்தினார். அவர்கள் அனைவரும் நலம்பெற ஞானபண்டிதன் வழிகாட்ட வேண்டும் என்று மனத்தில் உறுதிகொண்டார். பழநியாண்டவர் கோயில் மண்டபத்தில் துயில் கொண்டார். அன்றிரவு அவரது கனவில் பழநியப்பரமன் பிரசன்னமானார்.

mur_2_18409

‘உன் எண்ணம் ஈடேற அருளினோம்.பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகிலுள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடு!’’ என்று ஆசியளித்து கந்தவேள் மறைந்தார்.

உடனே பரவசத்துடன் எழுந்தார் தேவராயர். ‘‘அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!’’ என்று ஆடிப்பாடி மகிழ்ந்தார். மயில்மேல் வலம் வரும் அயில் வேலனைப் போற்றுவோர்பால் மறலியும் அணுகமாட்டான் என்று முருகன் திருவருளை வியந்து போற்றி பாமாலை சூட்டியருளினார். அதுதான் 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம் என்னும் புகழ்பெற்ற தோத்திரம்.

mur_6_18306

mur_3_18027

பாலதேவராய சுவாமிகள்

கந்தர் சஷ்டி கவசம் பாடிய தேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர், அவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை என்றும், அவர் கணக்கர் வேலை பார்த்தவர் என்றும் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் சில நூல்களில் குறிப்புகள் உள்ளன.

வீராசாமிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லாமல் முருகன் திருவருளால் தேவராயர் பிறந்தார். நன்கு கல்வி கற்று வியாபார நிமித்தமாக பெங்களூரு சென்று அங்கு தமது வணிகத் தொழிலை மேற்கொண்டார். திருவாவடுதுறை ஆதினத்தில் பெரும் புலவராகத் திகழ்ந்த திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பெங்களூர் வந்தபோது தேவராயர் அவரைத் தமது இல்லத்துக்கு அழைத்து உபசரித்து மகிழ்ந்தார்.

பிள்ளையவர்களிடம் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாம் இயற்றிய கவிதைகளை மகாவித்வானிடம் காட்டி பிழை திருத்தம் செய்துகொள்வாராம். தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேட மலை மாலை முதலிய நூல்களை தேவராயர் இயற்றியதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் எழுதியுள்ள மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வரலாற்றில் தேவராயர் அவரது மாணவர் என்பதற்கான குறிப்பு எதுவும் காணப்பெறவில்லை.

mur_4_18407

சஷ்டிக்கவசம் பாடப்பட்டது எந்த ஊரில்?

தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசம் பாடியுள்ளார் என அறிய முடிகிறது. தற்போது அனைவரும் பாராயணம் செய்யும் கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது என்று கூறிகிறார்கள். ஆயினும் இக்கவசத்தின் நிறைவுப் பகுதியில் ‘பழநிமலையின் மீது’ கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிறு  குழந்தை வடிவாகிய முருகப் பெருமானது செம்மையான திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்’ (பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி (225, 226) என்று பாடியுள்ளார். எனவே இக்கவசம் பழநியில் பாடப்பெற்றது என்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றையும், இவ்வரிகளையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.

மேலும் ‘எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய் (156, 157) மைந்தன் என்மீது உன் மனமகிழ்ந்து அருளித் தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்! (198, 199) எனைத்தடுத்து ஆட்கொள் எந்தனது உள்ளம் மேவிய வடிவுறும் ‘வேலவா போற்றி’ (227,228) என்ற வரிகள் மூலம் பழநிப் பரமன் ஆட்கொண்டு இக்கவசம் பாட வைத்ததை உறுதியாகக் கூறலாம். இப்பாமாலையை சிரகிரி எனப்படும் சென்னிமலையில் அரங்கேற்றியதாகச் சிலர் கூறுவர். ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் காணப்பெறவில்லை.

mur_5_18101

கவலைகள் தீர்க்கும் கந்தசஷ்டி கவசம்

இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறு முறை ஓதி ஜபம் செய்து திருநீறணிய எல்லா நோயும் நீங்கும்; நவக்கிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்வர்; என்றும் இன்பமுடன் வாழ்வர் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் தேவராயர்.
‘சரவணபவ’ எனும் திருநாமம் இந்த கந்தர்சஷ்டி கவசத்தின் மூல மந்திரமாகும். இந்நூலின் முதல், இடை, கடை (1, 16, 162, 237) பகுதிகளில் இந்த மூலமந்திரத்தைப் பொருத்தி இதனைப் பாடியுள்ளார் என்று கருத முடிகிறது. முருகனடியார்கள் அனைவரும் விரும்பிப் படிக்க வேண்டும் என்பதற்காக வள்ளியம்மையாரின் குழந்தையாகிய தேவராயன் இயற்றியதாகக் (கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை) குறிப்பிடுகிறார். கவசத்தின் ஒவ்வோர் அடியும் கந்தசுவாமியின் திருக்கையிலுள்ள வேலைப் போன்றது.
ஞானாசாரியார் ஒருவரின் மூலம் அந்த அடிகளின் உண்மைப் பொருள்களைத் தெளிவாக உணரலாம். உடல், உள்ளம், உயிர் அனைத்துக்கும் வேலே கவசமாக உள்ளது. கந்தர் சஷ்டி கவசம் மந்திர மறை நூல் என்பது, பாராயணம் செய்து பலன் அடைந்தவர்களது அனுபவ உண்மையாகும்.

mur_7_18532

 

 

 

 

மீனாட்சி அம்மாள்: சமையல் குறிப்புகளின் முன்னோடிக் கலைஞர்!

samayal_3062043f

இது என்ன அநியாயம்? சமையல் கலையைப் புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்ள வேண்டுமா? சமையல், பெண்களின் இயல்பான குணங்களில் ஒன்று என்றுதானே நினைத்திருந்தோம். சமையல் தெரியாத பெண்களும் இருக்கிறார்களா என்று அதிர்ந்துபோனார்கள் அன்றைய மக்கள். 70 ஆண்டுகளுக்கு முன்பு சொப்பு வைத்து விளையாடும் பருவத்திலேயே சிறுமிகள், சமையலைக் கற்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படிச் சமையலைக் கற்றவரில் ஒருவர்தான் மீனாட்சி அம்மாள்.

19 வயதில் திருமணம். 22 வயதில் கணவரை இழந்தார். தனியாளாகக் கைக்குழந்தை, மச்சினர், மாமியார் என்று குடும்பத்தைப் பராமரித்துவந்தவர், சமையலிலும் பிரமாதப் படுத்தினார். மீனாட்சி அம்மாளின் கைப்பக்குவத்துக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் இருந்தது. இந்தியாவின் வெவ்வேறு பாகங்களில் பரவியிருந்த அவரது உறவினர்கள், மீனாட்சி அம்மாளிடம் சமையல் குறிப்புகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் சளைக்காமல் எழுதிக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

இவரது உறவினர் கே.வி.கிருஷ்ண சாமி ஐயர், இப்படி ஒவ்வொருவருக்கும் சமையல் குறிப்பு எழுதிக் கொடுப்பதற்குப் பதில், ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால் எல்லோருக்கும் பயன்படுமே என்று ஆலோசனை வழங்கினார். மீனாட்சி அம்மாளும் புத்தகம் எழுதினார். சமையல் புத்தகம் என்றதும் பலரும் இதை யார் வாங்கப்போகிறார்கள் என்று கிண்டல் செய்தார்கள். பதிப்பகங்கள் எதுவும் புத்தகம் வெளியிட முன்வரவில்லை. தானே புத்தகத்தைக் கொண்டுவர முடிவு செய்தார் மீனாட்சி அம்மாள். தன் நகைகளை விற்றார். தானே புத்தகத்தைப் பதிப்பித்தார்.

1951-ம் ஆண்டு தமிழின் முன்னோடி சமையல் புத்தகம், ‘சமைத்துப் பார்’ வெளிவந்தது. புத்தகத்துக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று மீனாட்சி அம்மாளே எதிர்பார்க்கவில்லை. புத்தகம் குறித்துப் பலரும் சிலாகித்துப் பேச ஆரம்பித்தனர். விற்பனை பெருகியது. திருமணமாகி வெளிநாடு செல்லும் பெண்கள், விசாவை மறந்தாலும் மீனாட்சி அம்மாள் புத்தகத்தை மறக்கவில்லை. ஐந்தே ஆண்டுகளில் தன் புத்தக வருமானத்தை வைத்து, மயிலாப்பூரில் ஒரு வீட்டை வாங்கினார் மீனாட்சி அம்மாள்.

மிளகாய்த் தூள், சாம்பார்ப் பொடி என்று சொன்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்குவத்தில் வைத்திருப்பார்கள். அவற்றால் மீனாட்சி அம்மாளின் சுவையைக் கொடுக்க முடியாது. அதனால் பொடி வகைகள் எல்லாவற்றையும் சேர்த்து அடுத்த புத்தகத்தைக் கொண்டுவந்தார். அதற்கும் அமோக வரவேற்பு! விழாக்கள், திருமணம் போன்றவற்றுக்கு எப்படித் தயாராவது, பண்டிகைக் கால உணவுகள் போன்ற பல விஷயங்களை வைத்து, அவர் மறைவுக்குப் பின்பு மூன்றாவது புத்தகம் வெளிவந்தது.

அதற்குப் பிறகு சமையல் புத்தகங்களைப் பலரும் எழுத ஆரம்பித்தனர். விதவிதமான சமையல் புத்தகங்கள் வெளிவந்தன. சைவச் சமையல், அசைவச் சமையல், வட்டாரச் சமையல், கிராமத்துச் சமையல், மாநிலச் சமையல், அயல்நாட்டுச் சமையல், மைக்ரோவேவ் சமையல், சிறுதானியச் சமையல் என்றெல்லாம் தினுசு தினுசாக உணவு வகைகள் உருவாகிக்கொண்டும், புத்தகங்கள் வெளிவந்துகொண்டும் இருக்கின்றன.

இன்றளவும் ‘சமையல் புத்தகமா?’ என்று இளக்காரமாகப் பார்க்கப்பட்டாலும் விற்பனையில் முதலிடம் சமையல் புத்தகங்களுக்குத்தான். சமையல் குறிப்புகளை இணைப்புப் புத்தகங்களாக வழங்கும்போது பத்திரிகைகளின் விற்பனை கணிசமாக அதிகரிப்பதால் சமையலுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துவருகிறார்கள். தொலைக்காட்சி, யூ டியூப், ஃபேஸ்புக் என்று சமையல் கலை அடுத்தடுத்த பரிணாமங்களை அடைந்துவருகிறது. அதே போல மீனாட்சி அம்மாளின் புத்தகங்களும் மாற்றத்தை ஏற்று, நவீனமாகிக்கொண்டே வருகின்றன.

மீனாட்சி அம்மாள் காலத்தில் கூட்டுக் குடித்தனமாக இருந்தனர். ஒரு வீட்டில் ஏராளமானவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஏற்ப அளவுகளை அவர் கொடுத்திருக்கிறார். கொட்டைப் பாக்கு அளவு புளி, குழிக் கரண்டி எண்ணெய், ஓர் ஆழாக்கு அரிசி போன்ற பதங்கள் எல்லாம் இப்போது வழக்கில் இல்லை. நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கான அளவுகள், தற்காலத்தில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்தி, புத்தகங்களை நவீனப்படுத்தி, கொண்டுவந்திருக்கிறார் அவரது பேத்தி ப்ரியா ராம்குமார்.

“சமைத்துப் பார் ஆங்கிலத்தில் வெளிவந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ், ஆங்கிலம் தவிர, மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் புத்தகங்கள் கொண்டுவந்தோம். நாங்கள் விளம்பரம் எதுவும் செய்வதில்லை. வாங்கிப் பயன்படுத்தியவர்களின் வாய்மொழி மூலமாகவே 65 ஆண்டுகளாக விற்பனையில் முன்னிலையில் இருக்கின்றன. இதுவரை 45 பதிப்புகளைக் கண்டுவிட்டன. அடுத்து மின்புத்தகங்களாகக் கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறோம்” என்கிறார் ப்ரியா ராம்குமார்.

“சித்திரம், சிற்பம், சங்கீதம் போல சமையலும் உயரிய கலை. பல வண்ணங்களைக் குழைத்து, அற்புதமான சித்திரத்தைத் தீட்டுவது போல பல பொருட்களைச் சேர்த்து, பக்குவப்படுத்தி, ஒப்பற்ற உணவுப் பண்டத்தை உருவாக்குகிறார்கள் சமையல் கலை வல்லுனர்கள்” என்று சொன்ன மீனாட்சி அம்மாள், சமையல் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பதிப்பாளராwகவும் வெற்றி பெற்று, பிறருக்கும் வழிகாட்டியிருக்கிறார்.

மனிதர்களுக்குப் பசியும் ருசிக்கான தேடுதலும் இருக்கும் வரை சமையல் கலைக்கான தேவையும் இருந்துகொண்டே இருக்கும். காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டுவரும் மீனாட்சி அம்மாளின் புத்தகங்கள், இன்னும் பல தலைமுறை களுக்குச் சமையல் கலையைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்!

Source….S.Sujatha…in http://www.tamil.thehindu.com

Natarajan

Message for the Day…” How do you remove the darkness within your heart …” ?

 

To light a lamp, you need four elements – a container, oil, wick and a match box. If any one of them are missing, you cannot light the lamp. This lit lamp can, however, remove only the external darkness. How do you remove the darkness within the heart? It can be removed only by the Light of Wisdom (Jnana Jyoti). How to light the spiritual light, the light of wisdom? It needs four elements too. Detachment (Vairagya) is the container. Devotion (Bhakti) is the oil. One-pointed concentration (Ekagrata) is the wick. Knowledge of the Supreme Truth (Jnana) is the match stick. Without all the four, the light of Spiritual Wisdom cannot be got. Of the four, the primary prerequisite is the spirit of renunciation (Vairagya). Detachment is absence of attachment to the body. The ego-feeling, which makes one think of ‘I’ all the time, should be given up. Without this detachment, knowledge of scriptures is of no avail.